For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேதஜோதிடத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம்... உஷாரா இருங்க...!

இந்த உலகின் மிகவும் கடினமான காரியம் என்றால் அது பெண்களின் மனதை அறிந்து கொள்வதுதான். உலகில் இருக்கும் அனைத்து ஆண்களும் தாங்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறார்கள்.

|

இந்த உலகின் மிகவும் கடினமான காரியம் என்றால் அது பெண்களின் மனதை அறிந்து கொள்வதுதான். உலகில் இருக்கும் அனைத்து ஆண்களும் தாங்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருமே அதனை சரியாக செய்வதில்லை. பெண்கள் ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த பொக்கிஷம் ஆவர். அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.

இந்த உலகின் மிகவும் கடினமான காரியம் என்றால் அது பெண்களின் மனதை அறிந்து கொள்வதுதான். உலகில் இருக்கும் அனைத்து ஆண்களும் தாங்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருமே அதனை சரியாக செய்வதில்லை. பெண்கள் ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த பொக்கிஷம் ஆவர். அவர்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் கடினம். துரதிர்ஷ்டவசமாக, இந்த உலகில் எல்லோரும், குறிப்பாக பெண்கள் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள். இந்த தீர்மானங்களானது அவர்களின் வாழ்க்கை முறை, அணிந்திருக்கும் உடை, உண்ணும் உணவு, காதலிக்கும் ஆண் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர்கள் இப்படித்தான் என்று தீர்மானிப்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த உலகில் எல்லோரும், குறிப்பாக பெண்கள் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள். இந்த தீர்மானங்களானது அவர்களின் வாழ்க்கை முறை, அணிந்திருக்கும் உடை, உண்ணும் உணவு, காதலிக்கும் ஆண் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர்கள் இப்படித்தான் என்று தீர்மானிப்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்ணைப் பற்றி எப்படி அறிவது?

பெண்ணைப் பற்றி எப்படி அறிவது?

பெண்களைப் பற்றி அறிந்து கொள்வது கடினம்தானே தவிர இயலாத காரியமல்ல. அறிவியல் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்துள்ளது, அதன்மூலம் நீங்கள் ஒரு பெண்ணின் ஆளுமையை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு பிடித்தமான பெண்ணை வெல்வதற்கு இதுமட்டும் போதாது, உங்களின் சொந்த அறிவும் கொஞ்சம் வேண்டும்.

முக வாசிப்பு

முக வாசிப்பு

அனைவருக்குமே அவர்களின் முகம்தான் அவர்களுடைய ஆளுமையின் கண்ணாடியாகும். நீங்கள் கோபமாக இருக்கும் போது உங்கள் முகம் எப்படி வீங்குகிறது என்பதை சிந்தித்து பாருங்கள். அப்படித்தான் பெண்களின் முகம் அவர்களின் கோபம், அன்பு, ஆர்வம் அல்லது ஆவேசம் என அனைத்தையும் வெளிப்படுத்தும்.

முக பகுப்பாய்வு

முக பகுப்பாய்வு

வேத ஜோதிடத்தின் படி, ஒரு பெண்ணின் முகம் அவர்களுக்குள் பதிவு செய்யப்பட்ட அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து கொண்டிருக்கிறது. ஆகவே அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்லது ஆக்ரோஷமானவர், குறுகிய மனநிலையுள்ளவர் அல்லது நோயாளி, சிந்தனையாளர் என அனைத்தையும் அவர்களின் முகம் வெளிப்படுத்தும். பெண்ணின் முகம் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: அதிர்ச்சியளிக்கும் இந்திய வரலாறு...சேர, சோழ, பாண்டியர் மூவரையும் தோற்கடித்த ஒரே வம்சம் எது தெரியுமா?

