For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுல இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா பண பிரச்சனையை அதிகமா சந்திப்பீங்க...

வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். முக்கியமாக வீட்டில் பணம் தங்காமல், பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

|

ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு அறை மட்டுமின்றி, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். முக்கியமாக வீட்டில் பணம் தங்காமல், பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

Never Do These Mistakes Otherwise You Will Have To Face Financial Problems In Tamil

உங்கள் வீட்டில் இம்மாதிரியான சூழ்நிலையை சந்தித்தால், உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்கள் நிறைந்த செடிகள்

முட்கள் நிறைந்த செடிகள்

வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வைத்திருப்பது நல்லதல்ல. ஒருவேளை வைத்திருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஏனெனில் இந்த வகை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலின் கதவுகளை மூடும். மேலும் இந்த வகை செடிகள் வீட்டில் நிதி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த செடிகள் இருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.

சிலந்தி வலை

சிலந்தி வலை

வாஸ்துப்படி வீட்டின் தூய்மை மிகவும் இன்றியமையாதது. வீட்டை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்காதீர்கள். வீட்டில் குப்பைகளை தேக்கி வைத்திருக்காதீர்கள். மேலும் வீட்டில் சிலந்தி வலைகள் இருந்தால், அதை உடனே சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் சிலந்தி வலை உள்ள வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. சுத்தமான வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வாள். எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குழாயில் இருந்து நீர் வடிவது

குழாயில் இருந்து நீர் வடிவது

வீட்டின் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிவது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஒருவருடைய வீட்டில் காரணமின்றி நீர் சொட்டிக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் வறுமை இருக்கும். பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவ உங்கள் வீட்டில் குழாயில் இருந்து நீர் வடிந்தால், அதை உடனே சரிசெய்ய முயலுங்கள்.

வெளியே இருந்து உள்ளே வீட்டை பெருக்க வேண்டாம்

வெளியே இருந்து உள்ளே வீட்டை பெருக்க வேண்டாம்

வீட்டை பெருக்க சரியான வழிகள் உள்ளன. வீட்டை துடைப்பம் கொண்டு பெருக்கும் போது, விளக்குமாறு நேராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துடைப்பத்தை எப்போதும் வீட்டின் எதிர்பக்கத்தில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அது வீட்டில் பண நெருக்கடியை உண்டாக்கும். மேலும் வீட்டை பெருக்கும் போது உள்ளே இருந்து தான் வெளியே குப்பைகளை தள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன் எதிர்மறை சக்தியும் வீட்டை விட்டு வெளியேறும். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும்.

துடைப்பம் லட்சுமியின் அடையாளம்

துடைப்பம் லட்சுமியின் அடையாளம்

லட்சுமி தேவியின் அடையாளங்களில் ஒன்றாக துடைப்பம் கருதப்படுகிறது. இந்த துடைப்பத்தை ஒருபோதும் காலால் மிதிக்கக்கூடாது. மேலும் இதை எப்போதும் மறைவான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும். வெளியாட்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களின் கண்ணில் படாத இடத்தில் துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never Do These Mistakes Otherwise You Will Have To Face Financial Problems In Tamil

According to Vastu Shastra, do not make these mistakes even by mistake, otherwise you will have to face financial problems. Read on to know more...
Story first published: Saturday, July 30, 2022, 13:46 [IST]
Desktop Bottom Promotion