Just In
- 8 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Don't Miss
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நவராத்திரியில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
நவராத்திரியின் முதல் நாளில் கலசம் நிறுவப்பட்டதும், கிரக நிலைகளால் நவராத்திரி காலமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த பொற்காலமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 அம் தேதி தொடங்குகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் மிகவும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் முதல் நாளில் கலசம் நிறுவப்பட்டதும், கிரக நிலைகளால் நவராத்திரி காலமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த பொற்காலமாக இருக்கும். ஏனெனில் நவராத்திரியில் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருளுடன், துர்கா தேவியின் ஆசியும் கிடைப்பதால், பலவிதமான நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
துர்கா தேவியின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். திருமணமானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். நவராத்திரி நாட்களில் மேஷ ராசிக்காரர்கள் சிலருக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்
நவராத்திரி காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக துர்கா தேவியின் முழு அருளும் கிடைக்கும். இக்காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் கடின உழைப்பினால் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் துர்கையின் அருள் முழுமையாக கிடைப்பதால், இக்கால கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்களின் நேர்மறையான அணுகுமுறையால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் வரன் தேடி வந்து, திருமணம் கைகூடும்.
விருச்சிகம்
துர்கா தேவியின் ஆசியால் விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சொத்துக்களால் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன்ன உறவு வலுபெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிதி நிலை வலுவாகும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். துர்கையின் அருளால் இக்காலத்தில் பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எந்த துறையில் இருந்தாலும் அதில் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். நவராத்திரி காலத்தில் நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். முக்கியமாக இக்காலத்தில் எந்த புதிய வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.