Just In
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 8 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வக்ர சனியால் அக்டோபர் 23 வரை இந்த ராசிக்காரர்களிடம் ஏராளமான செல்வம் சேருமாம்...
கிரகங்கள் வக்ர நிலையில் மோசமான பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கும். அப்படி தான் வக்ர சனியால் அக்டோபர் 23 வரை 3 ராசிக்காரர்கள் கையில் செல்வம் அதிகம் சேரும்.
ஜோதிடத்தில், சனி துன்பம், வலி, நோய், தாதுக்கள், எண்ணெய், இரும்பு, அறிவியல் போன்றவற்றின் கிரகமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சனி கும்பம் மற்றும் மகர ராசியின் அதிபதியாவார் மற்றும் பூசம், அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியும் ஆவார். சனி பகவான் என்றாலே தீங்கு விளைவிப்பவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலைல் இருந்தால், அவர் நற்பலன்களை அள்ளி வழங்குவார். அதுவே பாதகமான நிலையில் இருந்தால், வாழ்க்கை சாதாரணமாகவும், பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும்.
இத்தகைய சனி 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். அதன் பின் ஜூன் 5 ஆம் தேதி கும்பத்தில் வக்ரமாக மாறி பயணிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணிக்க ஆரம்பித்தார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் அக்டோபர் 23 வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார். கிரகங்கள் வக்ர நிலையில் மோசமான பலன்களை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்கும். அப்படி தான் வக்ர சனியால் அக்டோபர் 23 வரை 3 ராசிக்காரர்கள் கையில் செல்வம் அதிகம் சேரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் வாருங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் உள்ளார். இந்த வீடு தொழில், வேலை மற்றும் வணிகத்தின் வீடாகும். எனவே வக்ர சனியால் மேஷ ராசிக்காரர்களின் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றியும், பணமும் கிடைக்கும். கூடுதலாக, வணிகத்தை விரிவுபடுத்த முடியும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் பெரும் பொருளாதார வெற்றியையும், வளர்ச்சியையும் தரும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகியுள்ளார். இது வருவாய் மற்றும் செல்வத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருளாதார பலன்களைப் பெறுவதோடு, முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்த புதிய வணிக உறவுகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் அல்லது வியாபாரிகள் இக்காலத்தில் பெரும் வெற்றியை அனுபவிப்பார்கள்.
தனுசு
வக்ர சனியால் அக்டோபர் வரை தனுசு ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகியுள்ளார். இது பேச்சு மற்றும் பணத்தின் வீடாகும். இதன் விளைவாக பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க சிறந்த காலமாக இருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்களில் சிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு தொடர்பான வேலையை செய்பவர்களுக்கு இக்காலம் வெற்றிகரமானதாக இருக்கும். கார், வீடு போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.