Just In
- 3 hrs ago
சுவையான... முட்டைக்கோஸ் வடை
- 4 hrs ago
உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 4 hrs ago
இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 6 hrs ago
உங்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாம சூப்பரா இயங்க...நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!
Don't Miss
- Finance
356 பில்லியன் புதிய முதலீடு, 80,000 புதிய வேலைவாய்ப்புகள்: சாம்சங் நிறுவனத்தின் மெகா திட்டம்!
- News
"ஒற்றைக் காலில்.. குதித்து குதித்து பள்ளி செல்லும் சிறுமி" ஆர்வத்துக்கு சல்யூட் - குவியும் பாராட்டு!
- Movies
ஊரே சிரிக்கிது.. ஊரே சிரிக்கிது அப்பப்பா.. ‘வீட்ல விசேஷங்க‘ டிரைலர் ரிலீஸ் !
- Automobiles
உலகின் முதல் பறக்கும் கார்களுக்கான ஏர்போர்ட்... எங்க இருக்கு? எப்படி இருக்கும்?.. இதோ சுவாரஷ்யமான தகவல்கள்!
- Sports
"முக்கிய வீரரே இல்லை".. டாஸில் லக்னோ அணி எடுத்த ரிஸ்க்.. ஆர்சிபிக்கு இதுதான் சரியான நேரம்!!
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க... இல்லனா சிவனின் கோபத்துக்கு ஆளாகிருவீங்க...!
மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. இந்துக்களின் பண்டிகையில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிவபெருமானை தரிசிக்கவும், வழிபடவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் அருகிலுள்ள சிவ ஸ்தலங்களில் கூடும் மாபெரும் நிகழ்வாக மகாசிவராத்திரி இருக்கிறது.
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுபவர்கள் அந்த ஆண்டு முழுவதும் சிவபெருமானின் அருளை பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நாளில் ஈசனை மகிழ்விக்க செய்ய வேண்டிய செயல்கள் பல உள்ளது, அதேபோல நமக்கேத் தெரியாமல் நாம் செய்யும் சில செயல்கள் ஈசனின் கோபத்தையும் தூண்டும். அதன்படி மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கருப்பு உடை அணிய வேண்டாம்
கருப்பு வலிமையான நிறமாக இருக்கலாம் ஆனால் மகாசிவராத்திரி பூஜைகளுக்கு இது நல்லதல்ல. இந்து சடங்குகளில் பெரும்பாலானவை பக்தர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிவதைத் தடைசெய்கின்றன. எனவே, நீங்கள் விரதம் இருந்தால் அல்லது சிவன் கோவிலுக்குச் செல்கிறீர்கள் என்றால், சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்களைத் தேர்வுசெய்து அணிந்து கொள்ளுங்கள்.

சில உணவுகளைத் தவிர்க்கவும்
இந்த நாளில், பக்தர்கள் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. விரதம் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் பக்தர்கள் தண்ணீர், பழங்கள், பால் மற்றும் தேநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

வயதானவர்களை அவமதிக்காதீர்கள்
இது எல்லா நேரங்களிலும் செய்ய வேண்டிய ஒன்றாகும், இருப்பினும் மகாசிவராத்திரி அன்று வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவ கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் மோதல்களைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
MOST READ: யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!

சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்
தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் மகாசிவராத்திரிக்கு ஒரு சிறப்பு விதி உள்ளது. சிவலிங்கத்திற்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இது துரதிர்ஷ்டத்தையும் நோய்களையும் அழைக்கிறது என்று நம்பப்படுகிறது.

சிவபெருமானுக்கு துளசி வைத்து வழிபடாதீர்கள்
பண்டைய இந்து வேதங்களின்படி, சிவபெருமானுக்கு ஒருபோதும் துளசி வழங்கக்கூடாது. காரணம், துளசி விஷ்ணுவுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு நல்ல பிரசாதமாக கருதப்படுகிறது. எனவே சிவபெருமான் பூஜைகளிலிருந்து துளசி தடை செய்யப்பட்டுள்ளது.

மஞ்சளை பயன்படுத்த வேண்டாம்
சிவபெருமான் ஆண் சாரம் அல்லது ‘புருஷ் தத்வா' உருவகமாக இருக்கும்போது, மஞ்சள் பெண்களுக்கான சாரமாக கருதப்படுகிறது. எனவே சிவபெருமானை வழிபடும் போது ஒருபோதும் மஞ்சள் பயன்படுத்தக்கூடாது.

சம்பா மற்றும் கேதகி மலர்களை பயன்படுத்த வேண்டாம்
புராணங்களின் படி, சிவபெருமான் இந்த இரண்டு மலர்களை சபித்திருந்தார், எனவே சம்பா மற்றும் கேதகி இரண்டையும் சாதாரண நாட்களின் சிவபூஜையில் கூட பயன்படுத்தக்கூடாது.