Just In
- 11 min ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 1 hr ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 4 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
Don't Miss
- Movies வேணாம் வேற மாதிரி ஆயிடும்… பயில்வானின் கேள்வியால் கடுப்பான விஷால்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டுல இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா பண பிரச்சனையை அதிகமா சந்திப்பீங்க...
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். முக்கியமாக வீட்டில் பணம் தங்காமல், பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். வாஸ்துப்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு அறை மட்டுமின்றி, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க வைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். முக்கியமாக வீட்டில் பணம் தங்காமல், பண பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
உங்கள் வீட்டில் இம்மாதிரியான சூழ்நிலையை சந்தித்தால், உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
முட்கள் நிறைந்த செடிகள்
வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வைத்திருப்பது நல்லதல்ல. ஒருவேளை வைத்திருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஏனெனில் இந்த வகை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலின் கதவுகளை மூடும். மேலும் இந்த வகை செடிகள் வீட்டில் நிதி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த செடிகள் இருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.
சிலந்தி வலை
வாஸ்துப்படி வீட்டின் தூய்மை மிகவும் இன்றியமையாதது. வீட்டை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்காதீர்கள். வீட்டில் குப்பைகளை தேக்கி வைத்திருக்காதீர்கள். மேலும் வீட்டில் சிலந்தி வலைகள் இருந்தால், அதை உடனே சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் சிலந்தி வலை உள்ள வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. சுத்தமான வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வாள். எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குழாயில் இருந்து நீர் வடிவது
வீட்டின் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிவது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஒருவருடைய வீட்டில் காரணமின்றி நீர் சொட்டிக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் வறுமை இருக்கும். பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவ உங்கள் வீட்டில் குழாயில் இருந்து நீர் வடிந்தால், அதை உடனே சரிசெய்ய முயலுங்கள்.
வெளியே இருந்து உள்ளே வீட்டை பெருக்க வேண்டாம்
வீட்டை பெருக்க சரியான வழிகள் உள்ளன. வீட்டை துடைப்பம் கொண்டு பெருக்கும் போது, விளக்குமாறு நேராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துடைப்பத்தை எப்போதும் வீட்டின் எதிர்பக்கத்தில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அது வீட்டில் பண நெருக்கடியை உண்டாக்கும். மேலும் வீட்டை பெருக்கும் போது உள்ளே இருந்து தான் வெளியே குப்பைகளை தள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன் எதிர்மறை சக்தியும் வீட்டை விட்டு வெளியேறும். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும்.
துடைப்பம் லட்சுமியின் அடையாளம்
லட்சுமி தேவியின் அடையாளங்களில் ஒன்றாக துடைப்பம் கருதப்படுகிறது. இந்த துடைப்பத்தை ஒருபோதும் காலால் மிதிக்கக்கூடாது. மேலும் இதை எப்போதும் மறைவான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும். வெளியாட்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களின் கண்ணில் படாத இடத்தில் துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.