Just In
- 56 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியம் எப்படி அழிவை சந்தித்தது தெரியுமா? உங்களுக்கு தெரியாத வரலாறு...!
சோழர்களின் புகழ் தெரிந்த நமக்கு அவர்களின் வீழ்ச்சியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆட்சி செய்தாலும் அவர்களால் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. முகலாயர்கள் மட்டுமின்றி வடஇந்தியாவை ஆண்ட எந்த அரசராலும் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. இதற்கு காரணம் தென்னிந்தியாவை ஆண்ட சேர, சோழ, பாண்டிய அரசர்கள்தான். பல நூற்றாண்டுகள் தென்னிந்தியா முழுவதையும் ஆட்சி செய்தது இவர்கள்தான்.
11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ இராஜ்ஜியம் மற்ற இராஜ்ஜியங்களை விட மிகவும் பெரியதாக இருந்தது. இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன் போன்ற திறமையான மன்னர்களால் சோழர்களின் புகழ் கடல் கடந்து பரவியது. எந்த கோட்டையும் சரியும் என்ற கூற்றுக்கு ஏற்றாற்போல சோழ சாம்ராஜ்ஜியமும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. சோழர்களின் புகழ் தெரிந்த நமக்கு அவர்களின் வீழ்ச்சியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் மாபெரும் சோழ சாம்ராஜ்ஜியம் எப்படி வீழ்ச்சி அடைந்தது என்று பார்க்கலாம்.
குலோத்துங்க சோழன்
சோழர்களின் பரந்த இராஜ்ஜியத்திற்கு தலைமை தாங்கிய கடைசி அரசர் முதலாம் குலோத்துங்க சோழன்தான். சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும் முதலாம் குலோத்துங்க சோழன் அமைதியை விரும்புபவராக இருந்தார். இதன் விளைவாக இலங்கை சோழர்களின் கையை விட்டு சென்றது, சோழர்களின் கீழ் இருந்த பாண்டிய இராஜ்ஜியங்களும் நழுவத் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து விக்ரம சோழனும், இரண்டாம் குலோத்துங்க சோழனும் சிறப்பாக ஆட்சி செய்தாலும் சோழ சாம்ராஜ்யத்தின் முடிவு இரண்டாம் இராஜ ராஜ சோழர் காலத்தில் இருந்துதான் தொடங்கியது.
உள்நாட்டு யுத்தம்
இரண்டாம் இராஜ ராஜ சோழன் திறமையான ஆட்சியாளராக இருந்தபோதிலும் அவரது ஆட்சிக்காலத்தில் பாண்டிய இராஜ்ஜியத்தில் உள்நாட்டு போர் வெடித்தது, இதனால் அங்கிருந்த சோழர்களின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. இந்த உள்நாட்டு போருக்கு காரணம் சோழர்களின் ஆதிக்கத்தை பாண்டியர்கள் எதிர்க்க தொடங்கியதுதான். இருப்பினும், மிகப்பெரிய சோழ சாம்ராஜ்ஜியத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் இவரால் வைக்க முடிந்தது. ராஜாதிராஜ சோழரின் ஆட்சியில் பாண்டியர்கள் மீதான சோழர்களின் ஆதிக்கம் மேலும் பலவீனமடைந்தது.
பாண்டியர்களின் போர்
சோழர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்கள் பாண்டிய சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் அதனை பாண்டியர்களையே தங்களுக்கு கீழ் ஆட்சி செய்த அனுமதித்தனர். பாண்டிய ஆட்சியாளர்கள் பராக்கிரம பாண்டியனுக்கும், குலசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பின்னாளில் மதுரையை தாக்க செய்தது. பராக்கிரம பாண்டியன் இலங்கை ஆட்சியாளர் முதலாம் பராக்ரமபாஹுவின் உதவியை நாடினார். ஆனால் குலசேகரன் பராக்கிரம பாண்டியனையும் அவர் குடும்பத்தையும் கொன்று மதுரையை கைப்பற்றிவிட்டார். இலங்கை ஆட்சியாளர் குலசேகரனை பதவி நீக்கம் செய்ய ராஜாதிராஜா சோழனின் உதவியை நாடினார்.
குலசேகரனின் துரோகம்
சோழர்கள் இலங்கை ஆட்சியாளருடன் போரிட்டு குலசேகரனனின் அரியணையை பாதுகாத்தனர். இந்த படையெடுப்பில் இலங்கையின் பல பகுதிகள் அழிக்கப்பட்டது, இதனிடையே பராக்ரமபாகு குலசேகரனனுடன் கூட்டணி வைத்து சோழர்களை எதிர்க்கத் தொடங்கினார். சோழர்கள் குலசேகரனை ஜெயித்தாலும் சோழ படைகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டது. மேலும் பல நிலப்பிரபுக்கள் சோழ இராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து செல்லத் தொடங்கினர். உள்நாட்டு குழப்பங்களால் பல ஒழுங்குமுறை பிரச்சினைகள் ஏற்பட்டது.
