Just In
- 4 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 6 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
Don't Miss
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சனி அமாவாசை அன்று இதை செய்தால் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகுமாம்...
ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள்.
2021 சனி அமாவாசை டிசம்பர் 04 ஆம் தேதி ஆகும். இந்த நாளில் தான் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை நாளில் நிகழ்கிறது. சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும்.
சனி பகவான் ஒரு நீதிமான். ஒருவர் கெட்டது செய்தால் அவருக்கு கெடு பலன்களையும், நல்லது செய்தால் நல்ல பலன்களையும் தரக்கூடியவர். எனவே தவறு செய்யாதவர்கள் சனி பகவானைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் சனி பகவான் தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்துவதில்லை.
ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள். அதில் வேலையில் தடங்கல், பணப் பிரச்சனை, எந்த வேலையையும் எளிதில் முடிக்க முடியாமை, திடீர் காயங்கள் அல்லது தொடர்ச்சியான இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்கள் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இதிலிருந்து விடுபட சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை தானமாக வழங்குவது சிறந்த வழியாகும்.
இப்போது சனி அமாவாசை நாளில் எவற்றையெல்லாம் தானமாக வழங்கினால் சனி பகவானின் தாக்கம் குறையும் என்பதைக் காண்போம்.
நல்லெண்ணெய்
சனி பகவானின் கடுமையான தாக்கம் அல்லது தோஷம் நீங்க, ஒரு பௌலில் நல்லெண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பௌலுடன் எண்ணெயை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். ஏனெனில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடிக்கும் என்பதால், இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சி அடைவதாக நம்பப்படுகிறது.
கருப்பு உளுத்தம் பருப்பு
முழு கருப்பு உளுத்தம் பருப்பு ஒரு கருப்புத் துணியில் கட்டி, அதை வெள்ளிக்கிழமை இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் அல்லது அருகில் வைத்து தூங்க வேண்டும். பின் மறுநாள் சனிக்கிழமை அன்று அந்த உளுத்தம் பருப்பு மூட்டையை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். இதனால் சனியின் தாக்கம் குறையும்.
ஆண்டிமினி
ஒரு கருப்பு ஆண்டிமினியை வாங்கி, அதை தலை முதல் கால் வரை 9 முறை வைத்து எடுத்து, நிலத்தில் புதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சனி தோஷம் மற்றும் சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.
சனி மந்திரம்
'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌண் சஷ்ண்யே நமஹ்' என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் சனியின் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இவ்வாறு சனி பகவானை மனதில் நினைத்து சொல்வதன் மூலம், சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
சனியின் பாதங்கள்
ஒருவரது ஜாதகத்தில் சனியின் தாக்கம் இருந்தால், அவர்கள் எப்போதும் சனி பகவானை தொழும் போது, சனியின் பாதங்களைத் தான் பார்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சனி பகவானின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து தொழாதீர்கள்.