Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 18 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 21 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகம காரணத்த தெரிஞ்சிக்கோங்க!
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய். தேங்காய் இல்லாத சுப நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். சில நேரங்களில் துக்க காரியங்களுக்கு கூட தேங்காயை பயன்படுத்துகிறார்கள். தேங்காய் நம் உணவில் மட்டுமல்லாது சடங்குகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. புதிய வீடு கட்டியிருந்தாலும் சரி, கார் வாங்கினாலும் சரி, புதிய தொழில் தொடங்கினாலும் சரி, சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் இந்து பாரம்பரியம் இந்தியா முழுவதும் அப்படியே உள்ளது. தேங்காய் உடைக்கும் செயல் வெறும் சடங்கு மட்டுமல்ல, முழு உணர்ச்சியும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவதற்கு காரணம் இருக்கிறது.
தேங்காய் உடைக்கும் சடங்கு செழிப்பை ஈர்க்கும் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை கூட தீர்க்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த சடங்குடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வு மற்றும் நடைமுறைக்கு பின்னால் உள்ள சரியான காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?
தேங்காயை உடைத்து கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதன் அடையாளச் செயலாகும். திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள், புதிய வீடு, கார் அல்லது நிலம் வாங்குதல் அல்லது புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றின் போது தேங்காய் உடைப்பது இந்து பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் வேப்ப மரத்தைப் போலவே ஒரு தென்னை மரமும் மங்களகரமானது. தென்னை மரத்தை அழிப்பவன் தானே அழிந்துவிடுவான் என்று சொல்லும் அளவுக்கு தென்னை முக்கியமானது.

வரலாற்று இணைப்பு
புராணங்களின்படி, விஷ்ணு பூமியில் அவதரித்தபோது, அவர் மனிதகுலத்தின் நலனுக்காக லட்சுமி தேவி, ஒரு தென்னை மரம் மற்றும் காமதேனு பசுவை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களின் அடையாளமாக தேங்காய் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தேங்காய் உடைப்பதற்கான காரணங்கள்
'தேங்காய் உடைத்தல்' சடங்கில் ஈடுபடும் ஒவ்வொரு அடியும் அதனுடன் ஆழமான அர்த்தம் இணைக்கப்பட்டுள்ளது. முதல் படியாக, தென்னையிலிருந்து உமி கிழிக்கப்படுகிறது. இது நாம் விட்டுவிட வேண்டிய உள் ஆசைகள் மற்றும் பொருள் ஆசைகளை குறிக்கிறது. அடுத்து, தேங்காயை தரையில் அடித்து உடைப்பது நாம் உடைக்க வேண்டும் என்ற அகங்காரத்தை குறிக்கிறது.

தேங்காய் பிரசாதம்
தேங்காய் உடைந்ததும் அதிலிருந்து தேங்காய் தண்ணீர் வெளியேறும். இது மனதிலிருந்தும் உடலிலிருந்தும் வெளியேற வேண்டிய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் குறிக்கிறது. தேங்காயின் மென்மையான உள் பகுதி அமைதியைக் குறிக்கிறது. இதனால் தேங்காய் மக்களிடையே பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த்தும்
தேங்காய் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பச்சை தேங்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
தேங்காய் மட்டுமல்ல, அதன் தண்ணீரும் ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது. எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துவது முதல் எடை இழப்புக்கு உதவுவது வரை, கோடையில் நீரேற்றமாக இருக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட பானம் தேங்காய் தண்ணீர். தேங்காய் நீர் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், சிறுநீரக கல் உருவாவதை தடுக்கவும், மூட்டு வலியை குறைக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கூட நிர்வகிக்கவும் முடியும்.