Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவிற்கு முன்னரே பணமதிப்பிழப்பு செய்து பொருளாதாரத்தை குழியில் தள்ளிய நாடுகள் என்னென்ன தெரியுமா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பழைய நோட்டுகள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய நோட்டுகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பழைய நோட்டுகள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய நோட்டுகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பால் பல மக்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த நடவடிக்கை முதன் முதலில் இந்தியாவில் மட்டுமே அறிவிக்கப்பட்டது அல்ல.
இந்தியாவே இதற்கு முன்னால் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்துள்ளது. இந்தியாவிற்கு முன் பல நாடுகள் இந்த முயற்சியை செய்துள்ளது, சில நாடுகள் அதில் வெற்றி கண்டன, சில நாடுகள் மோசமான தோல்வியை தழுவியது. இந்த பதிவில் எந்தெந்த நாடுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது என்று பார்க்கலாம்.
நைஜீரியா
1984ல் முஹம்மது புஹாரி ஆட்சியில் நைஜீரியா புதிய கரன்சியை அறிமுகப்படுத்தி பழைய நோட்டுகளுக்கு தடை விதித்தது. இருப்பினும், கடன் சுமை மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்த பண மாற்றத்தை சரியாக கையாவில்லை மற்றும் பொருளாதாரம் இதனால் பெருமளவில் சரிந்தது.
கனா
1982 ஆம் ஆண்டில், வரி ஏய்ப்பு மற்றும் அதிகப்படியான பணப்புழக்கத்தை சமாளிக்க கனா அவர்களின் 50 செடிஸ் நோட்டை கைவிட்டது. இது நாட்டு மக்களை கறுப்புச் சந்தையை ஆதரிக்கச் செய்தது, மேலும் அவர்கள் பௌதீக சொத்துக்களில் முதலீடு செய்யத் தொடங்கினர், இது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியது.
பாகிஸ்தான்
டிசம்பர் 2016 முதல், பாகிஸ்தான் புதிய டிசைன்களைக் கொண்டு வருவதற்காக, பழைய நோட்டுகளை படிப்படியாக நீக்கியது. பாகிஸ்தான் சட்டப்பூர்வமாக 2016 ஆம் ஆண்டு அதற்கான டெண்டரை வழங்கியது, எனவே குடிமக்கள் பழைய நோட்டுகளை மாற்றவும், புதிதாக வடிவமைக்கப்பட்ட நோட்டுகளைப் பெறவும் நேரம் கிடைத்தது.
ஜிம்பாவே
ஜிம்பாவேயில் $100,000,000,000,000 நோட்டு இருந்தது. ஆம், நூறு டிரில்லியன் டாலர் நோட்டை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இந்த அதிர்ச்சியளிக்கும் மதிப்பு நோட்டுகள் மூலம் பணவீக்கத்தை தடை செய்ய அதிபர் ராபர்ட் முகாபே உத்தரவு பிறப்பித்தபோது ஜிம்பாப்வே பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழுந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிரில்லியன் டாலர்களின் மதிப்பு $0.5 டாலராகக் குறைந்து eBay-யிலும் போடப்பட்டது.
வடகொரியா
2010ல் வடகொரியாவில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். கறுப்புச் சந்தையை ஒழிப்பதற்காக பழைய நாணயத்தின் முக மதிப்பில் இருந்து இரண்டு பூஜ்ஜியங்களை நீக்கி சீர்திருத்தத்தை கிம்-ஜாங் அறிமுகப்படுத்தினார்.
சோவியத் யூனியன்
மைக்கேல் கோர்பச்சேவ் கறுப்புச் சந்தையைக் கைப்பற்றுவதற்காக பெரிய ரூபிள் பில்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு குடிமக்கள் ஒத்துப் போகவில்லை, இது ஒரு சதி முயற்சியாக அமைந்தது, இது அவரது அதிகாரத்தை வீழ்த்தியது மற்றும் சோவியத் முறிவுக்கு வழிவகுத்தது.
ஆஸ்திரேலியா
பரவலான கள்ள நோட்டுகளைத் தடுக்க பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை வெளியிட்ட முதல் நாடு ஆஸ்திரேலியா. காகிதத்தை பிளாஸ்டிக் கொண்டு மாற்றுவதே நோக்கமாக இருந்ததாலும், பொருள் மட்டுமே மாற்றப்பட்டதாலும், பொருளாதாரத்தில் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
மியான்மர்
1987 ஆம் ஆண்டில், கறுப்புச் சந்தையைக் கட்டுப்படுத்த மியான்மர் இராணுவம் சுமார் 80% பணத்தை செல்லாததாக்கியது. இந்த முடிவு பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுத்தது, இது வெகுஜன போராட்டங்களுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக பலர் கொல்லப்பட்டனர்.
யுனைடெட் கிங்டம் (1971)
1971 இல், யுனைடெட் கிங்டம் பவுண்டுகள், ஷில்லிங்ஸ் மற்றும் பென்ஸுக்கு எதிராக தசம நாணயத்தை ஏற்றுக்கொண்டது. 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் பழைய நாணயத்தில் துல்லியமான சமமான மதிப்புகளைக் கொண்ட தசம நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.