Just In
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- 2 hrs ago Thoppi Amma: திருவண்ணாமலையில் நடமாடும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.. உண்மையில் யார் இவர்?
- 3 hrs ago மேஷத்தில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாதம் இந்த 3 ராசிக்காரங்க வேலையை இழக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
- 5 hrs ago தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
Don't Miss
- News மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2-3 மாசத்தில் என்ன நடக்கும் பாருங்க! அடித்து சொன்ன உதயநிதி..குட் நியூஸ்
- Automobiles மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
- Movies Maniratnam's Goat Life Review: எப்படி இது சாத்தியமாச்சு.. ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் விமர்சனம்!
- Technology நொடிக்கு நொடி ஆர்டர்.. ரூ.7998 பட்ஜெட்ல iPhone லெவல்.. AI கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Finance மதுரை ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பெங்களூர் நிறுவனத்தின் முக்கிய அப்டேட்..!!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
Ram Navami 2023: ராமர் மட்டும் ஏன் ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார் தெரியுமா?
Ram Navami 2023: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார். மன்னர்கள் பல மனைவிகளை மணப்பார்கள். பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார்.
தன்னை சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்!, துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!. ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ஸ்ரீ ராமரின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.
சீதாதேவியை மீட்க ராவணனுடன் போரிட்டு, அவனை கொன்ற பின்பு, போர் புரிந்த அசதியில், ஒரு பாறையின் மீது கால்களை நீட்டிக்கொண்டு ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தார் ஸ்ரீ ராமர் . அப்போது அவரை பார்க்க மண்டோதரி வந்தார். அவரிடம் ஸ்ரீராமபிரான், எதற்காக பார்க்க வந்தீர்கள் தாயே என்று மீண்டும் கேட்டார்.
அதற்கு மண்டோதரி, என் கணவரை வெல்வதற்கு மூவுலகிலும் யாரும் பிறக்கவில்லை. சர்வ வல்லமை படைத்த என் கணவரையே வென்ற உங்களுக்கு அப்படி என்ன பெரிதாக சிறப்பு இருக்கப்போகிறது, என்று பார்க்க வந்தேன், அவ்வளவு தான் என்று மண்டோதரி பதிலளித்தார். பார்த்துவிட்டீர்களா தாயே, என்று ஸ்ரீராமபிரான் கேட்க, அதற்கு மண்டோதரி, பார்த்தேன், என் நிழல் கூட உங்கள் மீது படக்கூடாது என்பதற்காக நீட்டியிருந்த கால்களை சட்டென்று மடக்கி உட்கார்ந்தபோதே, உங்களைப் பற்றி நான் முழுமையாக தெரிந்துகொண்டேன், என்றார்.
சூரிய குலத் தோன்றலாக அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்க்கை நடத்திய தசரத சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தாலும், தான் கடவுளாக இருந்தாலும் கூட, மனிதப் பிறவி எடுத்த காரணத்தால், கட்டிய மனைவியைத் தவிர வேறு ஓரு பெண்ணை மனதால் கூட ஏறெடுத்தும் பாரக்காமல் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராம பிரான்.
மற்ற கடவுள்கள் எல்லாம் ஒன்றுக்கு இரண்டு மனைவியரோடு இருக்க, ஸ்ரீராம பிரான் மட்டும் அன்னை சீதாதேவியோடு வாழ்ந்தவர். எத்தனையோ பெண்கள் ஸ்ரீராம பிரானை அடைய நினைத்தாலும் அதற்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் வாழ்ந்தவர்.