Just In
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 3 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Movies தப்பு தப்பா வீடியோ போடுறாங்க?.. ரக்ஷனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு.. ஓபனாக பேசிய ஜாக்குலின்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மனிதர்கள் செய்த திகிலூட்டும் ஆபத்தான ஆராய்ச்சிகள்... பூமிய அழிக்காம விடமாட்டாங்க போலயே...
மனிதர்கள் எப்பொழுதும் சோதனைகள் செய்வதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அனைத்து சோதனைகளும் வெற்றியில் முடியுமா என்றால் அது சந்தேகம்தான்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்து வந்த மனித இனம் இன்று செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களின் முயற்சியும், சோதனைகளும் ஆகும். மனித இனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக இன்றுவரை கருதப்படுவது சக்கரம்தான். ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச்செல்ல கண்டுபிடிக்கப்பட்ட சக்கரம்தான் மனித குலத்தின் முன்னேற்றத்தின் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.
மனிதர்கள் எப்பொழுதும் சோதனைகள் செய்வதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அனைத்து சோதனைகளும் வெற்றியில் முடியுமா என்றால் அது சந்தேகம்தான். சோதனை முயற்சி தோல்வியில் இதுவரை உலகில் எவ்வளவோ நஷ்டங்களும், ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. சோதனைகள் அதன் எல்லையை கடக்கும் போது அது அனைவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும். இதுவரை மனித வரலாற்றில் செய்யப்பட்ட திகிலூட்டும் ஆபத்தான சில சோதனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ராஜக்ட் ஸ்டார்ம்ப்ரை
விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் முன்னேற சில ஆபத்தான விஷயங்களை பரிசோதிக்க விரும்பும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். இந்த வகையான சோதனைகளில் ஒன்று 1940-ன் பிற்பகுதிகளில் நடத்தப்பட்டது. இர்வின் லாங்முயர் என்ற பெயரில் ஒரு மருத்துவர், புயலைப் பலவீனப்படுத்த பனி படிகங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு யோசனையை வகுத்தார். இதனால் புயலால் ஏற்படும் ஆபத்துகள் குறைக்கப்படும் எனவும், இதனால் மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் நினைத்தார். எனவே அவர்கள் புயலில் இந்த சோதனையை செய்தார்கள். ஆனால் நடந்ததோ இதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது. படிகங்களை வீழ்த்திய பின்னர் புயல் அதன் திசையை மாற்றிக்கொண்டு ஜார்ஜியாவின் கடலோர நகரமான சவன்னாவுக்கு அருகில் சென்றது. இதனால் அங்கு பெரிய உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது.
யானை மற்றும் ஆசிட்
அதிகளை LSD கொடுக்கப்பட்டு போதாயான யானையின் பெயர் "ட்ருக்கோ" ஆகும். இந்த யானைக்கு வழங்கப்பட்ட LSD-ன் அளவு சாதாரண மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் அளவை விட 3000 மடங்கு அதிகமாகும். ஆண் யானைகளின் நடத்தையை தெரிந்து கொள்ள இந்த சோதனை செய்யப்பட்டது. இது யானைக்கு தற்காலிக வெறியை ஏற்படுத்துமா என்று சோதனை செய்ய ஊசி மூலம் LSD செலுத்தப்பட்டது. இதனால் யானை மதம்பிடித்து கட்டுப்படுத்த முடியாத வன்முறையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊசி செலுத்திய 40 நிமிடத்தில் அந்த யானை இறந்துவிட்டது. வரலாற்றின் மோசமான சோதனைகளில் ஒன்றாக கருதப்படும் இது இரக்கமற்ற மனிதர்களின் இரக்கமற்ற செயலாகும்.
ஹார்ட் ஸ்டாப்பிங்
ஒருவர் மற்றொருவரின் இதயத்தை கத்தியால் குத்தினார் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒருவர் தன் இதயத்தையே குத்திக்கொண்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. வெர்னர் தியோடர் ஓட்டோ ஃபோர்ஸ்மேன் ஒரு ஜெர்மன் அறுவை சிகிச்சை பயிற்சியாளராக இருந்தார். இவர் தனக்குத்தானே மயக்கமருந்தை கொடுத்துக் கொண்டு அவரது இதயத்திற்கு அவரே அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சில நொடிகளில் இவர் மரணம் அடைந்திருக்கக்கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரின் சோதனை வெற்றியடைந்தது. இதய வடிகுழாய் உருவாக்க இந்த சோதனைதான் காரணமாக அமைந்தது. இதற்காக 1956-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நாஜியின் சோதனைகள்
வரலாற்றின் ஆபத்தான முயற்சிகள் அனைத்திலும் நாஜிக்களின் பெயர் கண்டிப்பாக இருக்கும். நாஜி என்றாலே நமது நினைவிற்கு முதலில் வருவது ஹிட்லர்தான். ஹிட்லரின் ஆட்சியில் நடந்த கொடூரங்களை இந்த உலகமே நன்கு அறியும். மனிதர்களை சோதனை எலிகளாக நாஜிக்கள் பயன்படுத்தினர். பலவிதமான விஷங்களை கொண்டு இவர்கள் செய்த உறைபனி சோதனை பலரின் மரணத்திற்கு காரணாமாக அமைந்தது. மேலும் இதனால் பலரின் மனநலம் பாதிக்கப்பட்டது.
