For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடவுளை வழிபட ஆட்டை உயிரோடு சாப்பிடுபவர்கள்... தலைசுற்ற வைக்கும் உலகின் கடவுள் வழிபாட்டு முறைகள்...!

இந்தியாவில் பரவலாக பசுக்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இதுதவிர பாம்பு, நாய் போன்றவற்றையும் வழிபடும் வழக்கம் உள்ளது.

|

உலகம் முழுவதும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாடுகள் உள்ளது. உருவ வழிபாடு என்பது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம், அதேபோலத்தான் மிருக வழிபாடும். ஏனெனில் இந்து தெய்வங்களில் ஒவ்வொருவரும் ஒரு மிருகத்தை தங்களின் வாகனமாக கொண்டுள்ளனர். இதேபோல உலகின் பல்வேறு கலாச்சாரங்களில் மனித குலத்தின் அம்சமாகவும், நமது கிரகத்துடனான நமது தொடர்பையும் மிருகங்கள் சித்தரிக்கின்றன.

Sacred Animals From Different Cultures

இந்தியாவில் பரவலாக பசுக்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இதுதவிர பாம்பு, நாய் போன்றவற்றையும் வழிபடும் வழக்கம் உள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இந்த புனித விலங்குகள் அவற்றின் தெய்வீக பண்புகள் மற்றும் புராண காரணங்களால் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளில் வழிபடப்படுகின்றன. இந்த பதிவில் பல்வேறு மக்களால் வழிபடப்படும் மிருகங்கள் அவற்றிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புலி

புலி

கொரிய நாட்டுப்புறக் கதைகள் புலியை ஒரு தெய்வீக ஆவி என்றும் மேற்கின் பாதுகாவலர் என்றும் கூறுகின்றன. புலிகள் இதன் காரணாமாக தைரியம் மற்றும் சக்தியின் அடையாளங்களாக கருதப்படுகின்றன, தீமையை விரட்டியடிக்கவும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும் உதவுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்புலிகள் மிகவும் புனிதமானவையாக நம்பப்படுகிறது. இந்த உயிரினங்கள் உலகத்தைப் பற்றி உயர்ந்த புரிதலுக்கான நிலையை அடைவதற்கு சோதனைகளையும் இன்னல்களையும் வென்றுள்ளன, அவற்றின் வெள்ளை ரோமங்கள் அவற்றின் ஞானத்தை அடையாளப்படுத்துகின்றன. மற்ற கலாச்சாரங்களும் புலிகளை மிகவும் மதிக்கின்றன. பாக் ஜாத்ரா என்ற புலி திருவிழா நேபாளம் முழுவதும் நடத்தப்படுகிறது. மேலும், வியட்நாமில் உள்ள கிராமங்களில் இந்த வலிமைமிக்க மற்றும் தெய்வீக உயிரினத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் உள்ளன.

நாய்

நாய்

மனிதனின் சிறந்த நண்பரான நாய்களும் நேபாளத்தின் சில பகுதிகளில் குகூர் திஹார் திருவிழாவின் போது வழிபடப்படுகின்றன. இந்த திருவிழாவின் போது, நாய்களுக்கு சுவையான உணவளிக்கப்படுகிறது, மேலும் அவற்றை சாமந்தி பூக்கள் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு திலக்கத்தைப் பூசுவதன் மூலமும், தூபக் குச்சிகளை எரிப்பதன் மூலமும் கௌரவிக்கப்படுகின்றன. இந்து கலாச்சாரத்தில், தத்தாத்ரேயர் நான்கு நாய்களுடன் சித்தரிக்கப்படுகிறார், மேலும் இந்த நாய்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன (ரிக்-வேதம், சம வேதம், யஜூர்-வேதம், மற்றும் அதர்வ-வேதம்).

பன்றி

பன்றி

பண்டைய எகிப்தின் மக்கள் பன்றிகளை புனிதமாகவும் ஒரு முக்கியமான தெய்வமாகவும் கருதினர். புயல்கள், குழப்பங்கள், பாலைவனங்கள் மற்றும் இருள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நிமிர்ந்த முட்கள் கொண்ட பன்றியாக அவர்களின் தெய்வம் தோன்றியது. மேலும், கடவுளின் பெயரால் பன்றிகள் பலியிடப்பட்டன என்பதும் அறியப்படுகிறது. கிரேக்கர்கள் தங்கள் தெய்வமான டிமீட்டருக்கு பன்றிகளை பலியிடும் சடங்கையும் செய்கிறார்கள். டிமீட்டர் என்பது தானிய, கருவுறுதல், தூய்மை ஆகியவற்றின் தெய்வம். சீன இராசி படி, பன்னிரண்டு நல்ல விலங்குகளில் பன்றிகளும் ஒன்று. செல்ட்ஸ் மொக்கஸ் என்ற ‘பன்றிக் கடவுளையும்' வணங்கினார். பிரார்த்தனை விழாவுக்குப் பிறகு, பன்றி இறைச்சி சமைப்பது சடங்குகளில் ஒன்றாகும்.

MOST READ: கொரோனா வைரஸ் எப்படி அழியப்போகிறது தெரியுமா? விஞ்ஞானிகள் கூறிய நல்ல செய்தி...!

யானை

யானை

இந்து கலாச்சாரத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் விலங்குகளில் யானை ஒன்றாகும். உண்மையில், மிகவும் போற்றப்படும் இந்து கடவுளான விநாயகர் யானைத் தலை கொண்டவர். அவர் ‘விக்னஹார்தா', அதாவது அனைத்து தடைகளையும் நீக்குபவர் என்று கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது, குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில். பல கோவில்களில் யாத்ரீகர்கள் யானையின் ஆசீர்வாதத்தை நாடுகிறார்கள். யானைகள் வீரம், ஞானம் மற்றும் தைரியத்தைக் குறிக்கின்றன.

