Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2022 அக்டோபர் மாத சூரிய கிரகணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
பொதுவாக ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி நிகழவுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது.
ஜோதிடத்தின் படி, கிரகணங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த சூரிய கிரகணத்தின் போது, சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருவார். இதனால் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
இந்த சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உண்ணும் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் ஒருசில விஷயங்களால் அதிகம் வருத்தப்பட நேரிடும்.
மிதுனம்
சூரிய கிரகணத்தின் தாக்கம் மிதுன ராசிக்காரர்களிடம் அதிகம் இருக்கும். எந்த ஒரு செயலுக்கும் கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படும். பண விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் தேவையற்ற செலவுகள் அதிகம் செய்ய நேரிடும். முதலீடு செய்ய நினைத்தால், சற்று யோசித்து செய்யுங்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
துலாம்
சூரிய கிரகணத்தின் போது துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன் இருப்பதால், துலாம் ராசிக்காரர்கள் சற்று அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
சூரிய கிரகணத்தால் விருச்சி ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. முதலீடு செய்வதாக இருந்தால், அதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்பு ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சற்று சிரமம் தருவதாக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பேசும் போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் பேச்சால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். எந்த வேலையிலும் அவசரப்படாதீர்கள். இல்லாவிட்டால், அந்த வேலை பாழாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)