For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் தலையை வெட்டிய பரசுராமர் ஏன் தெரியுமா?

மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் 6ஆவது அவதாரமாக தோன்றியவர் பரசுராமர். இன்றைக்கும் நம் பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்கள் ஏழு பேர். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்ர

|

பரசுராமர் தனது அப்பா சொன்னதை கேட்டு கோடாரியால் தனது அம்மாவின் தலையை வெட்டி உயிரை எடுத்திருக்கிறார். அது மட்டும்தான் பலருக்கும் தெரியும். அம்மாவை கொன்ற அவரேதான் தனது அப்பாவிடம் சொல்லி உயிரை திரும்ப கொண்டு வந்திருக்கிறார். தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்ந்திருக்கிறார் பரசுராமர். மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படும் பரசுராமர் அவதரித்தது அட்சய திருதியை நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

Parshuram Jayanti 2020: Date, Importance And Significance

தசாவதாரத்தில் மஹாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் மொத்தம் ஒன்பது. அதில் 6 ஆவதாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர் அவதாரம். அதுவரை நிகழ்த்திய 5 அவதாரங்களிலும், எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் அசுரர்களை அழித்த மஹாவிஷ்ணு, பரசுராமர் அவதாரத்தில் தான் முதன் முதலில் ஆயுதத்தை பயன்படுத்தினார்.

பரசுராமர் இன்றைக்கும் நம்முடைய பூமியில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். புராணங்களில் படித்தவர்களில் ஏழு பேர் நம் பூமியில் இன்றைக்கும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார்களாம். ஆஞ்சநேயர், விபீசணன், வியாசர், அஸ்வத்தாமன், பரசுராமர், மகாபலி சக்ரவர்த்தி, மார்க்கண்டேயர் ஆகியோர்தான் அந்த ஏழு பேர். இன்றைக்கு பரசுராமரை பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Parshuram Jayanti 2020: Date, Importance And Significance

Parasuram Jayanti is celebrated to honor the birth anniversary of Maharishi Parasuram, who is considered to be the 6th avatar of Lord Vishnu in the Hindu mythalogy. Parshuram Jayanti is an important festival of Hindus.
Desktop Bottom Promotion