மூன்றாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறியவுடன் பரந்த இராஜ்ஜியத்தை ஆட்சி செய்ததுடன் மேலும் நிலப்பரப்புகளை கைப்பற்றவும் தொடங்கினார். அவரது பிற்கால ஆண்டுகள் பாண்டியர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளால் குறிக்கப்பட்டன. சோழர்களின் இராஜ்ஜியம் வீழ முக்கிய காரணம் அவர்கள் பாண்டியர்களுக்கு தங்கள் நிலப்பரப்பை ஆள முழுசுதந்திரம் வழங்கியதுதான். இதுதான் அவர்களை சோழர்களுக்கு எதிராக போரிட தூண்டியது. முந்தைய ஆட்சியாளர்களான இராஜேந்திர சோழன், இராஜ ராஜ சோழன் போன்ற அரசர்கள் பாண்டிய இராஜ்ஜியத்தில் நிர்வகிக்க ஒரு ஒரு இளவரசரை எப்போதும் வைத்திருந்தனர்.
வீழ்ச்சியின் தொடக்கம்
பிற்கால சோழர்களின் ஆட்சிக்காலத்தில் சூசரண்டியின் அடிப்படையில் இந்த முறை மாற்றப்பட்டது, இது பேரழிவுக்கு வழிவகுத்தது. பாண்டிய உள்நாட்டுப் போர்களில் சோழர்களின் தலையீடு அவர்களுக்கு எந்த நன்மையையும் வழங்கவில்லை, மேலும் அது பாண்டிய சக்தியின் எழுச்சிக்கு வழிவகுத்தது. மறுமுனையில், ககாதியா ஆட்சியாளர் கணபதிதேவா 1216 இல் தெலுங்கு சோழர்களை தோற்கடித்து தனது பிரதேசத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார், இதனால் மேலும் அதிகமான பிரதேசங்களை சோழர்கள் இழந்தனர். மேலும் சோழர்களுக்குள்ளேயே தொடர்ச்சியான போட்டிகள், அரண்மனை மோதல்கள் ஆகியவை ஏற்பட்டதால் அவர்கள் மேலும் சிதைக்கப்பட்டனர். இது பேரரசை மேலும் பலவீனப்படுத்தியது.
மாறவர்மன் சுந்தர பாண்டியன்
சோழ பேரரசுக்கு பெரிய அடியாக விழுந்தது மாறவர்ம சுந்தர பாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றி மூன்றாம் இராஜராஜ சோழனை நாடுகடத்தியதுதான். குலோத்துங்க சோழன் தனது ஹொய்சாலா கூட்டாளியான வீரா மூன்றாம் பல்லாலா உதவியுடன் அரியணையைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனால் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி இப்போது தவிர்க்க முடியாதது, பாண்டியர்கள் பிரிந்து ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். மூன்றாம் ராஜராஜ சோழரின் ஆட்சி, இறுதியாக சோழப் பேரரசின் முடிவைக் குறித்தது.
மூன்றாம் இராஜராஜ சோழன்
தெலுங்கு பிராந்தியத்தில் பெரும்பாலான பகுதிகளை மீண்டும் கைப்பற்றி, ஆழமான தெற்கிலும், ககாதியாவிலும் பாண்டியர்கள் பிரிந்து சென்றதால், சோழ சாம்ராஜ்யம் மேலும் சரிந்தது. மூன்றாம் ராஜராஜ சோழர், முற்றிலும் திறமையற்ற ஆட்சியாளர் என்று அவருக்கு யாரும் உதவவில்லை. அவர் பாண்டியர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார், பாண்டியர்கள் தஞ்சாவூர் மீது படையெடுத்து அவரை நாடுகடத்தினார். மீண்டும் ஹொய்சாலர்கள் சோழர்களின் உதவிக்கு வந்தனர்.
MOST READ:மறைக்கப்பட்ட வரலாறு... உண்மையிலேயே இந்தியாவின் கொடூரமான ஆட்சியாளர் யார் தெரியுமா?
ஹொய்சலர்கள்
ஒரு காலத்தில் வலிமைமிக்க சாம்ராஜ்யம் இப்போது மிகவும் வலுவான ஹொய்சலாஸைச் சார்ந்து ஒரு இணைப்பு இராஜ்ஜியமாக மாறியது என்பது தெளிவாகத் தெரிந்தது. 1264-ல் பாண்டிய ஆட்சியாளரான ஜாதவர்மன் சுந்தர பாண்டியன் I, கங்கைகொண்ட சோழபுரத்தின் தலைநகரிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, ஹொய்சாலாவும் எந்த உதவியும் செய்யவில்லை. காஞ்சிபுரம் முன்னர் தெலுங்கு சோழர்களிடம் தோற்றதால், மீதமிருந்த சோழப் பகுதிகள் அதன்பின் பாண்டிய ஆட்சியின் கீழ் முழுமையாக இருந்தன.