Just In
- 1 hr ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 4 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 5 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 6 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உடல்உறுப்பு தானம் செய்ய என்ன செய்ய வேண்டும்? சட்டம் என்ன சொல்கிறது?
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட புதிய உறுப்பு தானம் சட்டம் என்ன சொல்லுகிறது, வாங்க பார்க்கலாம். அதுபற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
அடுத்த வருடம் முதலிலே உறுப்பு தானத்திற்கான சட்டத்தை திருத்தம் செய்ய இங்கிலாந்து அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த புதிய உறுப்புதான சட்டத்தின் படி யார் இனி இறந்தாலும் அவர்களின் உறுப்புகளை தானமாக கொடுக்க முடிவு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் மரணத்திற்கு பின்பு அவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதா என்பதும் பதிவு செய்யப்படும்.
உறுப்பு தானத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உறுப்பு தானம் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் இறப்பிற்கு பிறகு தங்களது உறுப்புகளை தானம் செய்து பிறருக்கு உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
பிரிட்டிஷ் இந்திய சமூகம், ஜெயின் மற்றும் இந்து சமூகத்தினர் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த புதிய உறுப்பு தானம் சட்டத்தை பற்றிய விவரங்களை பற்றியும் மக்களிடம் கூறி வருகிறார்கள். இதற்காக இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லார்ட் ஜிதேஷ் காடியாவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
MOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்
மக்களின் ஒத்துழைப்பு
அடுத்த ஆண்டு சட்டம் அமலுக்கு வரும் போது ஒவ்வொருவரும் தங்கள் ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த சீர்த்திருத்தம் மற்றும் பிரச்சாரம் உறுப்பு தானம் பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறினார்.
தேசிய குழு
இதற்காக ஜெயின் மற்றும் இந்து சமூகங்கள் சேர்ந்த தேசிய குழு(JHOD) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இங்கிலாந்தில் உள்ள உறுப்பு தானத்திற்கு பொறுப்பான அமைப்பான என்.எச்.எஸ். இரத்த மற்றும் மாற்று அறுவை சிகிச்சையுடன் கூட்டுச்சேர்ந்து இந்த பணியை செய்து வருகிறார்கள். " இவர்களின் பங்களிப்பால் ஒவ்வொருவரும் தங்கள் உறுப்புகளை தானமாக கொடுத்து ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும். உயிருக்கு போராடுபவர்களையும், உடல் உறுப்பு ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வும் தர உதவ முடியும்" என்று JHOD இன் தலைவர் கிரிட் மோடி கூறினார்.
வீடியோக்கள் வழி பிரச்சாரம்
இந்து மற்றும் ஜெயின் அமைப்புகள் இந்த புதிய உறுப்பு தானம் குறித்து வீடியோக்களையும், துண்டுப்பிரசுரங்களையும் உருவாக்கி வருகிறது." மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இது குறித்து நம் கலாச்சாரங்களில் ஏராளமான கருத்துக்கள் கூறியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தான் இறந்த பிறகும் மற்ற உயிர்களுக்கு கை கொடுக்க முடியும். அதற்கு உறுப்பு தானம் செய்ய வேண்டும். உறுப்பு தானத்தின் மூலம் நீங்கள் மற்றவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் புத்துயிரும் கொடுக்க முடியும். இது நம் கடமை மட்டுமல்ல நம் மனிதாபிமான செயலும் கூட. என்று திரு காடியா கூறுகிறார்.
அவர்களின் விருப்பம்
இந்தச் சட்டத்தின் கீழ் பெரியவர்களுக்கு உறுப்பு தானம் செய்வதற்கான விருப்பங்கள் இருக்கும். மரணத்திற்கு முன்பே அவர்களின் விருப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவரின் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்தார்கள், உறவினர்கள் அவரின் விருப்பத்தை நிறைவேற்றி கெளரவிக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
MOST READ: கலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? எத்தனைக்கு மேல் சாப்பிடக்கூடாது?
விலக்கப்பட்ட நபர்கள்
விலக்கப்பட்ட குழுவில் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள், மனநல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கிலாந்துக்கு வருபவர்கள், தானாக முன் வருபவர்கள், 12 மாதங்களுக்கு குறைவாக இங்கிலாந்தில் வாழ்பவர்கள் இவர்கள் இதில் இடம் பெறவில்லை. "ஒவ்வொருவரும் உறுப்பு தானம் பற்றி தங்கள் முடிவை மற்றவர்களிடம் பேசுவதும் தங்கள் குடும்பத்தினரிடம் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியம்." ன்று NHS இரத்த மற்றும் மாற்று வாரியத்தின் தலைவர் மில்லே பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். JHOD யின் இந்த கூட்டு முயற்சி கண்டிப்பாக மக்களிடையே இன்னும் உறுப்பு தானம் குறித்து நிலவி வரும் தடைகளை நிச்சயமாக மாற்றும்.
இனியாவது இறந்த பின் வீணாக மண்ணில் மட்கிப் போகும் உறுப்புகளை தானம் செய்து பிற உயிர் காப்போம். இறந்த பின்னும் வாழ்வோம் மனிதர்களே!