Just In
- 2 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 2 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 3 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 4 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News கெஜ்ரிவாலை மரணத்தை நோக்கி தள்ளுகிறார்கள்! பாஜக மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்! அதிரும் தலைநகர் டெல்லி
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
2022 சனி வக்ர பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இருந்து இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
கும்ப ராசியில் பயணிக்கும் சனி 2022 ஜூன் 05 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது.
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், அஸ்தமனம், உதயம் மற்றும் பிற்போக்கு போன்றவை மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கிரகங்கள் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வகையில் மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஒன்பது கிரகங்களும் வெவ்வேறு கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. இவற்றில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். ஒருவரது செயல்கள் நல்லதாக இருந்தால், அவருக்கு நற்பலன்களையும், அதுவே மோசமானதாக இருந்தால் அசுப பலன்களையும் சனி வழங்குவார்.
சனி வக்ர பெயர்ச்சி 2022
கிரகங்களில் சனி 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். கும்ப ராசியில் பயணிக்கும் சனி 2022 ஜூன் 05 ஆம் தேதி வக்ர நிலையில் மாறி பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பிற்போக்கு அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்க வாய்ப்புள்ளன. சனியின் இந்த வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது சனி வக்ர பெயர்ச்சியால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை உங்கள் விருப்பங்கள் ஏதாவது நிறைவேறாமல் இருந்தால், இக்காலத்தில் அது நிச்சயம் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நற்செய்திகளையும் பெறுவீர்கள். முக்கியமாக விருச்சிக ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்களின் சுகபோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்பட்டு வந்திருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். போட்டித் தேர்வை எழுதியுள்ள மாணவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவார்கள். தொழிலில் சில நற்செய்திகளையும் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. முக்கியமாக உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.