Just In
- 33 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
Don't Miss
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
145 நாட்கள் மகரத்தில் இருக்கும் சனியால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
மகர ராசியை அடைந்த வக்ர சனி மகரத்தில் 145 நாட்கள், அதாவது அக்டோபர் வரை இருப்பார். இந்த சனி இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவைத் திறக்கும்.
நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சனியின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுப்பவராக கருதப்படுகிறார். அதாவது, நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நற்பலன்களையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு அசுப பலன்களையும் கொடுப்பவர் சனி பகவான்.
சனிப்பெயர்ச்சி 2022
சனி பகவான் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் பயணித்து வந்தார். ஆனால் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதன் பின் ஜூன் 05 ஆம் தேதி மகர ராசியை நோக்கி வக்ர நிலையில் பயணிக்க தொடங்கினார். பின்னர் ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்தார். மகர ராசியை அடைந்த வக்ர சனி மகரத்தில் 145 நாட்கள், அதாவது அக்டோபர் வரை இருப்பார். இந்த சனி இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவைத் திறக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஜோதிடத்தின் படி, மகரத்தில் இருக்கும் வக்ர சனியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது தொழில் மற்றும் வேலையின் வீடு. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் கூடும். புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மற்றும் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.
மீனம்
மகரத்தில் சனியின் வருகையால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது. ஏனெனில் மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் மீன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்களில் பணம் அதிகம் சம்பாதிப்பீர்கள். இக்காலத்தில் புதிய வணிக உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் நன்றாக இருக்கும். மறுபுறம் பணிபுரிபவர்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். இக்காலத்தில் வாகனம், சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள் மற்றும் அதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஏனெனில் தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இந்த வீடு பணம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் பங்குச் சந்தை மற்றும் ஊக லாட்டரிகளில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கெட்டிங் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும், சாதகமாகவும் இருக்கும். வாகனம் மற்றும் நிலம் வாங்குவதற்கு சாதகமான காலம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளதால், ஆரோக்கியம் சற்று மோசமடைய வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கு, தனுசு ராசிக்காரர்கள் புஷ்பராக ரத்தின கல்லை அணியலாம்.