Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 7 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 10 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடக ராசியில் உருவாகியுள்ள புதாதித்ய யோகத்தால் ஜூலை 31 வரை அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கடக ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. என்ன தான் இது சுப யோகமாக இருந்தாலு, சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களும் கிடைக்கும்.
தற்போது சூரியனும் புதனும் ஒரே ராசியில், அதாவது கடக ராசியில் ஒன்றாக பயணிக்கிறார்கள். ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக சூரியனுக்கும், புதனுக்கும் தனி இடம் உண்டு. இதில் சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று கூறப்படுகிறது. புதன் புத்திசாலித்தனம், லாஜிக், உரையாடல், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது.
சூரியனும், புதனும் ஒன்றாக சேரும் போது தான் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் மங்களகரமான யோகம் ஆகும். புத ஆதித்ய யோகம் சில வீடுகளில் மட்டுமே உருவாகும். அவை முதல் வீடு, ஐந்தாம் வீடு, பதினொன்றாவது வீடு. தற்போது கடக ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகியுள்ளது. என்ன தான் இது சுப யோகமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களும் கிடைக்கும். இப்போது கடக ராசியில் சூரியனும், புதனும் சேர்ந்திருப்பதால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வரும். நல்ல லாபத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் காரணமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்திலும் மாற்றம் ஏற்படலாம். உங்களின் உழைப்பு அதிகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். அறிவார்ந்த வேலையால் வருமானம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மனம் சஞ்சலமாக இருக்கும். நிதானத்தைக் கடைபிடியுங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் வேலை அதிகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பாதை கிடைக்கும். உங்கள் நண்பருடன் இக்காலத்தில் சுற்றுலா செல்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இக்காலத்தில் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். மனம் சற்று கலங்கி இருக்கும். இக்காலத்தில் நிதானமாக இருங்கள். குடும்பத்தினருடன் ஒரு புனித ஸ்தலத்திற்கு செல்வீர்கள். தொழில் காரணமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் நல்ல நிலையில் இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிக ஈடுபாட்டுடன் வேலைகளை செய்வீர்கள். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதை அமையும். இக்காலத்தில் சுவையான உணவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மன நிம்மதியுடன் இருப்பார்கள். கலை அல்லது இசையின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வீடு வாங்கும் வாய்ப்பு கிடைப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் ஒரு சொத்து வருமான ஆதாரமாக மாறும். உங்களின் நோக்கம் இக்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. சிரமங்கள் சற்று அதிகம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் கல்வி பணி மேம்படும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் பணியிடத்தில் சில சிரமத்தை சந்திக்கலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
துலாம் ராசிக்காரர்களின் மனம் கலங்கலாக இருக்கும். மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் இருக்கும். இக்காலத்தில் சற்று நிதானமாக இருங்கள். உங்கள் தந்தையிடம் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். அலைச்சல் அதிகம் இருக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் மனம் அமைதியாக இருக்கும். இருப்பினும் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். அரசின் ஆதரவு கிடைக்கும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பாதை அமையும். பணியிடத்தில் உங்கள் வேலை அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் மனநிலை ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும். கல்வி நோக்கங்களுக்காக பயணம் மேற்கொள்ளலாம். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் பணியின் நோக்கம் அதிகரிக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இக்காலத்தில் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் வெளியூர் பயணம் சாதகமாக இருக்கும். நண்பரின் உதவியை இக்காலத்தில் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும்.