Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 5 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காதல் முறிவுக்கு பின் ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி நடந்துக்குவாங்க தெரியுமா?
ஜோதிடத்தில் காதல் முறிவுக்கு பின் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரி நடந்து கொள்வார்கள் என கணித்து கூறப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் காதல் முறிவுக்கு பின்பு எப்படி நடப்பார்கள் என்பதைக் காண்போம்.
காதலானது பலருக்கும் கல்லூரி காலத்தில் பூத்திருக்கும். அப்படி காதலித்தவரை தான் கரம்பிடித்துள்ளீர்களா என்று கேட்டால் நிச்சயம் அதில் ஏராளமானோரில் பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஒருவர் மீது எப்படி காதல் அவ்வளவு எளிதில் பூக்காதோ, அப்படி காதலிப்பவரை கரம்பிடித்து வாழ்நாள் முழுவதும் வாழ்வது என்பதும் கடினமான ஒன்று தான். சொல்லப்போனால் தற்போது காதலித்து வெற்றிகரமாக திருமணம் செய்தோரின் எண்ணிக்கையை விட, காதல் முறிவானவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
காதல் முறிவான பின்னர் பலரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். சிலர் அதை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல மனதை தயார் படுத்து வாழ்வார்கள். இன்னும் சிலர் காதலித்தவரை நினைத்து தன்னைத் தானே வாட்டி வதைத்துக் கொள்வர். இப்படி காதல் முறிவான பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வதுண்டு. ஜோதிடத்தில் காதல் முறிவுக்கு பின் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரி நடந்து கொள்வார்கள் என கணித்து கூறப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் காதல் முறிவுக்கு பின்பு எப்படி நடப்பார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், காதல் முறிவுக்கு பின்னர் அதிகம் கவலைப்படாமல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வார்கள். சொல்லப்போனால், காதல் முறிவினால் ஏற்பட்ட வலியை மறை(ற)க்க பிடித்த பொழுதுபோக்குகள் மற்றும் வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். மற்றும் சில நாட்களிலேயே புதிய ஒருவருடன் டேட்டிங் செய்ய தொடங்கிவிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களை முடிந்தவரை மிகவும் பிஸியாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். மொத்தத்தில், மேஷ ராசிக்காரர்கள் எதற்கும் அதிகம் வருத்தப்பட்டு சோர்ந்து போகாமல், வேகமாக முன்னேறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அதிகம் வருத்தப்படுவார்கள் மற்றும் முழுமையாக மீள்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் பழிவாங்கும் உணர்வையும் பொறாமை உணர்வையும் கொண்டிருப்பார்கள். காதல் முறிவிற்கு பின் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள் அல்லது அடுத்த காதலில் விழ மாட்டார்கள். மொத்தத்தில், ரிஷப ராசிக்காரர்கள் காதல் முறிவால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள்வதற்காக தங்களின் அன்றாட வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்களின் முன்னாள் காதலி/காதலனை கேலி செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குள் சிரிப்பார்கள். மேலும் பார்ட்டி மற்றும் மது அருந்துவது என்று இருப்பார்கள். ஆனால் தங்களின் முன்னாள் காதலி/காதலனை சமூக ஊடகங்களில் என்ன செய்கிறார்கள் என அமைதியாக பின்தொடர்வார்கள். அதே வேளையில், பிரிந்த சில நாட்களில் சாதாரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உண்மையான அன்பை மனதார நம்புவதால், காதல் முறிவிற்கு பின் கடினமான காலங்களை கடந்து செல்வார்கள். அதுவும் நீண்ட காலம் காதல் முறிவின் துக்கத்திலேயே இருப்பார்கள் மற்றும் இவர்கள் எதார்த்தத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற அதிக நேரம் ஆகும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய காதலை கண்டுபிடிக்கும் வரை காதல் முறிவின் வலியை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் காதல் முறிவை மறக்க அழுவது, இசையை கேட்பது, திரைப்படங்கள் காண்பது என தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு, சில காலம் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தாங்களாவே தங்களின் காதலை முறித்துக் கொண்டால், அது அவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் யாரேனும் அவர்களிடமிருந்து பிரிந்தால், அவர்களைத் துரத்திச் சென்று சாவடிப்பார்கள். