Just In
- 3 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 15 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 18 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 18 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- Movies
ரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... நம்ம கெப்பாசிட்டி அவ்ளோதான்... ஷாக் கொடுத்த ஹீரோயின்!
- Technology
செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!
- News
சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி
- Automobiles
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கபே காபி டே நிறுவனர் உடல் ஆற்றின் ஓரம் கண்டெடுப்பு... இறப்புக்கு காரணம் என்ன?
காதலியுடன் தனிமையில் சந்திக்க வேண்டும், பிசினஸ் மீட்டிங், டென்ஷனா இருக்கு கொஞ்சம் ரெப்ஃரஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது காபி டே தான்.
ஆனால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அந்த காபி டேயின் நிறுவனர் சித்தார்த் சில நாட்களுக்கு முன் இறந்திருக்கிறார். அவருடைய உடல் நேத்ராவதி ஆற்றங்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுடிருக்கிறது. அது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

உடல் கண்டெடுப்பு
மங்களூரில் உள்ள ஹோய்ஹி பஜாருக்கு அருகில் இருக்கிற நேத்ராவதி ஆற்றின் ஒரு ஓரப்பகுதியில் இருந்து நேற்று கபே காபி டே நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட போது, ஒட்டுமொத்த கர்நாடகாவே அதிர்ச்சிக்கு உள்ளானது.

அரசியல் மாற்றம்
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தான் கபே காபி டே நிறுவன நிறுவனர் சித்தார்த். இவர் இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். சமீபத்தில் இவர் பிஜேபிக்கு மாறியிருந்த சமயத்தில் திடீரென இவருடைய வீட்டை வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தியது.
MOST READ: காதுக்குள்ள இவருக்கு எவ்ளோ அழுக்கு சேர்ந்திருச்சு தெரியுமா? கேட்டு ஷாக் ஆகிடாதீங்க...

திடீர் மாயம்
இந்நிலையில் காரை எடுத்துக்குக் கொண்டு தன்னுடைய டிரைவரை ஓட்டச் சொல்லி சிக்மங்களூருக்கு சென்றிருக்கிறார். அதன்பின் டிரைவரை மங்களூருக்குச் செல்லும்படி கூறியிருக்கிறார். டிரைவரும் சென்றிருக்கிறார். அப்போது நேத்ராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றிருக்கிறார். டிரைவரும் காரின் அருகிலேயே காத்திருந்திருக்கிறார். வெகுநேரம் ஆகியும் காணவில்லை என்று போன் செய்திருக்கிறார். ஆனால் சித்தார்த்தின் போன் ஸ்விட்ச் ஆஃப். இப்படி திடீர் மாயம் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இறப்பு உறுதியானது
மாயமானவரை தேடிக்கொண்டிருந்த நிலையில் தான் அவருடைய உடல் ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
MOST READ: அடக்கொடுமையே! சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...

எழுதிய கடிதம்
இந்நிலையில் அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் தான் ஏராளமான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட முடியாமல் சிரமப் படுவதுபோலவும் குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய கடிதம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாக அரசியல் மற்றும் தொழில் அதிபர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். தொழிலில் தான் தோற்றுவிட்டேன் என்று அவர் எழுதியிருப்பது பெரிய ஷாக்காக தொழிலதிபர்களுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

என்ன காரணம்?
இப்படி நடந்ததற்கு காரணம் என்னவென்று சரியாகத் தெரியாத காரணத்தினால், தொழில் மற்றும் அரசியல் காரணங்கள், வருமான வரித்துறை வரி ஏய்ப்பு சம்பந்தப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதனால் அவர் தற்கொலை கூட செய்திருக்கக்கூடும் என்று செய்திகள் வருகின்றன. எது எப்படியோ மன அழுத்தத்துக்குத் தீர்வு தற்கொலை ஆனாது என்பதை மன அழுத்தம் மற்றும் இறுக்கத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
MOST READ: உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?