Just In
- 1 hr ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகளாக இருப்பார்களாம்... இவங்கள சமாளிப்பது ரொம்ப கஷ்டமாம்!
- 4 hrs ago
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
Don't Miss
- News
என் கேரக்டரே இது தான்! எதைப்பற்றியும் கவலைப்படும் ஆள் நானில்லை -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- Movies
Rocketry public Review : யார் இந்த நம்பி நாராயணன்?.. மாதவனுக்கு குவியும் பாராட்டு!
- Finance
கோவை, சேலம் தொழிற்துறை ஊழியர்களை பதம் பார்க்கும் பணவீக்கம்.. மத்திய அரசு ரிப்போர்ட்..!
- Technology
வெறும் 4 நிமிடத்தில் 50% சார்ஜ்: மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!
- Sports
இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்
- Automobiles
முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கருட புராணம் கூறும் நரகத்தில் இருக்கும் நான்கு வாசல்கள்... உங்களுக்கு காத்திருக்கும் வாசல் எது தெரியுமா?
இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது. புராணங்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான புராணமெனில் அது கருட புராணமாகும். ஏனெனில் கருட புராணம் இறப்பிற்கு பிறகான நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மனிதர்களின் பல வகையான பாவங்கள் மற்றும் அவற்றின் தண்டனைகள் கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்து நூல்களின்படி பதினெட்டு மகாபுராணங்கள் உள்ளன. கருட புராணம் அவற்றில் ஒன்று, இது கருடனுக்கும் (விஷ்ணுவின் பறவை-மனிதன் வாகனம்) மற்றும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் வாழ்க்கை மற்றும் இறப்பு செயல்முறையை விளக்குகிறது.

கருடனின் கேள்விகள்
கருடன் பின்வரும் கேள்விகளைக் கேட்டார்: எந்த பாவங்கள் ஒருவரின் ஆன்மாவை நரகத்திற்கு இட்டுச் செல்லும்? ஆன்மாக்கள் ஏன் வைதரணியில் விழுகின்றன? மேலும் அவர்கள் ஏன் நரகத்திற்குச் செல்கிறார்கள்? சிவபெருமான் தனது ஒவ்வொரு கேள்வியையும் விரிவாக விளக்கினார்.

நான்கு நுழைவாயில்கள்
கருட புராணத்தின் படி, நான்கு நுழைவாயில்கள் உள்ளன, இதன் மூலம் ஒரு ஆத்மா இந்த நான்கு நுழைவாயில்களில் ஒன்றின் வழியாக வேறொரு உலகத்திற்குள் நுழைகிறது. அவை பூர்வ் நுழைவாயில், பஸ்சிம் நுழைவாயில், உத்தர நுழைவாயில் மற்றும் தக்ஷின நுழைவாயில். நம்முடைய புவி வாழ்வின் அடிப்படையில் நாம் நமக்கான வாயிலை மரணத்திற்கு பின் அடைவோம்.

பூர்வ் நுழைவாயில்
பணம், உணவு, தங்குமிடம், கவனிப்பு மற்றும் பிற தன்னலமற்ற சேவைகளின் வடிவத்தில் எப்போதும் உலகுக்குத் திருப்பிக் கொடுத்தவர்கள் பூர்வ துவாரத்தின் வழியாக செல்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் இந்த கதவு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க தலைவர்களை உருவாக்கும் உலகின் சிறந்த வழிகாட்டியாக இருப்பாங்களாம்... நீங்க எப்படி?

பாஸ்சிம் நுழைவாயில்
கடவுளை வணங்குவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் இந்த கதவு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் பொய்யான உண்மைகளை கடந்து கடவுளிடம் சரணடைபவர்கள் பாஸ்சிம் நுழைவாயிலைக் கடந்து செல்கிறார்கள்.

உத்தர நுழைவாயில்
உலகெங்கிலும் உள்ள அனைத்து முனிவர்கள், துறவிகள் மற்றும் புனிதர்கள் தங்கள் உடலை இந்த உலகில் விட்டுவிட்டு உத்தர நுழைவாயிலின் வழியாக செல்கிறார்கள். உண்மையில் மரணத்திற்கு முன் இறந்து சமாதி அடையும் மக்கள் இந்த நுழைவாயிலை அடைகிறார்கள்.

தக்ஷின நுழைவாயில்
உலகெங்கிலும் உள்ள தவறு செய்பவர்கள் அனைவரும் தக்ஷின் நுழைவாயில் வழியாக செல்ல வேண்டும், இது இறுதியில் நரகத்திற்கு வழிவகுக்கிறது. ஆன்மா நுழையும் பரிமாணத்தை எம லோகம் அல்லது எம உலகம் 'நரகம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் எமராஜா மக்களின் செயல்களை ஆய்வு செய்யும் எமலோகத்தின் கடவுளாக இருக்கிறார்.
MOST READ: இந்த 5 ராசி பெண்கள் அவங்க கணவரை அடிமை மாதிரி நடத்துவாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க ஆண்களே...!

எமதர்மராஜா
எமதர்மராஜா நரகத்தைக் கவனிக்கிறார். அவர் மக்களின் தவறான செயல்களைக் கவனித்து, அவர்களின் கர்ம கணக்கின்படி அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். கருடபுராணத்தில் கர்மாவின் வகைகள் மற்றும் தண்டனைகள் கூட விளக்கப்பட்டுள்ளன.

வைதரணி நதி
சுயநலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் மக்கள் வைதரணி நதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்து புராணங்களின்படி, இந்த நதி பூமிக்கும் நரகத்திற்கும் இடையில் உள்ளது, இது ஆன்மாக்களை தூய்மைப்படுத்துவதாக கருதப்படுகிறது.
MOST READ: ராகு-கேது பெயர்ச்சியால் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்க இந்த எளிய பரிகாரங்களே போதுமாம் தெரியுமா?

தண்டனைகள்
கருட புராணத்தின் படி, ஆத்மாக்கள் தங்கள் கர்மக் கணக்கின் சுழற்சியை மூடுவதற்கு பூமிக்கு திரும்பி வர வேண்டும், அங்கு அவர்கள் தங்கள் கடந்தகால கர்மாக்களின் முடிவுகளை தற்போதைய வாழ்க்கையில் தங்கள் பிராப்தமாகப் பெறுகிறார்கள்.