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இந்த ராசிக்காரர்கள் சில நாட்களிலேயே தங்களின் வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்துவிடுவார்கள். இருப்பினும், காதல் முறிவிற்கு பின் தனது பழைய காதலை துரத்தி மீண்டும் சேர்வதற்கு முயற்சிகளை எடுப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். ஆனால் தங்கள் அன்பிற்குரியவரின் மனதைப் புரிந்து கொள்ளாமல் உறவில் இருந்து எளிதில் வெளியேறிவிடுவார்கள். ஆனால் வேறொருவர் இவர்களிடம் இருந்து விலகி, அவர்களின் இதயத்தை உடைக்கும் போது, உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், கவனிப்பையும் தேடுவார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு, மனதார அழுவார்கள். பொதுவாக காதல் முறிவு இந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கும். ஆனால் விரைவில் அதிலிருந்து வெளிவருவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் காதல் முறிவுக்கு பின் ஆழ்ந்த மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுவார்கள். மேலும் இவர்களது வாழ்க்கையில் புதிய நபர் ஒருவர் வந்தால் மட்டுமே அவர்கள் சரியாவார்கள். அதோடு இந்த ராசிக்காரர்கள் தங்களின் காதல் முறிவால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து வெளிவர பயணம், எழுதுவது, படிப்பது மற்றும் இசையை கேட்பதன் மூலம் வெளியே வருவார்கள். முடிந்தவரை தங்கள் முன்னாள் காதலருடன் சாதாரண நட்பை வைத்திருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதல் முறிவின் துக்கத்தில் இருந்து வெளிவர நீண்ட காலம் ஆகும். இதற்கு அவர்களது வெறித்தனமான குணம், பொறாமை மற்றும் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற இயல்பு தான் காரணம். மேலும் காதல் முறிவுக்கு பின் இவர்கள் மிகவும் எரிச்சலும், கோபமும் நிறைந்திருப்பார்கள். சில சமயங்களில விரக்தியடைந்தும் காணப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் காதல் முறிவுக்கு பின் தனது பழைய காதலி/காதலனை சமூக ஊடகங்களில் பின்தொடர்வார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் தனது காதல் முறிவின் துயரத்தில் இருந்து நண்பர்கள், குடும்பம், தொழில் மற்றும் தங்களின் குறிகோள்கள் மூலம் மீண்டு வருவார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் புதிய உறவில் நுழைவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் காதல் முறிவிற்கு பின் அந்த சோகத்தில் மூழ்கி இருக்கமாட்டார்கள். மாறாக, அமைதியாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பார்கள். ஆனால் மீண்டும் தனது பழைய காதலைப் பெற முயற்சி எடுப்பார்கள். இருப்பினும், பெரும்பாலும் தங்கள் முன்னாள் காதலைத் திரும்பப் பெறுவதில் வெற்றி பெறுவதில்லை. மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய முன்னாள் துணையைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் தனது வாழ்க்கையில் வேறு ஏதாவது ஆர்வமான செயல்பாடுகளை கண்டால், அதில் ஈடுபட்டு குணமடைவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒரு பழமைவாத மக்கள் மற்றும் யாருடனும் அதிகம் பழகமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் எளிதில் உறவில் விழுவார்கள் மற்றும் அவ்வளவு எளிதில் தனது உறவை விட்டு செல்லமாட்டார்கள். ஒருவேளை தனது காதல் முறிந்தால், அதை நினைத்து உள்ளுக்குள்ளேயே அழுவார்கள். ஆனால் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டார்கள். தன் முன்னாள் துணைணை மீண்டும் தன் வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் காதல் முறிவிற்கு பின் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள். தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளமாட்டார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் வேறொருவரை மணந்தாலும், சில சமயங்களில் தங்களின் கடந்த கால நினைவில் இருப்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் காதல் முறிவிற்கு பின் அதிகமாக அழுவார்கள் மற்றும் உணர்வு ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், சோகமாகவும், இருண்டவர்களாகவும் இருப்பார்கள். தனது காதலைப் பிரிந்த பின் இசை, கவிதை, எழுத்து மற்றும் தனிமை ஆகியவற்றை தேடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் பழைய காதலை மீண்டும் வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிப்பார்கள். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பழைய காதலில் இருந்து வெளியே வர நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒருவேளை பழைய துணை தங்களை ஏமாற்றுவதைக் கண்டறிந்தால், அவர்களைப் பிரிந்து வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவார்கள்.