Just In
- 1 hr ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 6 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மேஷத்தில் உள்ள ராகுவால் உருவான திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும்..
ராகு மேஷ ராசிக்கு சென்றதால் 3 ராசிகளில் திரிகோண ராஜயோகம் உருவானது. இந்த யோகம் ஒரு சுபயோகம். ஆகவே இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் வெற்றியைக் காண்பார்கள்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்கள் ராசியை மாற்றுவதால், சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சில ராசிக்காரர்கள் கெடு பலன்களையும் பெறலாம். அதில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார்.
ராகு மேஷ ராசிக்கு சென்றதால் 3 ராசிகளில் திரிகோண ராஜயோகம் உருவானது. இந்த யோகம் ஒரு சுபயோகம். ஆகவே இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் வெற்றியைக் காண்பார்கள். மேலும் நல்ல பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியில் திரிகோண ராஜயோகம் உருவாவதால் மிதுன ராசிக்காரர்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் வெற்றியைக் காண்பார்கள். ராகு மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் உள்ளார். இந்த வீடு வருமானம் மற்றும் லாப வீடாகும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய வருமானத்தினால் நிதி நிலை வலுவடையும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பணம் சம்பாதிப்பாற்கான வாய்ப்புக்கள் அமையும். மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் வணிகத்தின் கிரகமாக கருதப்படுகிறார். எனவே இக்காலத்தில் வணிகத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சிறந்த காலம்.
கடகம்
ராகு பெயர்ச்சியால் உருவான திரிகோண ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இந்த வீடு வேலை மற்றும் தொழில் வீடாகும். இந்த ராகு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்துடன் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது ஏற்ற காலம். இக்காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியில் திரிகோண ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ராகு பெயர்ச்சியால் மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இது பேச்சு மற்றும் பணத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காணலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தினால் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொற்காலமாக இருக்கும்.