Just In
- 34 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கும் நிர்ஜல ஏகாதசியின் மகிமை என்ன தெரியுமா?
ஏகாதசி விரதம் மகிமை வாய்ந்தது. நிர்ஜல ஏகாதசி நாளில் தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
இந்துக்கள் இருக்கும் விரதத்திலேயே சிறந்த விரதம் என்று ஏகாதசி விரதத்தை வைஷ்ணவர்கள் சொல்வார்கள். ஏகாதசி திதி மாதத்திற்கு இரண்டு முறை வருவதாகும். அமாவாசை முடிந்து 11வது நாள் வளர்பிறை ஏகாதசி, பௌர்ணமி முடிந்து 11வது நாள் தேய்பிறை ஏகாதசியாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனி வளர்பிறை ஏகாதசி இந்த ஆண்டு நிர்ஜல ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. ஜூன் 21 ஆம் தேதி நிர்ஜல ஏகாதசியாக அனுஷ்டிக்கப்படுகிறது. தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பல தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும்.
இந்துக்கள் அனைவருமே, வைகுண்ட ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தாலும், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால். வைணவர்கள் அனைவருமே ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசிக்கும் முக்கியத்துவம் அளித்து விரதமும் இருந்து வருகின்றனர். காரணம் ஏகாதசி தினமானது, மோட்சத்தை அளிப்பதற்கு உரிய தினமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயரும், அந்த நாட்களில் இருக்கும் ஏகாதசி விரதத்துக்கு உரிய பலன்களும் கிடைக்கும் என்றாலும், அனைத்து ஏகாதசி நாட்களிலும் இருக்கும் விரதமும், வைகுண்ட பதவிக்கு நம்மை இட்டுச்செல்லம் என்பது நிச்சயம். வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் விசேஷமானது. இந்தத் திதியில் பிரம்மா குபேரனைத் தோற்றுவித்தார் என்பது ஐதீகம். அவர் ஆணைப்படி குபேரன் நிதிக்கு அதிபதி ஆனார். ஏகாதசி விரதம் அன்று வெறும் பழம் மட்டும் உண்டு குபேரனைப் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.