Just In
- 21 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது?
பொதுவாக ஒரு நல்ல நாளன்று தானம் வழங்குவது மிகவும் நல்லது. அதிலும் தமிழர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் போது தானம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தமிழர்கள் பாரம்பரியமாக மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் பொங்கல். இந்த பொங்கல் பண்டிகையின் முதல் நாளில் பழையன கழிந்து புதியன புகுவதற்கு போகி பண்டிகை கொண்டாடப்படகிறது. இரண்டாம் நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அறுவடை செய்த நெல்லில் இருந்து பெறப்பட்ட புத்தரிசியைக் கொண்டு பொங்கலிட்டு தைப்பொங்கல் பண்டிகையும், அதற்கு மறுநாள் விவாசயத்திற்கு உதவி புரிந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஒரு நல்ல நாளன்று தானம் வழங்குவது மிகவும் நல்லது. அதிலும் தமிழர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையின் போது தானம் செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்போது ராசிப்படி ஒவ்வொரு ராசிக்காரரும் பொங்கல் பண்டிகையன்று எந்த பொருளை தானம் செய்யலாம் என்பதைக் காண்போம். அதைப் படித்து அந்த பொருட்களை தானம் செய்யுங்கள்.
மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே மேஷ ராசிக்காரர்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காக பொங்கல் பண்டிகையன்று வெல்லம் மற்றும் எள்ளு விதைகளை தானமாக வழங்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், பொங்கல் பண்டிகை நாளில் வறுமையில் வாடுபவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கி தானமாக கொடுக்கலாம். அதோடு எள்ளு விதைகளையும் தானமாக வழங்குவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின் போது எள்ளு விதைகள் மற்றும் முலாம் பழத்தை தானமாக வழங்குவது அதிர்ஷ்டத்தை அளிக்கும். அதோடு பசு மாட்டிற்கு பச்சைப் புல்லைக் கொடுப்பது நன்மை பயக்கும்.
கடகம்
ஜோதிடத்தின் படி, கடக ராசியின் அதிபதி சந்திரன். எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்க பொங்கல் பண்டிகையன்று எள்ளு விதைகள், பழங்கள் மற்றும் ஆடைகளை தானமாக வழங்க வேண்டும்.
சிம்மம்
சிங்கம் போன்ற கம்பீர குணத்தைக் கொண்டவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று எள்ளு விதைகள் மற்றும் போர்வையை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
கன்னி
ஜோதிடத்தின் படி, கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று எள்ளு, போர்வைகள், எண்ணெய் மற்றும் உளுத்தம் பருப்பை தானம் செய்வது நல்லது. அதோடு பசுவுக்கு தீவனத்தை வழங்கவும் வேண்டும்.
துலாம்
ஜோதிடத்தின் படி, துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சந்தனம், பால் மற்றும் அரிசி போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இதனால் இந்த வருடம் இவர்களுக்கு பிரகாசமாக இருக்கும்.
விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின் போது அரிசி மற்றும் பருப்பு வகைகளை தானமாக வழங்குவது நல்லது. மேலும் வெல்லத்தை தானம் செய்வதும் நன்மை பயக்கும்.
தனுசு
ஜோதிடத்தின் படி, தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் தினத்தன்று எள்ளு விதைகள் மற்றும் கடலைப் பருப்பை தானமாக வழங்குவது, அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
மகரம்
ஜோதிடத்தின் படி, மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் எண்ணெய், எள்ளு விதைகள், போர்வை அல்லது புத்தகங்களை தானமாக வழங்குவது, அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அளிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின்று எள்ளு விதைகள் மற்றும் எண்ணெயை தானமாக வழங்குவது நல்லது.
மீனம்
ஜோதிடத்தின் படி, மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக பொங்கல் பண்டிகை நாளில் எள்ளு விதைகள், எண்ணெய், போர்வை அல்லது புத்தகங்களை தானமாக வழங்க வேண்டும்.