Just In
- 2 hrs ago Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- 8 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 10 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 12 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
Don't Miss
- Sports இந்த சிஎஸ்கே வீரர் ஆர்சிபியின் ஸ்லீப்பர் செல்.. கடைசி வாய்ப்பு கொடுக்கும் தோனி.. மாற்று வீரர் ரெடி
- Finance இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.. உங்க குழந்தையை கில்லாடி ஆகிடுவாங்க..!
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- News நிலப்பட்டா தொலைந்து விட்டதா? பழைய பட்டாவை மீண்டும் பெற முடியுமா? நிலத்தின் பட்டா பெற ஈஸி வழி இதுதான்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராமகிருஷ்ண ஜெயந்தி பற்றி நீங்க அறிந்திடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலு
ராமகிருஷ்ண பரம்ஹன்சா இந்தியாவின் முக்கியமான புனிதர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். யோகாவை வலியுறுத்திய துறவி மற்றும் ஆன்மீகத் தலைவரான சுவாமி விவேகானந்தரின் குருவாகவும் இருந்தார். ராமகிருஷ்ண பரம்ஹன்சா மேற்கு வங்காளத்தில் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாய் பிறந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அவரது பிறந்த நாளை ராமகிருஷ்ண ஜெயந்தி என்று கடைப்பிடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 2022 மார்ச் 4ஆம் தேதியன்று வருகிறது ராமகிருஷ்ண ஜெயந்தி. இந்த நாளைப் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையை படியுங்கள்.
தேதி
ராமகிருஷ்ண பரமஹம்சா 1836 பிப்ரவரி 18 அன்று ஒரு இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், வரலாற்று பதிவுகளின்படி, ராமகிருஷ்ண பரமஹம்சா இந்து மாதமான பால்கூனில் சுக்ல பக்ஷாவின் திவித்தா திதியில் பிறந்தார். இந்த ஆண்டு 2012 மார்ச் 4ஆம் தேதியன்று வருகிறது அவருடைய பிறந்த தினம்.
விவேகானந்தரின் குரு
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
ஆன்மீக சிந்தனை கொண்டவர்
சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
காளி தேவியை வணங்கினார்
ராமகிருஷ்ண பரமஹம்சா, மத குடும்பத்தில் பிறந்தவர். காளி தேவியின் பக்தராக இருந்த அவர் மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற தக்ஷினேஷ்வர்ஸ் காளி கோயிலின் பாதிரியாராக பணியாற்றினார். அவரது சகோதரரின் மறைவுக்குப் பிறகு, ராமகிருஷ்ணர் காளி தேவி மீது நம்பிக்கை வைத்தார். இருப்பினும், காளி தேவியை தனது தாயாக நம்புவதற்கு தொடர்ச்சியான நிகழ்வுகள் அவரைப் பாதித்தன.
சாரதா தேவி
சாரதா தேவிக்கு 5 வயதாக இருந்தபோது ஸ்ரீ ராமகிருஷ்ணா திருமணம் செய்து கொண்டார். 17 வயதை எட்டியபின் கொல்கத்தாவிற்கு அண்ணனுடன் சென்றார். ராமகிருஷ்ணர் சரதா தேவியை காளி தேவியின் அவதாரமாகக் கருதி, அவரை "ஸ்ரீ மா" என்று அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு அழகியல் வாழ்க்கை வாழ விரும்பியதால் திருமண வாழ்க்கையில் வாழ அவர் விருப்பம் கொள்ளவில்லை. உண்மையான கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், எல்லா மூடநம்பிக்கைகளையும் நிராகரிக்கவும் அவர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். தன் மனைவி சாரதா தேவியை காளியாக எண்ணி வழிப்பட்டார்.
இறப்பு
ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் உள்ள தோட்டவீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகஸ்ட் 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணர் 1886 ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார்.
பொன்மொழிகள்
எக்காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய்பேசி பழகக்கூடாது. பொய்பேசி பழகுபவன் படிப்படியாக பாவக்காரியங்களை செய்யக்கூடிய கிழான மனநிலையை பெறுகிறான்.
யாருக்கு இந்த வாழ்க்கையில் சுகபோகங்கள் எல்லாம் அலுத்துவிட்டதோ, ஏதும் ருசிப்பதில்லையோ அவர்களே இதயப்பபூர்வமாக இறைவனை காண தவிக்கிறார்கள். அவர்களுக்காக இறைவன் ஓடிவருகிறார்.
பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.