Just In
- 20 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முன்னோர்கள் வடிவில் வீட்டிற்கு வரும் காகங்கள் - அமாவாசையில் சாதம் வைப்பது ஏன்?
நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும் காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைவாராம். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அதுபற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சூரிய புத்திரர்கள் எமனும் சனியும் சகோதரர்கள் எமலோகத்தின் வாசலில் காகங்கள் அமர்ந்திருக்குமாம். சனிபகவானின் வாகனம் காக்கை. காகங்கள் வடிவத்தில் நம்முன்னோர்களை பார்க்கிறோம். நம் வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது போல நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும் காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சியடைவாராம். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.
மஹாயள அமாவாசை தினமான இன்று காகத்திற்கு பலரும் உணவு வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடித்துள்ளனர். காகங்கள் சாதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.
முன்னோர்கள் வடிவத்தில் காகங்கள்
காகங்கள் சுத்தமானவை தினசரி இரண்டு முறை குளிக்கும். தனது துணை இறந்தால் ஒழிய வேறு துணை தேடாது. தூய்மையான ஒழுக்கமான பறவை. கூடி சாப்பிடும் ஒற்றுமையின் சின்னம். தனது இனத்தை சேர்ந்த ஒரு காகம் இறந்தால் கூடி துக்கம் அனுஷ்டிக்கும் எனவேதான் பித்ருக்கள் வடிவத்தில் காகத்தை பார்க்கிறோம்.
MOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...
காகத்திற்கும் மனிதர்களுக்கும் தொடர்பு
மனிதர்கள் பசுக்களையும் நாகப்பாம்பினையும் வழிபடுகின்றோம். பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுக்கிறோம். அதேபோல பறவை இனங்களில் காகத்திற்கும் மனிதர்களுக்கும் தொடர்பு உள்ளது. முன்னோர்கள் வடிவத்தில் காகத்தை பார்ப்பதால்தான் உணவு கொடுக்கிறோம். காகங்கள் வீட்டிற்கு தேடி வந்து சாப்பிடுகின்றன.
பித்ரு தோஷம்
நம்மால் தினசரியும் பத்து பேருக்கு சாதம் கொடுக்க முடியாது. அப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள். தினசரியும் காகங்களுக்கு ஒரு கைப்பிடி உணவு வைத்துவிட்டு சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். தோஷங்களும் நீங்கும். அமாவாசை திதி கொடுக்கும் நாட்களில் காகங்களுக்கு உணவு வைக்கும் போது அவை எடுக்காவிட்டால் நம்முடைய முன்னோர்களுக்கு நம் மீது ஏதோ கோபம் இருக்கிறது என்று அர்த்தம். எனவே அவர்களை முதலில் திருப்திபடுத்த வேண்டியது அவசியம்.
MOST READ: முடி நிறைய கொட்டுதா?... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...
சனி தோஷம் நீங்கும்
ஏழரைச் சனி, அஷ்டமத்துச்சனி, அர்த்தாஷ்டமச் சனி நடப்பவர்கள் காகத்திற்கு அன்னம் வைத்து அதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும்.
குடும்ப ஒற்றுமை
காலை நேரத்தில் சாதம் வைத்து காகத்தை நாம் அழைக்கும் பொழுது தனியாக வருவதில்லை கூட்டமாக அழைத்து வந்து பகிர்ந்து சாப்பிடும். நம்முடைய முன்னோர்கள்தான் நம் வீட்டிற்கு காகங்கள் வடிவத்தில் வருகின்றன. ஒற்றுமையாக கூடி வாழும் காக்கைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை வேண்டும் நீடிக்கும் என்பது நம்பிக்கை.
காகங்களும் சகுனங்களும்
காகங்கள் நம்முடைய முன்னோர்கள் என்பதால் முன்கூட்டியே நமக்கு பல சகுணங்களை உணர்த்துகின்றன. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும். யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் பல முறை குரல் கொடுக்கும். காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு.
MOST READ: சர்க்கரை நோயாளிகள் எந்த கிழங்குகளை சாப்பிடக்கூடாது?... என்ன கிழங்கை சாப்பிடலாம்...
லாபமும் நஷ்டமும்
ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை காண நேர்ந்தால் இனிய செயல் ஏற்பட உள்ளதை குறிக்கும். காகம் உங்கள் எதிரே வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால் தன லாபம் கிட்டும். இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் சென்றால் தன நஷ்டம் உண்டாகும். காகம் தென்கிழக்கு திசை நோக்கி சத்தம் போட்டால் தங்கம் லாபமாக கிடைக்கும். தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் தயிர், எண்ணெய், உணவு லாபம் கிடைக்கும். மேற்கு திசை நோக்கி கரைந்தால் நெல், முத்து, பவளம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வடக்கு திசை நோக்கி கரைந்தால் ஆடைகள், வாகனங்கள் வந்து சேரும்.