Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உலகின் அதிபுத்திசாலி மக்களிடம் இருக்கும் பொதுவான பழக்கங்கள்... இதுல ஒன்னாவது உங்ககிட்ட இருக்கா?
புத்திசாலிகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர்கள் புத்திசாலியாகப் பிறந்தவர்களா அல்லது தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் திறமையைப் பெறுகிறார்களா?
புத்திசாலிகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர்கள் புத்திசாலியாகப் பிறந்தவர்களா அல்லது தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் திறமையைப் பெறுகிறார்களா? ஸ்மார்ட் என்ற வார்த்தையை யாராவது பயன்படுத்தினால், முதலில் நம் நினைவுக்கு வருவது கல்வித் திறன்கள் மற்றும் பகுத்தறிவு திறன்கள்தான்.
பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, புத்திசாலியாக இருப்பது என்பது புத்தக புத்திசாலியாக இருப்பது அல்லது அதிக நுண்ணறிவு அளவு (IQ) கொண்டிருப்பது மட்டுமல்ல. எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரியான குணங்களுடன் பிறக்கவில்லை, எனவே அவர்களை ஒரே அளவுருக்களில் ஒப்பிட முடியாது. புத்திசாலி என்பது வெவ்வேறு சூழ்நிலைகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளும் மற்றும் சமாளிக்கும் திறனாகும். இது பொதுவாக மனிதர்களுக்கு இயற்கையாகவே பிறக்கும் போது இருக்கும் திறன் அல்ல, ஆனால் காலத்தால் மட்டுமே இதனை பெற முடியும். புத்திசாலி மக்களுக்கு இருக்கும் சில அசாதாரண பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தாங்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று பெருமை பேசமாட்டார்கள்
புத்திசாலிகள் உண்மையில் தங்களைப் பற்றி தற்பெருமை பேச மாட்டார்கள். உண்மையில், அது அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் புத்திசாலியாக இருந்தாலோ அல்லது புத்திசாலித்தனமான செயல்களைச் செய்தால், மக்கள் எப்போதும் கவனிக்கிறார்கள். நீங்கள் மற்றவர்களிடம் சென்று உங்கள் குணங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. புத்திசாலிகள் அவர்கள் எப்படி உணரப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை, மாறாக அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு தங்கள் மனதை வளர்ப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
தனிமை விரும்பிகள்
தனிமையில் இருப்பவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்று பலர் கூறலாம், ஆனால் அது உண்மையில் தவறானது. நீங்கள் எப்போதும் மக்களால் சூழப்பட்டிருக்கும்போது, உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்க உங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை, எனவே உங்கள் பார்வையை விரிவுபடுத்துவது முக்கியம். நீங்கள் தனியாக இருக்கும்போது மட்டுமே, உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்கவும், மேலும் அறிவைப் பெறவும் முடியும். இந்த காரணத்திற்காக, புத்திசாலிகள் தங்களுடன் நேரத்தை செலவிடுவதை நீங்கள் எப்போதும் காணலாம்.
MOST READ: இந்த தவறுகளை செய்யும்வரை உங்களால் தலைகீழாக நின்னாலும் எடையைக் குறைக்க முடியாதாம் தெரியுமா?
தோல்வியை ஒப்புக்கொள்வார்கள்
தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அவற்றை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வது நாம் அனைவரும் ககொண்டிருக்க வேண்டிய ஒரு திறமையாகும். சில சமயம் தோல்வி அடைகிறோம், சில சமயம் வெற்றி பெறுகிறோம். இது வாழ்க்கையின் ஒரு பகுதி மற்றும் புத்திசாலிகள் அதை நன்கு புரிந்துகொள்கிறார்கள். பல முயற்சிகள் தோல்வியடைந்தாலும், அவர்கள் அதனைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் தவறை ஏற்றுக்கொள்கிறார்கள், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்கிறார்கள்.
தங்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்
புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மட்டுமே முழுமையான அறிவைப் பெற முடியாது, ஒருவர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட உதவும் நமது அன்றாட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. புத்திசாலிகள் எப்போதும் அறிவை வேட்டையாடுகிறார்கள் மற்றும் மற்றவர்களால் கவனிக்கப்படாத சாதாரண விஷயங்களில் உள்ள முக்கியத்துவத்தைக் கண்டுபிடிப்பார்கள்.
பகல் கனவு காண்கிறார்கள்
புத்திசாலிகளின் மற்றொரு பொதுவான பழக்கம் என்னவென்றால், அவர்கள் தங்கள் மனதை அலைபாய விடுகிறார்கள். பகல் கனவு உண்மையில் சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. பகற்கனவு என்பது விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்தாமல் பிரச்சினைகளைப் பற்றி ஆழ்மனதில் சிந்திப்பது போன்றது. பொதுவான விஷயத்திலிருந்து விலகி, பார்க்கும் கோணத்தை மாற்றுவது, உண்மையில் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ஆடம்பரமான ராஜவாழ்க்கை வாழ்வாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சொந்தமாக முடிவுகளைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள்
பெரும்பாலான மக்களைப் போலல்லாமல், புத்திசாலிகள் சில சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கியவுடன் உதவிக்காக மற்றவர்களிடம் விரைந்து செல்வதில்லை. அவர்கள் மதிப்பீடு செய்கிறார்கள், நிலைமையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் மற்றும் யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தமாக பிரச்சினையை தீர்க்கிறார்கள். அவர்களால் பணியை முடிக்க இயலாது என்று தோன்றினாலும், அவர்கள் அதற்காக முயற்சி செய்யாமல் இருக்க மாட்டார்கள். இது பிடிவாதமாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மையில் தன்னிறைவு பெற்றதாக இருக்கிறது.