Just In
- 29 min ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 7 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சனி, சூரியன் மற்றும் குரு தங்கள் சொந்த ராசியில் இருப்பதால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள்!
சனி, சூரியன் மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களும் தங்கள் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் இருந்தால், அது மிகவும் நல்ல பலனை வழங்கும். இந்நிலையில் தற்போது மூன்று முக்கிய கிரகங்கள் தனது சொந்த ராசியில் பயணித்து வருகின்றன. அதாவது சூரியன் சிம்ம ராசியிலும், சனி மகர ராசியிலும், குரு மீன ராசியிலும் இருக்கின்றன.
ஜோதிடத்தில் சூரியன் ஆற்றல், நிர்வாகம், தந்தை, தலைவன் மற்றும் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறது. சனி கர்மாவின் கிரகமாகும். வியாழன்/குரு, அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமானது. திருமணம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களும் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஏற்கனவே சனி மற்றும் குரு சொந்த ராசியில் பயணித்து வருகின்றனர். ஆகவே இந்த காலம் மிதுன ராசிக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். லாபத்திற்கான சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கடகம்
சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் இருக்கும் காலமானது கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் கூடிய விரைவில் முடியும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சூரியன், சனி மற்றும் குரு சொந்த ராசியில் இருப்பதால், இக்காலத்தில் பண மழை பொழியும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.