ஆடு

ஆடு

சிரியாவில் பண்டைய காலங்களில், ஆடுகள் வெள்ளி நெக்லஸால் மூடப்பட்டிருந்தன, அவை ராஜாவின் திருமணத்தில் நகரத்தில் திறந்து விடப்பட்டன. அவர்களின் நம்பிக்கையின் படி அவை தீயசக்திகளை தங்களுடன் சுமந்து கொண்டிருந்தன. சிலேனஸ், சாட்டர்ஸ் மற்றும் ஃபான்ஸ் அவர்களின் உடல் பாகங்கள் சில ஆடு வடிவத்தில் இருந்தன. லெஸ்ஸி என்று அழைக்கப்படும் வடக்கு ஐரோப்பா சமூகம் ஆட்டின் கொம்புகள், காதுகள் மற்றும் கால்களைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில், மக்கள் ஆடுகளை தங்கள் முதன்மை தெய்வமாக கருதுகின்றனர். கிரேக்க கடவுளான ‘பான்' ஆடு அம்சங்களான கொம்புகள் மற்றும் தாடி போன்றவற்றுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. பான் தவிர, ஆடு ரோமானிய காலத்தில் டியோனீசஸுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது மற்றும் அவரை வணங்குவதற்காக, ரோமானியர்கள் ஒரு ஆட்டை உயிரோடு சாப்பிடுவார்கள்.

குதிரை

குதிரை

குதிரை வழிபாடு பெரும்பாலும் இந்தோ-ஐரோப்பிய மற்றும் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் செய்யப்படுகிறது. மேலும், நீர் தெய்வம் போஸிடான் முன்பு குதிரையின் தோற்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. குதிரையும் கழுதையும் ரோமானிய கடவுளுக்கு புனிதமானது. இந்து மதம் மற்றும் புத்த மதத்தில், ஹயக்ரீவா என்ற குதிரை தலை கடவுள் வணங்கப்படுகிறார். இந்தியாவில் கோண்ட்ஸ் பழங்குடி மக்கள் கல் வடிவ குதிரையை வணங்குகிறார்கள்.

MOST READ: இதனை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா?

பூனை

பூனை

பண்டைய எகிப்து மக்கள் குறிப்பாக பூனை வழிபாட்டிற்கு பெயர் பெற்றவர்கள். பாம்புகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூனையின் திறன் அவற்றை சமநிலை மற்றும் கருணையின் அடையாளமாக மாற்றியது. மேலும், ஒரு பூனையைக் கொல்வது எகிப்தியர்களிடையே தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் இறந்த சில பூனைகள் மனிதர்களைப் போலவே மம்மியாக்கப்பட்டன.

சிங்கம்

சிங்கம்

சிங்கம் பல கலாச்சாரங்களில் சக்தி மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. துர்கா தேவி தனது வாகனமாக சிங்கம் வைத்திருப்பதை இந்து கலாச்சாரம் சித்தரிக்கிறது. சீனாவில், சிங்கம் தீமைகளைப் பாதுகாப்பவனைக் குறிக்கிறது, கோயில்களில் பெரும்பாலும் ஒரு பாதுகாவலர் சிங்கம் இருக்கும். பண்டைய எகிப்தில், அகர் போன்ற பல கடவுளர்கள் சிங்கத் தலை கொண்டவர்கள். நரசிம்ம அவதாரத்தில், விஷ்ணு தீமைக்கு எதிராக ஒரு பாதுகாவலனாக செயல்படுகிறார், மேலும் ஹிரண்யகாஷிபு என்ற அரக்கனைக் கொன்றார்.

ஓநாய்

ஓநாய்

துருக்கிய புராணங்களின் படி அவர்கள் ஓநாய் சந்ததியினர் என்று நம்புகிறார்கள். பூர்வீக அமெரிக்கர்கள் கூட ஓநாய் கடவுளாக வணங்கினர், அதை தைரியம், திசை, குடும்பம், சகிப்புத்தன்மை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் அடையாளமாகக் கண்டனர்.

MOST READ: இந்த ராசிக்காரங்க ரொம்ப ஈஸியா மன்னிப்பு கேட்ருவாங்க... ஈகோனா இவங்களுக்கு என்னனே தெரியாதாம்...

கழுகு

கழுகு

பூர்வீக அமெரிக்கர்களின் மிகவும் மதிக்கப்படும் விலங்குகளில் கழுகு ஒன்றாகும். ஒரு கழுகு பார்வை, வீரம், குணப்படுத்தும் சக்தி மற்றும் நம் கனவுகளை அடைய சுதந்திரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. உண்மையில், கழுகு இறகுகள் இருப்பது பூர்வீக அமெரிக்க கலாச்சாரத்தில் கௌரவமாகக் கருதப்படுகிறது, மேலும் இவற்றை தலைக்கவசத்தில் அணிந்தவர் தைரியமான செயலைச் செய்து புகழை சம்பாதிக்க வேண்டும். இந்து கலாச்சாரத்தில், ‘கருடா' (கழுகு) என்பது விஷ்ணுவின் வாகனமாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sacred Animals From Different Cultures

Here are some animals that are worshipped in different cultures
Story first published: Friday, March 27, 2020, 12:35 [IST]
Desktop Bottom Promotion