Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 5 ராசிக்காரங்க இந்த விஷயங்கள மறைப்பதில் கில்லாடியாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ரிஷப ராசி நேயர்கள் ஒரு நபரை நம்பலாம் என்று 100% உறுதியாக இருந்தால் தவிர, அவர்கள் எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். ரிஷப ராசிக்காரர்கள் மக்களை நம்புவதில் மிகுந்த நம்பிக்கையின்மையுடன் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்தனி குணநலன்கள் இருக்கும். இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் வெவ்வேறானவர்கள். சிலர் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் வசதியாக இருப்பதில்லை. அவர்கள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளாதபடி தங்கள் உணர்வுகளை தங்களுள்ளே அடக்கி வைத்திருக்கிறார்கள். அத்தகையவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைப்பதில் வல்லுநர்களாக இருக்கிறார்கள்.
ஒருவரின் உணர்வுகளைத் தொடர்புகொள்வது எல்லா உறவுகளிலும் இன்றியமையாததாக இருப்பதால் அவற்றைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, தங்கள் உணர்ச்சிகளை மறைப்பதில் வல்லுனர்களாக இருக்கும் சிறந்த ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் ஒரு நபரை நம்பலாம் என்று 100% உறுதியாக இருந்தால் தவிர, அவர்கள் எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். ரிஷப ராசிக்காரர்கள் மக்களை நம்புவதில் மிகுந்த நம்பிக்கையின்மையுடன் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களால் காயப்படுத்த முடியாது. இல்லையெனில், அவர்கள் அனுபவித்த காயம் மற்றும் வலியைப் பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்னால் எதை வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய விஷயங்களை தங்களுடனே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பாதிக்கப்படக்கூடிய பக்கத்தைக் காட்ட மாட்டார்கள். ஏனெனில், காயப்படுவோம் என்ற அவர்களின் பயம் மிகவும் வலுவானது. இந்த ராசிக்காரர்கள் மனம் உடைந்து வேதனை படுவதை விட தனியாக இருப்பதை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைப்பதிலும் நல்லவர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்கள் உறவுகளில் தகவல்தொடர்புக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக தங்கள் உணர்வுகளை தன்னுள்ளே புதைத்துக்கொள்வார்கள். சில சமயங்களில், அவர்கள் உணர்ச்சியற்றவர்களாக உணர்கிறார்கள் மற்றும் அவர்கள் எப்படி, எதைத் தங்கள் நெருங்கியவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. எப்போதாவது ஒருமுறை தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் அவற்றை மறைத்தே வைத்திருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி மிகவும் சிக்கலான இராசி அறிகுறிகளில் ஒன்றாகும். அவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், தங்கள் எண்ணங்களை வேறு யாரையும் எளிதில் கண்டுபிடிக்க அனுமதிக்க மாட்டார்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவர் தங்கள் வாழ்க்கையில் நுழையும் வரை அவர்கள் தங்கள் உணர்வுகளை மறைத்து வைத்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலில் நம்பிக்கை வைப்பார்கள்.
கும்பம்
உணர்வுகள் மற்றும் உறவுகள் பற்றிய விவாதங்கள் எழும்போது கும்ப ராசிக்காரர்கள் மிகவும் பதற்றமடைகிறார்கள். அவர்கள் பார்வைக்கு அசௌகரியமாக உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் ஆளுமையின் இந்த பகுதியை மற்றவர்களிடமிருந்து மறைக்க விரும்புகிறார்கள். யாராவது இந்த ராசிக்காரர்களிடம் பேச முயற்சித்தாலும், அவர்கள் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக மற்றவர் மீது கவனம் செலுத்த முயற்சிப்பார்கள்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை நெருங்கியவர்களிடம் வெளிப்படுத்துவதில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை சுதந்திரமாக தொடர்பு கொள்ளாவிட்டால், அவர்களின் உறவுகள் மிகவும் பாதிக்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை மக்களிடம் மிகவும் எளிதாக வெளிப்படுத்துவார்கள்.