Just In
- 31 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 59 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தந்தேராஸ் நாளில் வக்ர நிவர்த்தியாகும் சனி: யாருக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு சிரமமாகவும் இருக்கும் தெரியுமா?
தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டு சனி பகவான் ஏப்ரல் மாதத்தில் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்று, பின் வக்ர நிலையில் மீண்டும் மகர ராசியை அடைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்நாள் தான் தந்தேராஸ். தந்தேராஸ் நாளில் மக்கள் குபேர லட்சுமி பூஜையை செய்வதோடு, தங்கம், வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்களை வாங்குவார்கள். ஏனெனில் இந்நாள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிகளுக்கு சனியுடன், குபேரனின் அருளும் கிடைக்கும். இதனால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். இப்போது தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும் என்பதைக் காண்போம்.
சனி மற்றும் குபேரனின் அருளைப் பெறும் ராசிக்காரர்கள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தந்தேராஸ் மற்றும் தீபாவளி சிறப்பானதாக இருக்கும். அதோடு சனி வக்ர நிவர்த்தி அடைவதால், மேஷ ராசிக்காரர்கள் சனியின் அருளால் நற்பலனைப் பெறுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். நிதி ரீதியாகவும் நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வலுவான பொருளாதார நிலையால் பணப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி பல நன்மைகளை வாரி வழங்கும். செல்வம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதால், பணப் பிரச்சனைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களைச் தேடி நற்செய்திகள் வரும்.
சனி வக்ர நிவர்த்தி 2022
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சனி மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து மகர ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். இந்த மகர ராசியில் சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்வார்.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மகர ராசியில் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான், லேசான செல்வாக்கைக் கொண்டிருப்பார். ஆனால் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சனியால், ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மீது சனி வலுவான செல்வாக்கைக் கொண்டிருப்பார். இதில் ஏழரை சனியால் சிரமப்படும் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சனி வக்ர நிவர்த்தியானது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிக தீங்கை விளைவிக்கும்.