Just In
- 12 min ago ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா? அப்ப இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
- 1 hr ago இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- 5 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 6 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
Don't Miss
- News "சுயமரியாதை" தான் முக்கியம்.. பாஜகவில் எழுந்த குரல்.. குஜராத் எம்எல்ஏ திடீர் ராஜினாமா! என்ன நடந்தது
- Technology இப்படி இருந்தா விடுவமா.. கஸ்டமர்கள் கும்பிடு.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
- Finance பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- Movies AR Murugadoss: 5 வருஷத்துக்கு முன்னாடியே சல்மான்கிட்ட கதையை சொல்லிட்டேன்.. ஏஆர் முருகதாஸ் வெளிப்படை!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
உங்க குரு அல்லது ஆசிரியரை ரொம்ப பிடிக்குமா? அப்ப அவர்களுக்கு இத அனுப்புங்க...ஷாக் ஆகிடுவாங்க!
குரு பூர்ணிமா என்பது தங்கள் சீடர்களையும் மாணவர்களையும் அறிவு மற்றும் ஞானத்துடன் வழிநடத்திய அனைத்து குருக்கள் மற்றும் கல்வி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்து பாரம்பரிய விழாவை குறிக்கிறது.
குரு பூர்ணிமா என்பது தங்கள் சீடர்களையும் மாணவர்களையும் அறிவு மற்றும் ஞானத்துடன் வழிநடத்திய அனைத்து குருக்கள் மற்றும் கல்வி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்து பாரம்பரிய விழாவை குறிக்கிறது. குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (ஜுன் - ஜூலை) வரும் பௌர்ணமி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இந்த நாள் இந்துக்களின் இதிகாசமான மகாபாரதத்தின் ஆசிரியரும் ஒரு கதாபாத்திரமான வேத வியாசரின் பிறந்தநாள் என்று நம்பப்படுகிறது. கௌதம புத்தர் தனது முதல் பிரசங்கத்தை உத்தர பிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் இந்த நாளில் நிகழ்த்தினார் என்றும் பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு, குரு பூர்ணிமா ஜூலை 13 அன்று கொண்டாடப்படுகிறது.
குருக்கள் இந்து பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர் மற்றும் கடவுளின் தூதுவர்களாகவும், அவர்களின் சீடர்களுக்கு இரண்டாவது பெற்றோராகவும் கருதப்படுகிறார்கள். மாணவர்கள் பொதுவாக இந்த நாளில் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் ஆசியைப் பெறுவதன் மூலமும் மரியாதை செலுத்துகிறார்கள். உங்களுக்குப் பிடித்த குருக்களுக்கு இந்த நல்ல நாளில் அவர்களைச் சிறப்பாக உணர செய்ய நீங்கள் அனுப்பக்கூடிய சில மேற்கோள்கள் மற்றும் செய்திகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வாழ்த்து 1
இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
வாழ்த்து 2
அனைத்து குருக்களும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
வாழ்த்து 3
பல மேதைகளை அறிவாளிகளை அறிஞர்களை உருவாக்கிய அனைத்து குருக்களையும் இந்நாளில் வணங்குகிறோம். குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
வாழ்த்து 4
குருவை விட உயர்ந்த தெய்வம் இல்லை, குருவின் அருளை விட சிறந்த அருள் இல்லை. குருவை வணங்குவதை விட உயர்ந்த நிலை இல்லை. -முக்தானந்தா
வாழ்த்து 5
இந்த சமூகத்தில் ஒரு நல்ல மாணவனாக மனிதனாக இருப்பதற்கு என்னுடைய குருவே முதல் காரணம். என் குருவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
வாழ்த்து 6
தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து வாழ்க்கையில் அவர்களை உயர்தவர்களாக மாற்ற உழைக்கும் அனைத்து குருக்களுக்கும் குறு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
வாழ்த்து 7
கற்பிப்பது என்பது பேசுவது அல்ல, கற்பித்தல் கோட்பாடுகளை வழங்குவதில்லை, அது தொடர்புகொள்வது.- சுவாமி விவேகானந்தர்
வாழ்த்து 8
நீங்கள் என்னை எனக்கு அறிமுகப்படுத்தி சரியான வழியைக் காட்டினீர்கள். என்னை நானாக ஆக்கியதற்கு நன்றி. குரு பூர்ணிமா வாழ்த்துகள்!
வாழ்த்து 9
குரு, கடவுள் இருவருமே என் முன் தோன்றுகிறார்கள். யாரை நான் முதலில் வணங்க வேண்டும்? கடவுளை எனக்கு அறிமுகப்படுத்திய என் குருவையே முதலில் வணங்குகிறேன். - கபீர்
வாழ்த்து 10
உலகில் எந்த மனிதனும் மாயையில் வாழ வேண்டாம். குரு இல்லாமல் யாராலும் வாழ்க்கையை கடக்க முடியாது.- குருநானக்