For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...!

மரணம் எப்போது வரும் எப்படி வரும் என்று யாராலும் கூற முடியாது. மரணத்தின் மீது இருக்கும் பயத்தினால்தான் என்னவோ அதனைப்பற்றி தெரிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

|

உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் மரணம்தான். மரணம் என்பது அனைத்திற்கும் மேலான நித்திய உண்மையாகும். அனைத்து மதங்களும் இதனை ஒப்புக்கொள்கிறது. மனிதனாக பிறந்த அனைவருமே ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும். இந்த உண்மையை அனைவரும் அறிந்தாலும் அதிலிருந்து தப்பிக்கத்தான் அனைவரும் நினைக்கின்றனர்.

Interesting Facts Related to Death

மரணம் எப்போது வரும் எப்படி வரும் என்று யாராலும் கூற முடியாது. மரணத்தின் மீது இருக்கும் பயத்தினால்தான் என்னவோ அதனைப்பற்றி தெரிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த பதிவில் மரணம் பற்றிய சில பழமையான உண்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறந்த விந்துதள்ளல்

இறந்த விந்துதள்ளல்

விந்து வெளியேறுவது ஆண்கள் மிகவும் ரசிக்கும் ஒன்று. ஆச்சரியம் என்னவென்றால், மரணத்திற்குப் பிறகும் நாம் அதை அனுபவிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இறந்த மனித உயிரணுக்களின் சவ்வுகள் கால்சியத்திற்கு ஊடுருவக்கூடியதாக மாறும், இது கால்சியம் அயனிகளால் சில வகையான தசைசெல்களை செயல்படவைக்கக்கூடும். இது தசைகளில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக ஆண்குறியில், இது ஒரு விறைப்புத்தன்மை மற்றும் விந்துதள்ளலுக்கு வழிவகுக்கிறது.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் அதிகம் இறக்கிறார்கள்

இடது கை பழக்கம் உள்ளவர்கள் அதிகம் இறக்கிறார்கள்

இந்த உலகத்தில் வலது கை பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம். எனவே அனைத்து தயாரிப்புகளும் வலது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைத்துதான் தயாரிக்கப்படுகிறது. இதனால் இடது கை பழக்கமுள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் சில இடது கை மக்கள் இந்த மரபுக்கு தங்கள் உயிரைக் கொடுத்து விலை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 2500 இடது கை பழக்கமுள்ள மக்கள் வலது கை மக்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தி தங்கள் உயிரை இழந்தனர். இது மனிதர்களின் தவறு மட்டுமல்ல, இயற்கையின் தவறும் கூட . சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இடது கை பழக்கமுள்ளவர்களின் சராசரி ஆயுட்காலம் 66 ஆகும், ஆனால் வலது கை பழக்குமுள்ளவர்களின் ஆயுட்காலம் 75 ஆகும்.

தவறான மருந்துசீட்டு

தவறான மருந்துசீட்டு

உங்கள் மருத்துவர் எழுதிய மருந்துகளில் ஒன்றைக் கண்டுபிடித்து படிக்கவும். நீங்கள் பெரும்பாலும் மருந்தின் பெயரை தவறாகப் படிக்கிறீர்கள், அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும். வேதியியலாளர் தவறாக மருந்தை தவறாகப் படித்து உங்களுக்கு தவறான ஒன்றைக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள்? ஆம், இது உயிருக்கு ஆபத்தான தவறு. ஒரு கணக்கெடுப்பின்படி, மருத்துவரின் மெல்லிய கையெழுத்து காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 7000 பேர் இறக்கின்றனர். மருத்துவர்களின் சுருக்கமான கையெழுத்தும், தெளிவில்லாத மருந்தின் அளவும் உயிருக்கு ஆபத்தானது என்று தேசிய அறிவியல் அகாடமி ஆஃப் மெடிசின் நிறுவனம் கூறுகிறது. எனவே, இந்த பிழை மற்றும் குழப்பத்தை அகற்ற அதிகபட்ச மருத்துவமனைகள் மின்னணு மருந்துகளை அறிமுகப்படுத்துகின்றன.

MOST READ:இந்த ராசிக்காரங்களுக்கு மத்தவங்கள விட புத்தி கொஞ்சம் கம்மியாதான் இருக்குமாம் தெரியுமா?

 தலையில்லா கரைப்பான் பூச்சிகள்

தலையில்லா கரைப்பான் பூச்சிகள்

கரப்பான் பூச்சி அதன் தலை இல்லாமல் சுற்றி வாழ்வதை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா? இது போன்ற ஒன்றை நீங்கள் கண்டால், பீதி அடைய வேண்டாம். கரப்பான் பூச்சிகள் அதன் தலை இல்லாமல் ஒன்பது நாட்கள் வரை வாழக்கூடும், ஏனென்றால் கரப்பான் பூச்சிகள் சுவாசிக்க தலையை சார்ந்து இருப்பதில்லை. அவை உடல் முழுவதும் இருக்கும் சிறு துளைகள் மூலம் சுவாசிக்கக் கூடியவை. தலையில்லாத போது பசியால் மட்டுமே அவை இறக்கின்றன.

