Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது என்ன தெரியுமா?
பெண் விடுதலைக்காகவும் போராடினார். இவர் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.
பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிட அரசியல் என தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தமிழகத்தின் பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி செப்டம்பர் 17, 1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாசிர தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
பெண் விடுதலைக்காகவும் போராடினார். இவர் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படும் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளில் அவர் கூறிய பொன்மொழிகளை இக்கட்டுரையில் காணலாம்.
இறைமறுப்பாளர்
மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு பெரியார், தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு தந்தை பெரியார் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
பொன்மொழி 1
விதியை நம்பி மதியை இழக்காதே! -தந்தை பெரியார்
பொன்மொழி 2
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! -தந்தை பெரியார்
பொன்மொழி 3
ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.-தந்தை பெரியார்
பொன்மொழி 4
உன் சாத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம்
வெளக்ககாமத்தை விட
உன் அறிவு பெரிது
அதை சிந்தி!
-தந்தை பெரியார்
பொன்மொழி 5
மதம்
மனிதனை மிருகமாக்கும்
சாதி
மனிதனை சாக்கடையாக்கும்
-தந்தை பெரியார்
பொன்மொழி 6
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோட அவனுடைய முயற்சிகளும் அவன் துவங்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை.- தந்தை பெரியார்
பொன்மொழி 7
பெண்களிடம் கரண்டியை பிடிங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்!-தந்தை பெரியார்
பொன்மொழி 8
பெண்கள் வெறும் அலங்காரத்தோடு திருப்தி அடைவதால், விடுதலை வேட்கை பிறப்பது அரிது. -தந்தை பெரியார்
பொன்மொழி 9
யார் சொல்லி இருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உன் புத்திக்கு
பொது அறிவுக்கு
பொருந்தாத எதையும் நம்பாதே!
-தந்தை பெரியார்
பொன்மொழி 10
வலிமை, கோபம் ஆளும் திறன் போன்றவை ஆணுக்கும்
சாந்தம், அமைதி போன்றவை பெண்ணுக்குமான குணங்கள் என்பது
ஆண் பெண்ணை அடக்கியாள பயன்படுமே தவிர
பெண்ணுக்கு ஒருநாளும் பயன்படாது
-தந்தை பெரியார்
பொன்மொழி 11
கடவுள் இல்லை!
கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
கடவுளை மற! மனிதனை நினை!
-தந்தை பெரியார்
பொன்மொழி 12
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்துகொள்வதே ஒழுக்கமாகும்.
-தந்தை பெரியார்