ரஷ்ய போர்ஹோல்
போர்த்துளை போடுவது சோதனையா என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இது 40,000 அடி ஆழத்திற்கு போடப்பட்ட துளை. பல்வேறு அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி இது 1970 மே 24 அன்று தொடங்கப்பட்டது. பூமியின் மேலோட்டத்தில் எவ்வளவு தூரம் தோண்ட வேண்டும் என்பதுதான் இந்த முயற்சி .இப்போது இது பூமியின் ஆழமான செயற்கை துளையாகும். இது பல்வேறு புவி இயற்பியல் ஆய்வுகளின் தளமாக இருந்தது. இந்த சோதனை பூமியின் டெக்டோனிக் தட்டில் மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கக்கூடும், இதன் விளைவாக பூகம்பங்கள் மற்றும் பிற பேரழிவுகள் ஏற்படக்கூடும்.
ஹாட்ரான் மோதல்
மிகப்பெரிய ஹாட்ரான் மோதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது உலகின் மிக சக்திவாய்ந்த துகள் மோதலாகும். இது சுவிட்சர்லாந்தின் நிலத்தடி பகுதியில் அமைந்துள்ளது. இதில் புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் பிற துணை அணு துகள்களின் மோதலில் மிக அதிக வேகத்தில் நடத்தப்படுகிறது. . துகள் இயற்பியல் மற்றும் உயர் ஆற்றல் இயற்பியல் பற்றி மேலும் அறிய இது செய்யப்பட்டது. இது சுமார் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு சுரங்கப்பாதையில் அமைந்துள்ளது. இது ஒரு உயர் மட்ட திட்டமாகும், இது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்படுகிறது. பல விஞ்ஞானிகள் மோதல் ஒரு கருந்துளையை உருவாக்கக்கூடும், இது பூமியை அழிக்கக்கூடும் அல்லது வேறு எந்த ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படக்கூடும் என்று நம்புகிறார்கள். ஒருவேளை இந்த சோதனையில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் நமது பூமியே அழிய வாய்ப்புள்ளது.
ஸ்டார்ஃபிஷ் பிரைம்
1962 ஜூலை 9-ல் அமெரிக்கா பூமியின் காந்த புலத்திற்கு வெளியே அணு ஆயுதங்களை சோதனை செய்தது. இதில் சுமார் 1.4 மெகாடன் TNT பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனைக்குப் பிறகு பூமியின் காந்தப்புலத்தில் மாற்றம் ஏற்பட்டது. இது பெரிய அளவிலான கதிர்வீச்சை ஏற்படுத்தியது, அமெரிக்கா இதைத்தான் ஏற்படுத்தியது. இது ஹவாயின் பாதி இடங்களில் மின்சார சீர்குலைவை ஏற்படுத்தியது. மேலும் இது பல தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதித்தது. அசாதாரண கதிர்வீச்சு ஒட்டுமொத்த பூமியையும் அழிக்கக்கூடும். வரலாற்றில் மிகவும் திகிலூட்டும் சோதனைகளின் பட்டியலில் ஸ்டார்ஃபிஷ் பிரைம் முக்கிய இடம் பெற்றது.
இறந்தவருக்கு உயிர் கொடுப்பது
உலகில் யாராவது இறந்தவர்களை மீண்டும் வாழ வைக்க முடியுமா? ராபர்ட் ஈ. கார்னிஷ் என்ற பெயரில் ஒரு மருத்துவர் இதைச் செய்ய முயன்றார். இறந்த உடல்களை சீசாவில் வைத்து அவர்களை உயிர்ப்பிக்க முயன்றார், இதன்மூலம் இரத்தம் உடல் முழுவதும் நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும் இரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மருந்து மற்றும் எபிநெஃப்ரின் செலுத்தப்பட்டது. இந்த சோதனை தோல்வியில் முடிந்தது அவர் சோதனை செய்த யாரும் உயிர் பெறவில்லை. ஆனால் இந்த சோதனையில் இரண்டு நாய்கள் உயிர்பெற்றன ஆனால் அவை மீண்டும் இறந்தன. மனித வரலாற்றின் மிகவும் பயங்கரமான சோதனைகளில் இது முக்கியமானதாகும்.
மனதைக் கட்டுப்படுத்துதல்
பிறரின் மனதைக் கட்டுப்படுத்துவது கேட்பதற்கு வேடிக்கையான யோசனையாக இருக்கலாம் ஆனால் இது மிகவும் பயங்கரமான சோதனைகளில் ஒன்றாகும். ஜோஸ் டெல்கடோ ஒரு ஸ்பானிஷ் பேராசிரியர் மனதைக் கட்டுப்படுத்தும் ஒரு நுட்பத்தை உருவாக்கினார். அவர் செய்தது என்னவென்றால் முதலில் ஒரு கருவியை கண்டறிந்து அதனை விலங்கின் மூளையில் வைத்து சோதனை செய்தார். இந்த கருவியை ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். இந்த சோதனையில் மிருகங்களின் கை, கால்கள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகிறது.
MOST READ:உடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா?
அணு ஆயுத சோதனை
உலகத்தை அழிக்கும் சோதனைகளை அரசாங்கம் ஏன் செய்யப்போகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதனையும் அமெரிக்கா தொடங்கி வைத்தது. ஜூலை 16, 1945-ல் அமெரிக்கா ட்ரினிட்டி அணுசோதனையை நடத்தியது. அமெரிக்காவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 20 கிலோட்டன் டி.என்.டி பயன்படுத்தப்பட்டது, இது வரலாற்றில் மிகவும் ஆபத்தான, மிகவும் திகிலூட்டும் சோதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விளைவுகளை ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதல்கள் உலகத்திற்கே காட்டியது. இன்று உலகின் பல நாடுகளில் அணுஆயுதங்கள் உள்ளது அதில் இந்தியாவும் முக்கியமான இடத்தில் உள்ளது.