மரண சிரிப்பு

மரண சிரிப்பு

சிரிப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதயத்தை பாதுகாக்கிறது மற்றும் முழு உடலையும் நெகிழ்வாக்குகிறது. ஆனால் சிரிப்பால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதா? ஆமாம், அதிக சிரிப்பால் ஒருவர் இறக்கக்கூடும். உதாரணமாக, கிரேக்க ஸ்டோயிக் தத்துவஞானி கிறிஸிபஸ் ஒருமுறை தனது கழுதை அத்திப்பழங்களை சாப்பிடுவதைக் கண்டார். அத்திப்பழங்களை கழுவும் வகையில் கழுதைக்கு கொஞ்சம் மது கொடுக்குமாறு தனது அடிமையிடம் கூறினார். ஆனால் தனது கழுதை மது அருந்துவதை கண்டு அதிகமாக சிரித்து இறுதியில் அதன் விளைவாக உயிரைவிட்டார்.

சிலுவையில் அறையப்படுவது

சிலுவையில் அறையப்படுவது

இயேசுவின் இரக்கமற்ற மரணதண்டனை நினைவில் இருக்கிறதா? அந்த நடைமுறை சிலுவையில் அறையப்படுதல் என்று அழைக்கப்படுகிறது, இதில் பாதிக்கப்பட்டவர் ஒரு பெரிய மர சிலுவையில் அறைந்து, இறக்கும் வரை தூக்கிலிடப்படுவார். இந்த மெதுவான மற்றும் வேதனையான மரணதண்டனை சந்தேகத்திற்கு இடமின்றி மனிதகுலத்திற்கு எதிரானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சிலுவையில் அறையப்படுவது சூடான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சட்டபூர்வமான மரண தண்டனை ஆகும். அண்மையில் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு ஈராக்கில் குழந்தைகளின் தலை துண்டிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதாக பல வழக்குகளை அறிவித்தது.

MOST READ:சாணக்கியரின் கூற்றுப்படி இந்த மூன்றுபேருடன் தெரியாமல் கூட நட்பு வைத்துக்கொள்ளக் கூடாதாம்...!

 மரணத்தை தாமதப்படுத்திய மனிதன்

மரணத்தை தாமதப்படுத்திய மனிதன்

மரணத்தை தள்ளிப்போட நீங்கள் டேவிட் லண்டாக இருக்க வேண்டும். மரணத்தை தாமதப்படுத்திய ஒரே மனிதர் இவர்தான். தெற்கு டகோட்டாவில் 1877 ஜனவரி 14 ஆம் தேதி, அவரது சலூனில் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இந்த நேரத்தில் இறந்திருக்க வேண்டும், ஆனால் அவர் தப்பிப்பிழைத்து 67 நாட்கள் வரை சாதாரணமாக வாழ்ந்தார். பின்னர் திடீரென்று அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டு இறந்தார். தலையில் புல்லட் சுட்டு டேவிட் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. ஆனால் அவர் தலையில் அந்த புல்லட் மூலம் இவ்வளவு காலம் எப்படி உயிர் தப்பினார் என்பதை யாராலும் விளக்க முடியவில்லை.

 கழுகு விருந்து

கழுகு விருந்து

மதம் அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட வெவ்வேறு இறுதி சடங்குகள் உள்ளன, ஆனால் திபெத்திய புத்த மதத்தினர் அளவிற்கு எதுவும் வித்தியாசமாக இருக்க வாய்ப்பில்லை. . தங்கள் சமூகத்தில் யாராவது இறந்தால், அவர்கள் இறந்த உடலை சிறிய பகுதிகளாக வெட்டி, பின்னர் ஒவ்வொரு பகுதியையும் கூழ் போல மாறும் வரை அடிப்பார்கள். பின்னர் அதனை கழுகிற்கு விருந்தாக வைத்துவிடுகிறார்கள்.

 இறந்தவர்களுடன் நடனமாடுவது

இறந்தவர்களுடன் நடனமாடுவது

மடகாஸ்கரில், மக்கள் ஃபமதிஹானா என்று அழைக்கப்படும் ஒரு இறுதி சடங்கு பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள், அதில் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் எலும்புகளை தோண்டி, புதிய ஆடைகளில் மீண்டும் போர்த்தி, பின்னர் அவர்களுடன் நடனமாடுகிறார்கள். எலும்புகளை திரும்ப எடுப்பது பாரம்பரியம் என்று நம்பப்படுகிறது. இந்த சடங்கு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் செய்யப்படுகிறது. இறந்தவர்களின் ஆவிகள் உடலின் முழுமையான சிதைவு மற்றும் பொருத்தமான விழாக்களுக்குப் பிறகு மூதாதையரின் உலகில் இணைகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.

MOST READ:மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..

 மனித உடலை சோப்பாக மாற்றுவது

மனித உடலை சோப்பாக மாற்றுவது

மனித உடலை சோப்பாக மாற்றக்கூடிய ஒரு செயல்முறை உள்ளது. இந்த செயல்முறை சபோனிஃபிகேஷன் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக கொழுப்பு மற்றும் லை ஆகியவற்றிலிருந்து சோப்பை உற்பத்தி செய்யும் செயல்முறையாகும், இதில் கொழுப்பு திசுக்கள் (கல்லறை மெழுகு) அல்லது சடலம் சீஸாக மாறும். ஸ்மித்சோனியனின் தேசிய வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம் 1875 ஆம் ஆண்டில் பிலடெல்பியா ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு மம்மிய மனிதனைக் கண்டுபிடித்தது, இது சோப்பாக மாற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: weird world உலகம்
English summary

Interesting Facts Related to Death

Find out some most interesting facts related to death.
Story first published: Tuesday, February 18, 2020, 18:23 [IST]
Desktop Bottom Promotion