For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணற்ற விலங்குகள் இருக்கையில் இந்தியாவின் தேசிய விலங்காக புலி இருக்க காரணம் என்ன தெரியுமா?

புலிகளை பாதுகாக்கவும், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

|

புலிகள் என்றாலே நாம் அனைவரும் பயப்படுவோம். ஏனெனில், அதன் தோற்றமும், கர்ஜனையும் நம்மை நடுங்கவைக்கும். அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழும் சுபாவம் கொண்டவை புலிகள். ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது அதிசயம். புலிகளைப் பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

International Tiger Day: Know Total Tiger count in India and World in tamil

வங்காளப் புலி (பெங்கால் டைகர்) இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாக குறையத் தொடங்கியது. இதனால், புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில், புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாகவும், உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கட்டுரையில் புலிகள் பற்றியும் இந்தியாவில் அதன் எண்ணிக்கை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Tiger Day: Know Total Tiger count in India and World in tamil

Here we are talking about the International Tiger Day: Know Total Tiger count in India and World in tamil.
Story first published: Thursday, July 29, 2021, 14:06 [IST]
Desktop Bottom Promotion