Just In
- 41 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த கோடுகள் நெற்றியில் இருப்பவர்கள் நீண்ட ஆயுளோடு ராஜயோகத்துடன் வாழ்வார்களாம்.. உங்க நெற்றியில் இது இருக்கா?
நம் கை நம் தலைவிதியை வரையறுப்பது போல், நெற்றி நம் எதிர்காலத்தையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது.
நம் கை நம் தலைவிதியை வரையறுப்பது போல், நெற்றி நம் எதிர்காலத்தையும் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது. வேத ஜோதிடத்தின் படி, இந்த கோடுகள் அனைத்து கிரகங்களாலும் பாதிக்கப்படுகின்றன. சாமுத்திர சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருவர் நெற்றியின் 7 வரிகளைப் பார்த்து அவர்களின் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை அறிந்து கொள்ளலாம்.
நெற்றிக் கோடுகளின் ஜோதிடம் அல்லது மெட்டோபோஸ்கோபி என்பது நெற்றியில் உள்ள வடிவங்கள் மற்றும் கோடுகள் மூலம் ஒரு நபரின் செயல்கள் மற்றும் எதிர்காலத்தைப் படித்து முன்னறிவிப்பதில் கவனம் செலுத்துகிறது. நெற்றியில் உள்ள இந்த கோடுகள் ஒரு நபரின் ஆளுமை மற்றும் நடத்தையைக் குறிக்கின்றன. உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகள் மற்றும் சின்னங்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வட்டக்கோடு
ஒருவருக்கு நெற்றியில் வட்டக் கோடு அல்லது கண்களுக்கு இடையே நேர்கோடு இருந்தால், அவர்கள் எதிர்காலத்தில் வெற்றியாளர்களாக மாறுவார்கள். அவர்கள் சிறந்த பேச்சாளர்கள், வலுவான மற்றும் கவர்ச்சிகரமானவர்கள்.
புருவத்திற்கு இடையேயான கோடுகள்
ஒரு நபர் சிரிக்கும்போது, இரண்டு புருவங்களின் நடுவிலும் கோடுகள் உருவாகின்றன என்றால், அது அவர்களின் இரக்க, ஆன்மீக நடத்தையின் குறியீடாகும். அவர்கள் சாத்வீக குணங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் அனைவருக்கும் உதவுகிறார்கள்.
ஸ்வாதிக் அல்லது திரிசூல முத்திரை
ஒரு நபரின் நெற்றியில் மேல்நோக்கி கோடுகள் அல்லது திரிசூலம் அல்லது ஸ்வஸ்திகா முத்திரை இருந்தால், அவர்கள் ஒரு ஆல்-ரவுண்டரின் குணங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் செல்வம், ஆரோக்கியமான குழந்தை மற்றும் நல்ல துணை மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
MOST READ: இந்த 5 ராசி ஆண்களுக்கு சிறிய வயதிலேயே செல்வந்தராகும் அதிர்ஷ்டம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
பிறை வடிவம்
சனி மற்றும் குரு கோடுகள் மேல் நெற்றியில் பிறை வடிவத்தை உருவாக்கினால், அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. சூரியன் மற்றும் சந்திரன் கோடுகளின் இணைப்பால், அவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்கள்.
உடையாத கோடுகள்
நெற்றியில் உடைக்கப்படாத நான்கு கோடுகள் இருந்தால், அந்த நபரின் வயது 90 ஐ விட நீண்ட காலம் வாழ்கிறார் என்று கூறப்படுகிறது.
வளைந்த கோடு
ஒரு நபரின் நெற்றியில் ஒரே ஒரு ஆழமான வளைந்த கோடு இருந்தால், அத்தகைய நபர் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருப்பார்கள். அவர்கள் கனிவான இதயம் மற்றும் தாராளமான நடத்தை கொண்டவர்கள்.
MOST READ: சர்க்கரை நோயின் இந்த அசாதாரண அறிகுறிகளை முன்கூட்டியே கவனிச்சா பல ஆபத்துக்களை தவிர்க்கலாம் தெரியுமா?
ஏழு கோடுகள்
ஜோதிட சாஸ்திரப்படி நெற்றியில் ஏழு கோடுகள் உள்ளன. இந்த ஏழு கோடுகள் ஏழு கிரகங்களைக் குறிக்கின்றன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. நெற்றியில் 3 முழுமையான மற்றும் தெளிவான கோடுகள் இருந்தால், அந்த நபர் பணக்காரராகவும், செழிப்பாகவும் மாறுகிறார். மேலும், ஒரு நபருக்கு மெலிந்த அல்லது வெற்று நெற்றியாக இருந்தால், அவர்கள் வறுமையில் வாழ்வார்கள்.