Just In
- 21 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 51 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா? அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்
நர-நாராயணா அவதாரத்தின் நோக்கமே பூமியில் பேரழிவை ஏற்படுத்தி பல அதர்மங்கள் புரிந்த சகஸ்ரகவச்சன் என்னும் அரக்கனை வதைப்பதுதான்.
இந்து புராணங்களில் கூறியுள்ளபடி சொர்க்கலோகத்தில் பல அப்சரஸ்கள் இருந்தனர், அதில் மிகவும் முக்கியமானவர் ஊர்வசி, சொல்லப்போனால் அனைத்து அப்சரஸ்களையும் விட அழகில் சிறந்தவர் ஊர்வசிதான் என்று கூறப்படுகிறது.
ஊர்வசியின் பிறப்பிற்கு பின்னால் பல சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் உள்ளது. அதன்படி ஊர்வசி நர-நாராயணா என்பவர்களால் உருவாக்கப்பட்டவர். இவர்கள்தான் அடுத்த பிறவியில் அர்ஜுனனாகவும், கிருஷ்ணராகவும் பிறந்ததாக புராணங்கள் கூறுகிறது. இந்த பதிவில் நர-நாராயணா பற்றியும், ஊர்வசியின் பிறப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
நர-நாராயணா
நர-நாராயணா என்பவர்கள் தர்மத்தை பாதுகாப்பதற்காக தோன்றிய ஜோடி அவதாரங்கள் என்று நம்பப்படுகிறது. நர-நாராயணா அவதாரத்தின் அர்த்தம் என்னவெனில் இதில் நர என்பது மனித ஆன்மாவையும், நாராயணா என்பது தெய்வீக சக்தியையும் குறிக்கிறது. மனிதனும், கடவுளும் இணைந்து தர்மத்தை பாதுகாக்க தோன்றிய அவதாரம்தான் இவர்கள்.
பத்ரிநாத்
மகா புனிதஸ்தலமான பத்ரிநாத் நர-நாராயண அவதாரத்தின் தோற்றத்துடன் தொடர்புடையது. விஷ்ணு புராணத்தின் படி நர-நாராயணாதான் தங்களின் அடுத்த பிறவியில் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக பிறந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மறுபிறவி எடுத்ததற்கு வலிமையான காரணம் இருந்தது.
பகவத்கீதை
குருஷேத்திர போரில் தயங்கி நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசம்தான் பகவத்கீதை ஆகும். அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்த போது நாம் இருவரும் கடந்த ஜென்மத்தில் நர-நாராயணாவாக பிறந்ததையும், தர்மத்தை பாதுகாப்பதுதான் தங்களது கடமையாக இருந்ததையும் கூறினார். அந்த ஜென்மத்தின் பணியை இந்த ஜென்மத்தில் தொடர வேண்டும் என்று அர்ஜுனனிடம் கூறினார்.
MOST
READ:
இந்த
5
ராசிக்காரங்கள
காதலிக்கிறவங்க
ரொம்ப
பாவம்
ஏன்
தெரியுமா?
கடந்த ஜென்மம்
அர்ஜுனனும், கிருஷ்ணரும் பூமியில் அவர்களுடன் முந்தைய அவதாரத்தில் அவர்கள் நர-நாராயணா என்னும் முனிவர்களாக பிறந்தனர். அவர்கள் புனித இடமான பத்ரிநாத்தில் கடுமையான தவம் செய்தனர்.
சிவபெருமான் அவர்களின் தவத்தை பாராட்டினார்
நர-நாராயணாவின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர்களின் மதிப்பை உலகத்திற்கு காட்ட விரும்பினார். எனவே தன்னுடைய திவ்ய அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை தவம் செய்து கொண்டிருந்த நர-நாராயணா முனிவர்கள் மீது வீசினார். ஆனால் பாசுபத அஸ்திரம் அவர்கள் அருகில் வந்தவுடன் தனது சக்தியை இழந்தது. இதன்மூலம் அவர்கள் இருவரும் நிர்விகல்ப சமாதி என்னும் உயர்ந்த நிலையை அடைந்ததாக சிவபெருமான் அறிவித்தார்.
சகஸ்ரகவச்சன்
நர-நாராயணா அவதாரத்தின் நோக்கமே பூமியில் பேரழிவை ஏற்படுத்தி பல அதர்மங்கள் புரிந்த சகஸ்ரகவச்சன் என்னும் அரக்கனை வதைப்பதுதான்.
MOST
READ:
பேய்கள்
பற்றி
ஒவ்வொரு
மதத்திலும்
கூறப்பட்டுள்ள
ரகசியங்கள்
என்னென்ன
தெரியுமா?
கர்ணன்
நர-நாராயணாவால் சகஸ்ரகவச்சனை அழிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சூரியபகவான் அவனை பாதுகாத்ததுதான். எனவே தங்கள் அடுத்த பிறவியில் சகஸ்ரகவச்சனை நாங்கள் நிச்சயம் வதைப்போம் என்று நர-நாராயணா சபதம் எடுத்தனர். சகஸ்ரகவச்சன்தான் அடுத்த பிறவியில் கர்ணனாக பிறந்தார், அவரை குருஷேத்திர போரில் நர-நாராயணாவின் மறுபிறவிகளான அர்ஜுனனும், கிருஷ்ணரும் சேர்ந்து வதைத்தனர்.
இந்திரனின் சோதனை
நர-நாராயணாவின் தவத்தின் வலிமை அதிகரித்த போது இந்திரன் அதனை கண்டு அஞ்சினார். அவர்களின் தவத்தால் தனது பதவிக்கும், அரியணைக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்தார். எனவே அவர்கள் இருவரையும் சோதிக்க நினைத்தார்.
தவத்தின் வலிமை
நர-நாராயணாவின் தவத்தை கெடுக்க நினைத்த இந்திரன் தனது அவையில் இருந்த அனைத்து அப்சரஸ்களையும் அவர்களின் தவத்தை கெடுக்க அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
ஊர்வசி
அவர்களின் தவத்தின் வலிமையை கண்ட இந்திரன் அவர்களின் முன்தோன்றி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்திரனை மன்னித்த நாராயணா இந்திரனின் அவைக்கு அனைவரையும் ஊர்வசியை பரிசாக வழங்கினார். இந்திரனின் அவையில் இருந்த அப்ஸரஸ்களில் ஊர்வசிதான் அழகில் சிறந்தவர் என்று பாகவத புராணம் கூறுகிறது.
மற்றொரு கதை
ஊர்வசியின் பிறப்பு பற்றி மற்றொரு கதையும் உள்ளது. நாராயணா ஒரு மலரை எடுத்து தனது தொடையின் மீது வைத்தார், அந்த மலரில் இருந்து ஊர்வசி தோன்றினார். ஊர்வசி என்று அவருக்கு பெயர் வைக்க காரணம் அவர் தொடையில் இருந்து தோன்றியதுதான். சமஸ்கிருதத்தில் உரு என்றால் தொடை என்று அர்த்தம்.