கண் புருவம்

கண் புருவம்

ஒரு பெண்ணின் புருவம் குறுகியதாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், அந்த பெண்ணுக்கு உயர்ந்த தார்மீக தன்மை இருப்பதாகவும், அவர் நேசிக்கும் மக்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள அனைவரும் அவரை மதிக்கிறார்கள். அவர் வாழ்க்கையில் வரும் எவருக்கும் அவர்கள் மகிழ்ச்சியைத் தருபவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

சாய்ந்த புருவம்

சாய்ந்த புருவம்

சாய்ந்த புருவம் என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையில் மிகவும் கவனம் செலுத்துகிறார் என்பதோடு அவர் வாழ்க்கையில் பெரும் உயரத்திற்கு உயருவார் என்பதன் அடையாளமாகும். இந்த பெண் தனது வாழ்க்கையில் மிகச் சிறப்பாக செயல்படுவார், மேலும் அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இவர்கள் இருக்குமிடத்தில் இவர்களின் குரல்தான் ஓங்கியிருக்கும்.

மெல்லிய புருவம்

மெல்லிய புருவம்

மெல்லிய புருவம் கொண்ட பெண்கள் லட்சியத்தில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு மோசமான விஷயம் அல்ல என்றாலும், கவலைக்குரிய உண்மை என்னவென்றால், கார்ப்பரேட் ஏணியில் ஏறும் போது இதுபோன்ற பெண்கள் பெரும்பாலும் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஆரோக்கியமற்ற உறவைக் கொண்டிருக்கக்கூடும்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அற்புதமான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்...!

கண்கள்

கண்கள்

ஒரு பெண்ணுக்கு பெரிய வட்டமான கண்கள் இருந்தால், அவர் வேடிக்கையான இயல்புடையவர், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது. சற்று சிவந்த கண்கள் கொண்ட பெண்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதப்படுகிறார்கள். கறுப்பு நிறம் அதிகம் கொண்ட பெண் ஒரு சுயநலம் கொண்ட பெண்ணாக இருப்பார்.

பழுப்பு கண் மணி

பழுப்பு கண் மணி

கண்ணின் மணியை பொறுத்தவரை பழுப்பு நிறம் கொண்டவர்கள் எளிதில் மற்றவர்களை நம்பக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் சாம்பல் நிறம் கொண்டவர்கள் சுயநலத்தின் அடையாளமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தலாம்.

நெற்றி

நெற்றி

நெற்றி சுருக்கத்தில் 4 அல்லது 5 கோடுகளை கொண்ட பெண்கள் சுயபுத்தி உள்ளவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பற்றிய அனைத்து முடிவுகளும் அவர்களே எடுப்பதாக இருக்கும். மறுபுறம், நெற்றியில் பல கோடுகள் கிடைக்கப் பெறாதவர்கள் புத்திசாலிகள் மற்றும் கல்விரீதியாக மிகச் சிறப்பானவராக இருப்பார்கள்.

உதடுகள்

உதடுகள்

முழு உதடுகளைக் கொண்ட ஒரு பெண் வாழ்க்கையைப் பற்றிய கிளர்ச்சி மனப்பான்மை கொண்ட ஒரு பெண்ணைக் குறிக்கிறார். அத்தகைய பெண் தன் சொந்த விதிகளை உருவாக்கத் தெரிந்தவர், சமூகத்தின் விதிகளுக்கு இணங்ககாமல் தன் சொந்த வாழ்க்கையை தானே உருவாக்கி வாழ்கிறார்.

MOST READ: நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள்தான் சிறுநீரகக் கற்களை உருவாக்கி உங்களை வதைக்கிறது தெரியுமா?

மெல்லிய உதடுகள்

மெல்லிய உதடுகள்

மெல்லிய உதடுகளைக் கொண்ட ஒரு பெண் தன் குடும்பத்துடன் மிகவும் இணக்கமானவராக கருதப்படுகிறார். அத்தகைய பெண் மிகவும் கடினமாக உழைத்து, தன் அன்புக்குரியவர்களை விசேஷமாக உணர வைப்பார். அத்தகைய பெண் வாழ்க்கையைப் பற்றி அக்கறையுள்ள மற்றும் அன்பான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets of Women Personality

Read to know how to unravel the secrets of a woman's personality
Story first published: Tuesday, May 12, 2020, 17:50 [IST]
Desktop Bottom Promotion