For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டைய இந்தியாவின் தலைசுற்ற வைக்கும் வினோதமான பாலியல் செயல்பாடுகள்... ஷாக் ஆகாம படிங்க...!

இந்தியா காம சூத்திரத்தின் நிலம் என்று பிரபலமாக அறியப்பட்டாலும், பாலியல் என்பது ஒரு தவறான விஷயம் என்று கருதப்படும் காலக்கட்டத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

|

இந்தியா காம சூத்திரத்தின் நிலம் என்று பிரபலமாக அறியப்பட்டாலும், பாலியல் என்பது ஒரு தவறான விஷயம் என்று கருதப்படும் காலக்கட்டத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பின்னோக்கி நகர்கிறோம் என்பதை நாம் தெளிவாகக் கூறலாம், மேலும் பாலியல் குறித்த நமது வரையறை மேலும் பிற்போக்குத்தனமாகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பாலியல் விடுதலையின் முன்னோடியான நம் நாட்டில்தான், பெரும்பாலான நாடுகளை விட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் அதிகம் உள்ளது.

Intimacy Beliefs of Ancient India

இந்தியாவில் இந்த சூழல் நிலவ என்ன காரணம் என்று சிந்தித்து உள்ளீர்களா? ஏனெனில் நம் கலாச்சாரம் பாலியலை கொண்டாட அனுமதிக்காது என்று நம்மில் பலர் இன்னும் நம்புகிறோம். ஆனால், உண்மையில், இது நேர்மாறானது. பண்டைய இந்தியாவில் செக்ஸ் என்பது சிற்றின்பம், திறந்த உறவுகள், சிற்றின்ப நூல்கள் மற்றும் கோயில் சிற்பங்கள் ஆகியவற்றில் வெளிப்படையாக இருந்தது. பாலியல் உறவுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை மாறாக அது ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட் காஞ்சுகி பாலியல் விளையாட்டு

காட் காஞ்சுகி பாலியல் விளையாட்டு

‘காட் காஞ்சுகி' பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஒரு குழுவினரையும், உறவு நிலையையும் ஒன்றிணைப்பதை உள்ளடக்கியது. பெண்கள் ஆடைகளை அகற்றி ஒரு தொட்டியில் வைப்பதன் மூலம் விளையாட்டு தொடங்குகிறது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆணும் பானையில் இருந்து ஒவ்வொன்றாக ஒரு ஆடையைத் தேர்ந்தெடுப்பார், யாருடைய ஆடைகளை எடுத்தாலும், அவர் அந்த பெண்ணுடன் உடலுறவை கொள்வார். இது மட்டுமல்லாமல், எல்லோரும் ஒருவருக்கொருவர் உடலுறவு வரை விளையாட்டு தொடர்ந்தது. இந்த விளையாட்டில் பொதுவாக ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில் இருப்பார்கள்.

கணவன்-மனைவி இருவரின் இன்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது

கணவன்-மனைவி இருவரின் இன்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது

நாம் பாலியல் சார்ந்த உயிரினங்கள், நம் உடல்கள் இன்பத்திற்காக ஏங்குகின்றன. பண்டைய காலங்களில், மக்கள் காம சூத்திரத்தை கடுமையாக பின்பற்றி, எந்தவிதமான தடைகளும் இல்லாமல் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி அடைந்தனர். உடலுறவைப் பொறுத்தவரை கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பாலியல்ரீதியாக மகிழ்விக்க உறுதிபூண்டிருந்தனர். இருவரின் உச்சக்கட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நிர்வாணம் அவமானமாக கருதப்படவில்லை

நிர்வாணம் அவமானமாக கருதப்படவில்லை

இந்தியா மிகவும் வெப்பமான காலநிலையை அனுபவிக்கிறது. இதனால், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, மக்கள் பெரும்பாலும் ஆடைகளை அணிய மாட்டார்கள். ஆண்கள் மேலாடை இல்லாமல் சுற்றித் திரிவார்கள், பெண்கள் தளர்வான ஆடைகளில் இருந்தார்கள். நிர்வாணமாக இருப்பது மேலும் வசதியாக உணரப்பட்டது.

MOST READ: கொரோனா நோயாளிகளை தாக்கும் புதிய ஆபத்தான நோய்... அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

காமசூத்ரா புனித நூலாக கருதப்பட்டது

காமசூத்ரா புனித நூலாக கருதப்பட்டது

பண்டைய இந்தியாவில் காம சூத்திரம் ஒரு புனித நூலாகக் கருதப்பட்டு, நிறைவான வாழ்க்கையை வாழ மக்களுக்கு உதவியது. காம சூத்திரம் என்பது பாலியல் நிலைகளின் புத்தகம் மட்டுமல்ல, அதையும் தாண்டி எண்ணற்ற வாழ்க்கை வழிமுறைகள் அதில் உள்ளது. இது ஒரு நல்ல, மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று போதிக்கிறது. இது பாலியல் பற்றி ஒரு ஆன்மீக அனுபவமாகவும், தியானத்தின் ஒரு வடிவமாகவும் கருதப்பட்டது, இது இன்றைய சமூகம் ஒப்புக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

