Just In
- 11 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 39 min ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 1 hr ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 2 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சனி-புதன் வக்ர நிவர்த்தி: அக்டோபரில் இருந்து இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பிக்குது...
வக்ரமாக இருக்கும் சனி மற்றும் புதனால் நிறைய ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அக்டோபரில் இருந்து இந்நிலை மாறப்போகிறது.
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் வக்ரமாக இருக்கும் புதன் மற்றும் சனி அக்டோபர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளன. இதில் சனி பகவான் நீதிமான், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்கக்கூடியவர். புதன் புத்திகாரகன் மற்றும் கிரகங்களின் இளவரசன் ஆவார்.
பொதுவாக கிரகங்கள் வக்ரமாக இருக்கும் போது, நற்பலனை விட கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். அதுவும் வக்ரமாக இருக்கும் சனி மற்றும் புதனால் நிறைய ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அக்டோபரில் இருந்து இந்நிலை மாறப்போகிறது. ஏனெனில் புதன் மற்றும் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளன. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சனி மற்றும் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் வழக்கத்தை விட மிகவும் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். அதோடு, நீண்ட நாட்களாக வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இம்மாதத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்கும்.
ரிஷபம்
அக்டோபரில் சனி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களின் வக்ர நிவர்த்தியால் ரிஷப ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறுவார்கள். முக்கியமாக சனி வக்ர நிவர்த்திக்கு பின் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் சமூகத்தில் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
சனி, புதன் கிரகங்களின் வக்ர நிவர்த்தியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதன், சனி வக்ர நிவர்த்தியால் மிகுந்த நற்பலனைப் பெறுவார்கள். தீபாவளி முதல் இவர்களிடம் செல்வம் அதிகம் சேரும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடி கிடைக்காத தனுசு ராசிக்காரர்களுக்கு, இம்மாதத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)