Just In
- 17 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 27 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 2 hrs ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Movies டோவினோ தாமஸுடன் லிப் லாக் காட்சியில் நடித்த பாவனா...முகம் சுளித்த ஃபேன்ஸ்!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கனவில் சிங்கம் வருவது நல்லதா கெட்டதா? அதற்கு உண்மையான அர்த்தம் என்ன?
நவராத்திரி நாட்களில் ஒருவரது கனவில் சிங்கம் வந்தால் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் துர்கை அம்மனின் வாகனம் சிங்கம். பொதுவாக கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.
நாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வரும். அப்படி வரும் கனவுகள் ஒவ்வொன்றும் நம் ஆழ்மனதில் இருக்கும் ஒரு விஷயத்தினால் இருக்கலாம் அல்லது நாம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை உணர்த்தும்விதமாக இருக்கலாம். சில கனவுகள் பயமுறுத்தும் வகையில் இருக்கும். தற்போது நவராத்திரி விழா நடந்து கொண்டிருக்கிறது. நவராத்திரியானது துர்கையுடன் தொடர்புடையது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படும்.
இந்த நவராத்திரி நாட்களில் ஒருவரது கனவில் சிங்கம் வந்தால் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் துர்கை அம்மனின் வாகனம் சிங்கம். பொதுவாக கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டிருக்கும். அதுவும் கனவில் சிங்கம் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. இப்போது கனவில் சிங்கம் வருவதன் பின்னணியில் இருக்கும் அர்த்தங்களைக் காண்போம் வாருங்கள்.
சிங்கம் தாக்குவது
ஒருவரது கனவில் சிங்கம் தாக்குவது போன்று வந்தால், அது சற்று பயமாக இருக்கும். ஆனால் இம்மாதிரியான கனவு வந்தால், யாரோ ஒருவர் அல்லது ஏதாவது ஒன்று உங்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே இந்த மாதிரியான கனவு வந்தால் சற்று கவனமாக இருங்கள்.
உயரமான மலையில் சிங்கம் நிற்பது
நீங்கள் உங்கள் கனவில் ஒரு உயரமான மலையில் சிங்கம் இருப்பதைப் போன்று கண்டால், அதிகாரம் நிறைந்த பதவி உங்களைத் தேடி வரவுள்ளதைக் குறிக்கிறது. அதுவும் நீங்கள் பணிபுரிந்து வந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜோடி சிங்கம்
உங்கள் கனவில் ஒரு ஆண் மற்றும் பெண் சிங்கம் சேர்ந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் குறிக்கிறது. இதுவரை உங்களின் திருமண வாழ்வில் பிரச்சனை இருந்து இந்த கனவு வந்தால், திருமண வாழ்வில் உள்ள பிரச்சனை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது.
சிங்கக் குட்டிகள்
உங்கள் கனவில் சிங்கக்குட்டிகளை கண்டால், அது நீங்கள் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள் மற்றும் வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளும் இருப்பதைக் குறிக்கிறது.
சிங்கம் கடிப்பது
கனவில் ஒரு சிங்கம் உங்களை கடித்தால், அது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு தவறான முடிவு அல்லது தேர்வு செய்யப் போவதைக் குறிக்கிறது. எனவே இந்த மாதிரியான கனவு வந்தால், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் கவனமாக இருங்கள்.
சிங்கம் உங்களை நோக்கி ஓடி வருவது
உங்கள் கனவில் ஒரு சிங்கம் உங்களை நோக்கி ஓடி வரும் போது, நீங்கள் ஓடாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அந்த கனவில் வரும் சிங்கம் நீங்கள் சந்திக்கும் சவால்களைக் குறிக்கிறது. நீங்கள் ஓடாமல் இருப்பது, உங்களின் வலிமையையும், நம்பிக்கையையும் குறிக்கிறது.
சிங்கம் உங்களைத் துரத்துவது
சிங்கம் துரத்துவது போன்ற கனவுகள், உங்களுக்கு வேண்டியதை வேண்டாம் என்று தவிர்க்க வைப்பதைக் குறிக்கிறது. அதாவது உங்கள் தொழில், வணிகம், உறவுகள், உடல்நலம் அல்லது நிஜ வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வேண்டியதை உங்களை அறியாமலேயே வேண்டாம் என்று தவிர்ப்பீர்கள்.
சிங்கத்துடன் சண்டையிடுவது
நீங்கள் சிங்கத்துடன் சண்டை போடுவது போன்ற கனவு கண்டால், அது நீங்கள் ஆழ் மனதில் சற்று அழுத்தத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. ஒருவர் மனச்சோர்வு போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு சிங்கத்துடன் சண்டையிடுவது போன்ற கனவு வரும்.