Just In
- 29 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
குடியரசு தினத்தில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக வாகன ஊர்தியில் என்னென்ன இருந்தன தெரியுமா?
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக வாகன ஊர்திகள் சென்னையில் அணிவகுத்து வந்தன.
நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நேற்று(ஜனவரி 26) கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றினார். தமிழகத்தில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக வாகன ஊர்திகள் சென்னையில் அணிவகுத்து வந்தன. தமிழ்நாடு மாநில அளவிலான கொண்டாட்டங்களில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை உள்ளடக்கிய நான்கு அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழகத்தின் வாகனங்கள் மறுக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்ததோடு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தலையீடு செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கை பலனளிக்காததால், மாநில அளவிலான கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் நேற்று அணிவகுத்து வந்தன. அதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
தமிழக குடியரசு தின வாகன ஊர்திகள்
தமிழ்நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் ‘சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு' என்ற கருப்பொருளுடன் தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை சித்தரித்து அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி, ராணி வேலு நாச்சியார், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர் சகோதரர்கள் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர்.1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் இருந்து இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி எடுத்துச் செல்லப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மூன்று ஊர்திகளில் சுதந்திர போராட்ட வீரர்கள்
முதல் வாகன ஊர்தியில், ராணி வேலு நாச்சியார், அவரது படைத் தளபதி குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் மற்றும் பலர் இடம்பெறும் அலங்கார அமைப்பு,1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் சிப்பாய் கலகத்தை சித்தரிக்கிறது. இரண்டாவது பிரதான ஊர்தியில் சுப்ரமணிய பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாவது பிரதான அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், கக்கன், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு விளக்கம் கொடுத்த ஸ்டாலின்
பிரதமர் மோடிக்கு அலங்கார ஊர்தியை விவரித்த ஸ்டாலின், "இந்த வடிவமைப்பில் 1906-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய, சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவிய பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் வடிமைக்கப்பட்டிருந்தார். மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தனது அனல் பறக்கும் தேசபக்தி பாடல்கள் மற்றும் எழுத்துக்களால் மக்கள் மனதில் தேசபக்தியை தூண்டிய மகாகவி பாரதியார் என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியும் இந்த வடிவமைப்பில் இருந்தார்.
வேலு நாச்சியார்
மேசையின் பின்புறம் ராணி வேலு நாச்சியார் கையில் வாளுடன் குதிரை சவாரி செய்து பெண் ராணுவ வீரர்களுடன் காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியுடன் போர் தொடுத்த முதல் இந்திய ராணி இவர்தான். 1780 முதல் 1790 வரை சிவகங்கை மண்டலத்தில் ராணியாக இருந்த இவர், தற்கொலைத் தாக்குதல் நடத்தி கிழக்கிந்திய கம்பெனியின் வெடிமருந்துக் கிடங்கை தகர்த்தார் என்று ஸ்டாலின் கூறினார்.
கடிதமும் கண்டனமும்
பிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தின் அலங்கார ஊர்தி மூன்று சுற்றுக் கூட்டங்களில் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அது இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறினார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஜனவரி 25, செவ்வாய் அன்று, தேசிய குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு வாகன ஊர்தியைச் சேர்க்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி வழக்கறிஞர் பி.பாபு தாக்கல் செய்த பொது நல வழக்கை (PIL) சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை நிராகரித்த தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் விண்ணப்பித்ததற்கான எழுத்துப்பூர்வ ஆவணம் எதையும் மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியது.
30 நிமிடங்களுக்குள் விழா நிறைவு
காலை 8.00 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து மூவர்ணக் கொடி மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 8.20 மணிக்கு விழா நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. மாநில காவல்துறை கூட்டு இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அத்துடன் விழா முடிந்தது. சுமார் 30 நிமிடங்களுக்குள் குடியரசு தின விழா நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.