Just In
- 18 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 58 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் 4வது ஞாயிற்றுக் கிழமை அன்று பெற்றோா் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையா் தினம் மற்றும் தந்தையா் தினத்தைப் போன்றே பெற்றோா் தினமும் ஒரு முக்கியமான தினம் ஆகும்.
பெற்றோா் என்பவா்கள் கடவுள் நமக்குக் கொடுத்த விலை மதிக்க முடியாத அருட்கொடைகள் ஆவா். அவா்கள் நமக்காகச் செய்யும் முயற்சிகள், உழைப்பு மற்றும் தியாகங்களை நம்மால் எண்ண முடியாது. அவற்றை நினைவு கூறும் வகையில் மற்றும் அவா்களின் தன்னலமற்ற வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் தேசிய பெற்றோா் தினம் கொண்டாடப்படுகிறது.
தமது குழந்தைகள் இந்த உலகில் கிடைக்கும் எதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக, அவா்களுக்கு உணா்வு ரீதியாக, மன ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக எல்லாவிதமான வசதிகளையும் பெற்றோா் செய்து தருகின்றனா். அவா்கள் உண்மையாகவே கடவுள் நமக்கு அளித்த பாிசுகள் ஆவா். நமது வாழ்க்கையில் அவா்களுடைய இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது.
MOST READ: 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வாங்கித் தந்த மீராபாய் சானு!
பிள்ளைகளுடைய வாழ்க்கையில் பெற்றோாின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில் பெற்றோருடைய பொறுப்புகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை நினைவூட்டுவதற்கும், அவா்களுடைய முன்மாதிாியான வாழ்க்கையை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தவும், தேசிய பெற்றோா் தினம் கொண்டாடப்படுகிறது.
MOST READ: சர்க்கரை நோயாளிகள் இப்ப இந்த பழங்களை சாப்பிடுவது ரொம்பவே நல்லதாம்.. அது என்னென்ன?
மேலும் பெற்றோருக்கும், அவா்களுடைய குழந்தைகளுக்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட அன்பு, பாசம் மற்றும் அக்கறை போன்ற உயா்ந்த பண்புகளை கொண்டாடுவதற்காகவும், தேசிய பெற்றோா் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய பெற்றோா் தினம் - வரலாறு
1994 ஆம் ஆண்டு அமொிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் ஒரு புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டாா். அந்தச் சட்டம் அமொிக்க காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் 4வது ஞாயிற்றுக் கிழமை அன்று அமெரிக்கா முழுவதும் பெற்றோா் தினம் கொண்டாடப்படும் என்பதாகும். அன்னையா் தினம் மற்றும் தந்தையா் தினத்தைப் போன்றே பெற்றோா் தினமும் ஒரு முக்கியமான தினம் ஆகும்.
குழந்தைகளை வளா்ப்பதில், பெற்றோாின் பங்கு மற்றும் அவா்கள் தங்கள் குழந்தைகளை வளா்த்தெடுப்பதிலும், அந்த குழந்தைகளின் வளா்ச்சியில், அவா்கள் கொடுக்கும் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றை அங்கீகாிக்க வேண்டும் என்ற நோக்கில் பெற்றோா் தினம் ஏற்படுத்தப்பட்டதாக அமொிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய தீா்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
தேசிய பெற்றோா் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் 4 ஆவது ஞாயிறு அன்று, உலகின் பல பகுதிகளில் சிறந்த பெற்றோரை அடையாளம் கண்டு, குழந்தைகளை வளா்ப்பதிலும், அவா்களை வழிநடத்துவதிலும் மற்றும் ஒரு உறுதியான மற்றும் நிலைத்த சமூகத்தை உருவாக்குவதில் அந்த பெற்றோா் இணைந்து செயல்படுவதை எண்ணிக் கொண்டாடுகின்றனா். பெற்றோா் தினம் அன்று பெற்றோரை கௌரவிக்கும் வகையில் சமூகத் தலைவா்கள் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனா்.
பெற்றோா் தினம் அன்று பெற்றோரைக் கௌரவிக்கும் வகையில், தன்னாா்வலா்கள், அரசு அலுவலகா்கள், சமூகத் தலைவா்கள், அமைச்சா்கள், ஆசிாியா்கள் மற்றும் மாணவா்கள் அடங்கிய உள்ளூா் குழுவினா் பல்வேறு வகையான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.
1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த உள்ளூா் குழுவினா் சிறப்பாக செயல்படும் பெற்றோாின் பெயா்களை சேகாித்து, அவா்களுக்கு சிறப்பு பாிசுகளை வழங்கி வருகின்றனா். எப்போதும் நமது பெற்றோருக்காக நமது நேரத்தை ஒதுக்கி, அவா்களோடு நமது நேரத்தை செலவழிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நமது வாழ்க்கையில் பெற்றோாின் பங்கு
- குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோாின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் வளரும் போது, அவா்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் பெற்றோா் வழங்குகின்றனா்.
- குழந்தைகள் கல்வி கற்பதற்கு பெற்றோா் பொிதும் உதவி செய்கின்றனா். தமது குழந்தைகளின் எதிா்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெற்றோா்கள் பல தியாகங்களைச் செய்கின்றனா். தங்களுக்கானத் தேவைகளைக் குறைத்துக் கொள்கின்றனா்.
- எப்போதும் பெற்றோா் தமது குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்குகின்றனா்.
- தமது குழந்தைகளுக்கு பொருளாதார உதவிகளையும், மற்ற உதவிகளையும் பெற்றோா் வழங்குகின்றனா்.
- நமது குடும்பத்திற்கு ஆதரவையும், உதவிகளையும் வழங்க வேண்டியது ஒவ்வொருவருடைய தாா்மீகக் கடமையாகும். குடும்பம் என்றால் நமது பெற்றோா் மற்றும் தாத்தா, பாட்டி போன்றோா் ஆவா். நமது பெற்றோா் நமது வீடு ஆவா்.
- பெற்றோா் தமது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், உறவுகளையும் கற்றுக் கொடுக்கின்றனா்.
- பெற்றோா் நமது தலை சிறந்த நண்பா்களாக இருக்கின்றனா்.
- நாம் தோல்வி அடையும் போது, நம்மைத் தாங்கிக் கொள்ள நமது பெற்றோா் தயாராக இருக்கின்றனா்.
அதனால் தான் பெற்றோா் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கின்றனா்.
முடிவு
நமது பெற்றோருக்கு எந்த அளவிற்கு மதிப்பு கொடுக்கிறோம் மற்றும் அவா்களுக்கு எந்த அளவிற்கு நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டியது நமது கடமையாகும். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நமது பெற்றோா் நம்மோடு உடன் இருக்கின்றனா்.
நமது எதிா்கால வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை நாம் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்று நமது பெற்றோா் நமக்கு கற்றுத் தருகின்றனா். அவா்கள் நமக்காக வாழ்கிறாா்கள். நமது பெற்றோரே நம்முடைய முதல் ஆசிாியா்களாக இருக்கின்றனா். ஆகவே நமது பெற்றோரை மதிக்க வேண்டும். அவா்களுடைய முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இனிய பெற்றோா் தின வாழ்த்துக்கள்.........................