Just In
- 31 min ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 1 hr ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 2 hrs ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
Don't Miss
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நவராத்திரி ஏழாம் நாளில் காளராத்திரி தேவியின் அருளைப் பெற இந்த மந்திரத்தை சொல்லுங்க...
Navratri 2023: நவராத்திரி என்பது துர்கா தேவியைப் போற்றும் விதமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழாவாகும். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் போற்றி வணங்கப்படுகிறது.
அந்த வகையில் ஏழாவது நாளாக துர்கையின் காளராத்திரி வடிவம் வழிபடப்படுகிறது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமான ரூபம் காளராத்திரி. இதில் காள என்றால் நேரம், மரணம் மற்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும்.
துர்கை அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். இப்போது நவராத்திரியின் ஏழாவது நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியை வழிபடும் நேரம், பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் என்னவென்று காண்போம்.
MOST READ: செல்வம், கல்வி, வீரம் பெருக சொல்ல வேண்டிய நவதுர்கை மந்திரங்கள்!
காளராத்திரி தேவியின் வடிவம்
காளராத்திரி தேவி அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆக்ரோஷமான ரூபத்தில் இருப்பவர். மேலும் இவரது தேகம் கருமை நிறத்தில் இருக்கும். இவர் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, நான்கு கரங்களைக் கொண்டிருப்பார். இவரது ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மற்றொரு கரத்தில் வாளும் இருக்கும். எஞ்சிய இரண்டு கரங்கள் பக்தர்களுக்கு அபயத்தை வழங்கும். காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர்.
பூஜை முறைகள்
* அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிய வேண்டும்.
* பூஜை அறையில் காளராத்திரி தேவியை வைக்கவும்.
* தேவியை பூக்களால் அலங்கரித்து, ஊதுபத்தியை ஏற்ற வேண்டும்.
* பின் ஒரு கலசத்தை எடுத்து, அதை அரிசியால் நிரப்பி, சுற்றி மாவிலைகளை வைத்து, மேலே தேங்காயை வைக்க வேண்டும்.
* அடுத்து விளக்கை ஏற்றி, தேவிக்கான மந்திரத்தைக் கூறி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
காளராத்திரி தேவிக்கான மந்திரம்
"வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,
வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி"
காளராத்திரி தேவிக்கான பிரசாதம்
நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் வழிபடப்படும் காளராத்திரி தேவியைப் பிரியப்படுத்த, அவருக்கு விருப்பமான வெல்லம் அல்லது வெல்லத்தால் செய்த பலகாரங்களைப் படையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவி காளராத்திரி உங்களின் வறுமையை நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருவார்.