தெய்வீக ஆற்றல்

தெய்வீக ஆற்றல்

பண்டைய இந்தியாவில் உடலுறவு ஒரு இனப்பெருக்க செயல்முறை மட்டுமல்ல, தெய்வீக ஆற்றலின் ஆதாரமாக பார்க்கப்பட்டது. உங்கள் துணையுடன் ஆழ்ந்த ஆன்மீக தொடர்பை உருவாக்குவதற்கான ஒரு அனுபவமாக செக்ஸ் நடைமுறையில் இருந்தது, இது அவர்களை மிக உயர்ந்த உணர்ச்சி உணர்வுடன் இணைக்கிறது.

எட்டு வகையான திருமணங்கள்

எட்டு வகையான திருமணங்கள்

முதன்மையாக, திருமணத்தில் இரண்டு பிரிவுகள் இருந்தன, அவை ‘பிரஷஸ்தா' அல்லது அங்கீகரிக்கப்பட்டவை மற்றும் ‘அப்ராஸ்தா' அல்லது மறுக்கப்பட்டவை. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு துணைப்பிரிவுகள் இருந்தன. பிரஷஸ்தா திருமணங்கள் பிரம்மா, தெய்வ்யா, அர்ஷா, மற்றும் பிரஜாபத்யா என பிரிக்கப்பட்டன. பிரம்மாவில், இந்து திருமணத்தின் தூய்மையான வடிவமாக இருப்பதால், தந்தை தனது மகளை நல்ல குணமுள்ள மனிதனுக்கு வழங்குவார். தெய்வ்யாவில், தந்தை தனது மகளை ஒரு தெய்வமாக ஒரு இளம் முனிவருக்குக் கொடுத்தார். அர்ஷாவில், தந்தை ஒரு மாடு அல்லது காளையைப் பெற்ற பிறகு மணமகனுக்கு மணமகளைக் கொடுப்பார். அதேசமயம், பிரஜாபத்யாவில், தந்தை தனது மகள் மற்றும் மாப்பிள்ளை ஆகியோரை விடுவிப்பதற்கு முன்பு, தர்மத்தை ஒன்றாகச் செய்வதாக உறுதியளித்தார்.

MOST READ: உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...!

அப்ரஷஸ்தா

அப்ரஷஸ்தா

அப்ரஷஸ்தாவும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன; அசுரா, ரக்ஷசா, பைசாச்சா, காந்தர்வா. அசுரா ஒரு தந்தை தனது மகளுக்கு ஈடாக ஒரு மணமகனிடமிருந்து பணம் பெறுகிறார். ராக்ஷாசாவில், மணமகள் கட்டாயமாக திருமணம் செய்ய கடத்தப்பட்டதால் திருமணம் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. பைசாச்சா திருமணம் என்பது ஒரு பாலியல் பலாத்காரமாகும், அங்கு ஒரு ஆண் பெண்ணை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தினான். இறுதி வகை காந்தர்வா என்று அழைக்கப்படுகிறது, இது மணமகள் தனக்கு ஒரு மணமகனைத் தேர்ந்தெடுக்கும் நவீன காதல் போன்றது.

பலதார மணம் ஆட்சியாளர்களால் பரவலாக நடைமுறையில் இருந்தது

பலதார மணம் ஆட்சியாளர்களால் பரவலாக நடைமுறையில் இருந்தது

பலதார மணம் என்பது ஆளும் வர்க்கத்தினரிடையே ஒரு கலாச்சாரமாக இருந்தது. அவர்கள் ஒரு பகட்டான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்வதற்கான வளங்களையும் சுதந்திரத்தையும் கொண்டிருந்தனர், ஆனால் பெரும்பான்மையான இந்தியர்கள் ஒற்றைத் திருமணங்களைக் கொண்டிருந்தனர்.

MOST READ: படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த பொருட்களை சாப்பிட்டு பாருங்க... அப்புறம் பாருங்க நடக்கற அதிசயத்தை...!

சிறந்த பாலியல் செயல்திறனுக்கு சிறப்பான உணவு அவசியமாக கருதப்பட்டது

சிறந்த பாலியல் செயல்திறனுக்கு சிறப்பான உணவு அவசியமாக கருதப்பட்டது

வயிறு நிரம்பும்போதுதான் பெண்களின் சிற்றின்பம் மற்றும் சரீர இன்பங்கள் ஏற்படுகின்றன என்பது காம சூத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காம சூத்திரத்தில் உணவு பற்றிய முழு அத்தியாயமும் உள்ளது, இது நல்ல உணவை உட்கொள்வது சிறந்த பாலியல் செயல்திறனுக்கு வழிவகுக்கிறது என்று கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Intimacy Beliefs of Ancient India

Check out the shocking intimacy beliefs of ancient India.
Desktop Bottom Promotion