Just In
- 39 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மகாசிவராத்திரி அன்று இதில் ஒன்றை வைத்து சிவனை வழிபடுவது உங்கள் அனைத்து கஷ்டங்களையும் போக்குமாம்...!
மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. சிவபெருமானை வழிபடுவதற்கு அனைவரும் தயாராகி விட்டனர். இந்த சிறப்பு நாளில் சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. சிவபெருமானை வழிபடுவதற்கு அனைவரும் தயாராகி விட்டனர். இந்த சிறப்பு நாளில் சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். மகாசிவராத்திரி விரதம், சிவனுக்கு படைக்கப்படும் பொருட்கள் என இந்த நாளில் நீங்கள் செய்யும் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த நிலையில் நீங்கள் சிவபெருமானுக்கு வைத்து வழிபடும் சில பொருட்கள் அவரின் அருளை உங்களுக்கு முழுமையாக பெற்றுத்தரும். இந்த மகாசிவராத்திரியில் நீங்கள் சிவனுக்கு என்னென்ன விஷயங்களை வைத்து வழிபடுவது நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி
பதப்படுத்தப்படாத வெள்ளை அரிசியை சிவனுக்கு வைத்து வழிபடுவது அவரைப் பிரியப்படுத்தும் என்றும் உங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
எள்
எள் விதைகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்றாகும். மகாசிவராத்திரி அன்று இந்த விதைகளை வைத்து சிவபெருமானை வழிபடுவது உங்கள் குடும்பத்திற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
கோதுமை
கோதுமை இன்று இந்திய வீடுகளில் அதிகம் நுகரப்படும் தானியங்களில் ஒன்றாகும். மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு கோதுமை வைத்து வழிபடுவது உங்கள் வீட்டில் எப்போதும் வறுமையை நுழையாமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
MOST READ: உங்க ராசிப்படி பெற்றோராக நீங்கள் செய்யப்போகும் தவறு என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
குளிர்ந்த பால்
சிவனுக்கு சர்க்கரையுடன் கலந்த குளிர்ந்த பாலை வழங்குவது ஒரு நபரை புத்திசாலித்தனமாக்குகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. நீங்கள் பாலை கொதிக்க வைக்காமல் குளிர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்யுங்கள்.
கரும்புச்சாறு
மகாசிவராத்திரி அன்று கரும்புச்சாறு வைத்து ஈசனை வழிபடுவது சிறப்பானது. கரும்புச்சாறில் வேறு எதுவும் சேர்க்காமல் இருப்பது நல்லது. பழைய கரும்புச்சாறை வைத்து வழிபடாமல் இருக்க வேண்டியது அவசியம்.
தேன்
உங்கள் குடும்பத்தில் யாராவது காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், தூய்மையான, நீர்த்த தேனுடன் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வது அவரை முழுமையாக குணப்படுத்தும்.
வெண்ணெய்
பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சுத்தமான வெண்ணெய் அல்லது நெய்யை வழங்குவது உடலில் உள்ள அனைத்து பலவீனங்களையும் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள் இதைச் செய்ய வேண்டும்.
மல்லிகை இலைகள்
மல்லிகை மலர் மட்டுமல்ல, மல்லிகை இலைகளும் சிவபெருமானுக்கு பிடித்தது கூறப்படுகிறது. இந்த மகாவராத்திரிக்கு சிவபெருமானுக்கு சில மல்லிகை இலைகளை வழங்குங்கள்.