Just In
- 58 min ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 3 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 5 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 6 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
Don't Miss
- News கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து நீக்கம்! இரவோடு இரவாக வந்த உத்தரவு! என்னாச்சு?
- Sports பதிரானாவை ஓரம்கட்ட மும்பை போட்ட திட்டம்.. தவிடுபொடியாக்கிய பட்லர், ஜெய்ஸ்வால்.. மாட்டிக்கொண்ட துஷாரா
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலக தாய்மொழி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? இதுக்கு பின் இருக்கும் கொடூர வரலாறு என்ன தெரியுமா?
சர்வதேச தாய்மொழி தினம் 1999 நவம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில் ஒரே மொழியை பேசும் மக்கள் உள்ளன. இந்தியா போன்ற பல நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழிதான். அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது. உலக தாய்மொழி தினம் (International Mother Language Day) ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் பன்மொழிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை மேம்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இக்கட்டுரையில் உலக தாய்மொழி தினத்தின் வரலாறு? ஏன் கொண்டாடப்படுகிறத? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உலக தாய்மொழி தினம்
சர்வதேச தாய்மொழி தினம் 1999 நவம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மொழி இயக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் தொடங்கப்பட்டது.
உலக தாய்மொழி தின வரலாறு
1952 இல் இதே நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக சர்ச்சையால் உயிர்நீத்தவர்களுக்கு இத்தினத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.
நினைவுச்சின்னம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஆஷ்ஃபீல்ட் பூங்காவில் சர்வதேச தாய்மொழி தின நினைவுச்சின்னம் ஒன்று, அன்று உயிரிழந்த நான்கு இளம் மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படும்போது, மக்கள் அவ்விடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். மொழி பன்முகத்தன்மையின் சீரழிந்த நிலைக்கு எதிரான போராட்டத்தில் இளம் உயிர்கள் செய்த தியாகத்தை நினைவூட்டுவதாகும்.
எங்கு பொதுவிடுமுறை?
சர்வதேச தாய்மொழி தினத்தில் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் மொழி பெருமைகளை கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்நாள் பங்களாதேஷில் ஒரு பொது விடுமுறை தினமாகும். இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான நிகழ்வுகளில் யுனெஸ்கோ மற்றும் பிற ஐ.நா முக்கிய பங்கு வகிக்கிறது .
சர்வதேச தாய்மொழி தினத்தின் தீம்
சமூகங்களின் ஒற்றுமை மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தீம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2022 சர்வதேச தாய்மொழி தினத்தின் கருப்பொருள் 'பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்பதாகும். ஐ.நா. தனது அறிக்கையில், இந்த ஆண்டின் கருப்பொருள் பன்மொழிக் கல்வியை முன்னேற்றுவதற்கும், அனைவருக்கும் தரமான கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தின் சாத்தியமான பங்கை உயர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இறுதிகுறிப்பு
உலகில் பேசப்படும் 6000 மொழிகளில் குறைந்தபட்சம் 43 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன. மேலும் மொழியின் முக்கியத்துவம் மற்றும் அது வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நாள் கடைபிடிக்கிறது.