Just In
- 32 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தந்தேராஸ் நாளில் வக்ர நிவர்த்தியாகும் சனி: யாருக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு சிரமமாகவும் இருக்கும் தெரியுமா?
தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டு சனி பகவான் ஏப்ரல் மாதத்தில் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்று, பின் வக்ர நிலையில் மீண்டும் மகர ராசியை அடைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்நாள் தான் தந்தேராஸ். தந்தேராஸ் நாளில் மக்கள் குபேர லட்சுமி பூஜையை செய்வதோடு, தங்கம், வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்களை வாங்குவார்கள். ஏனெனில் இந்நாள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிகளுக்கு சனியுடன், குபேரனின் அருளும் கிடைக்கும். இதனால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். இப்போது தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும் என்பதைக் காண்போம்.
சனி மற்றும் குபேரனின் அருளைப் பெறும் ராசிக்காரர்கள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தந்தேராஸ் மற்றும் தீபாவளி சிறப்பானதாக இருக்கும். அதோடு சனி வக்ர நிவர்த்தி அடைவதால், மேஷ ராசிக்காரர்கள் சனியின் அருளால் நற்பலனைப் பெறுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். நிதி ரீதியாகவும் நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வலுவான பொருளாதார நிலையால் பணப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி பல நன்மைகளை வாரி வழங்கும். செல்வம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதால், பணப் பிரச்சனைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களைச் தேடி நற்செய்திகள் வரும்.
சனி வக்ர நிவர்த்தி 2022
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சனி மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து மகர ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். இந்த மகர ராசியில் சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்வார்.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மகர ராசியில் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான், லேசான செல்வாக்கைக் கொண்டிருப்பார். ஆனால் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சனியால், ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மீது சனி வலுவான செல்வாக்கைக் கொண்டிருப்பார். இதில் ஏழரை சனியால் சிரமப்படும் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சனி வக்ர நிவர்த்தியானது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிக தீங்கை விளைவிக்கும்.