For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ram Navami 2023: ராமர் மட்டும் ஏன் ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார் தெரியுமா?

|

Ram Navami 2023: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஏகபத்தினி விரதனாக கொண்டாடப்படுகிறார். மன்னர்கள் பல மனைவிகளை மணப்பார்கள். பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தன்னை சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்!, துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!. ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ஸ்ரீ ராமரின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

Ram Navami 2023: What Is The Speciality Of Sri Rama

சீதாதேவியை மீட்க ராவணனுடன் போரிட்டு, அவனை கொன்ற பின்பு, போர் புரிந்த அசதியில், ஒரு பாறையின் மீது கால்களை நீட்டிக்கொண்டு ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தார் ஸ்ரீ ராமர் . அப்போது அவரை பார்க்க மண்டோதரி வந்தார். அவரிடம் ஸ்ரீராமபிரான், எதற்காக பார்க்க வந்தீர்கள் தாயே என்று மீண்டும் கேட்டார்.

அதற்கு மண்டோதரி, என் கணவரை வெல்வதற்கு மூவுலகிலும் யாரும் பிறக்கவில்லை. சர்வ வல்லமை படைத்த என் கணவரையே வென்ற உங்களுக்கு அப்படி என்ன பெரிதாக சிறப்பு இருக்கப்போகிறது, என்று பார்க்க வந்தேன், அவ்வளவு தான் என்று மண்டோதரி பதிலளித்தார். பார்த்துவிட்டீர்களா தாயே, என்று ஸ்ரீராமபிரான் கேட்க, அதற்கு மண்டோதரி, பார்த்தேன், என் நிழல் கூட உங்கள் மீது படக்கூடாது என்பதற்காக நீட்டியிருந்த கால்களை சட்டென்று மடக்கி உட்கார்ந்தபோதே, உங்களைப் பற்றி நான் முழுமையாக தெரிந்துகொண்டேன், என்றார்.

MOST READ: இன்று ஸ்ரீராமருக்கு இந்த பொருட்களைப் படைத்தால், கஷ்டங்கள் முற்றிலும் நீங்கும் எனத் தெரியுமா?

சூரிய குலத் தோன்றலாக அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்க்கை நடத்திய தசரத சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தாலும், தான் கடவுளாக இருந்தாலும் கூட, மனிதப் பிறவி எடுத்த காரணத்தால், கட்டிய மனைவியைத் தவிர வேறு ஓரு பெண்ணை மனதால் கூட ஏறெடுத்தும் பாரக்காமல் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராம பிரான்.

மற்ற கடவுள்கள் எல்லாம் ஒன்றுக்கு இரண்டு மனைவியரோடு இருக்க, ஸ்ரீராம பிரான் மட்டும் அன்னை சீதாதேவியோடு வாழ்ந்தவர். எத்தனையோ பெண்கள் ஸ்ரீராம பிரானை அடைய நினைத்தாலும் அதற்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் வாழ்ந்தவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ram Navami 2023: What Is The Speciality Of Sri Rama

Mandodari replied to Sriramar, "I have come to see what is going to be so special for you, who has won my husband Ravana, the Almighty. Sriramar asked, Mother? Have you seen/ For that, Mandodari replied immediately, ’looked’. As you sat down with your legs stretched out so that my shadow could not touch you, I said, "I know you better."
Desktop Bottom Promotion