Just In
- 31 min ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 1 hr ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 1 hr ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
Don't Miss
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Movies Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்ப கிருஷ்ண ஜெயந்தி அன்று இத செய்யுங்க...
அன்னை லட்சுமி தேவி மற்றும் கிருஷ்ணரின் ஆசியைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரம் தான் கிருஷ்ணர். இவர் உலகில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பிறந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாள் தான் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியில் பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்றே கூற வேண்டும்.
ஏனெனில் அஷ்டமி திதியானது 18 ஆம் தேதி நள்ளிரவு 1.49 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நள்ளிரவு 2.47 மணிக்கு முடிவடைகிறது. ஆகவே பலரும் உதய திதியை முன்னிட்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடவுள்ளனர். இன்னும் சிலர் அஷ்டமி திதிக்கு முன்னுரிமை அளித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதியே கொண்டாடினார்கள். அன்னை லட்சுமி தேவி மற்றும் கிருஷ்ணரின் ஆசியைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
மஞ்சள் நிற மாலை
கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்த பின்னர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று கிருஷ்ணருக்கு மஞ்சள் நிற மலர் மாலையை வாங்கி அணிவியுங்கள். இப்படி செய்வதன் மூலம் கிருஷ்ணரின் அருளைப் பெறுவதோடு, பணம் வருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
வலம்புரி சங்கு நீர்
உங்களின் ஆசைகள் நிறைவேற வேண்டுமா? அப்படியென்றால் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வலம்புரி சங்கில் நீரை நிரப்பி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதோடு பெயரும் புகழும் பெருகும்.
வெள்ளை நிற இனிப்புகள்
உங்கள் தொழிலில் வளர்ச்சியைக் காண வேண்டுமெனில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் 7 பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு பாயாசம் அல்லது வெள்ளை நிற இனிப்புக்களைக் கொடுங்கள். அதன் பின் ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இம்மாதிரி செய்யுங்கள். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். மேலும் உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
குங்கும பால் அபிஷேகம்
கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளன்று இரவு 12 மணிக்கு குங்குமம் கலந்த பாலால் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.
பசு அல்லது கன்று சிலை
உங்களுக்கு கிருஷ்ணர் போன்ற அழகான குழந்தை வேண்டுமா? அப்படியென்றால் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் குழந்தை வடிவத்தை வணங்குங்கள். மேலும் இந்நாளில் பசு அல்லது கன்று சிலையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.