Just In
- 31 min ago 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- 1 hr ago உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- 2 hrs ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 3 hrs ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
Don't Miss
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Movies Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒருவருக்கு மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!
காகம் எமனின் தூதராக கருதப்படுகிறது. அதோடு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் காகங்களுக்கு முன்கூட்டியே கிடைப்பதாக கூறப்படுகிறது.
பறவைகளில் சனி பகவானின் வாகனம் தான் காகம். இந்த காகம் அதிகம் காணப்படும் மிகவும் பொதுவான பறவைகளில் ஒன்றாகும். இந்தியாவில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக தாவரங்கள், மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதில் காகம் எமனின் தூதராக கருதப்படுகிறது. அதோடு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் காகங்களுக்கு முன்கூட்டியே கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆகவே தான் மக்கள் காகங்கள் நமக்கு உணர்த்துவதற்காக வெளிக்காட்டும் அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது. இப்போது காகம் தொடர்பான சில நல்ல மற்றும் கெட்ட சகுனங்கள் பற்றி காண்போம்.
சகுனம் #1
சகுன சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் உங்கள் வீட்டின் பால்கனியில் அமர்ந்து கரைத்தால், உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரவிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அனைவருமே அறிந்த காகம் தொடர்பான தகவல்களில் ஒன்றாகும்.
சகுனம் #2
சகுன சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் மதிய வேளையில் வடக்கு திசையை நோக்கி கரைத்தால், அது நல்லது என்று கருதப்படுகிறது. அதேப்போல் காகம் கிழக்கு திசையை நோக்கி சப்தத்தை எழுப்பினால், அதுவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சகுனம் #3
நீங்கள் எங்கேனும் வெளியே சுற்றுலா அல்லது பயணம் செய்ய தயாராகி கிளம்பும் போது, திடீரென்று உங்கள் வீட்டு ஜன்னல் அல்லது பால்கனியில் காகம் வந்து கரைத்தால், நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நன்றாக அமையும் என்று அர்த்தம்.
சகுனம் #4
உங்கள் வீட்டு பால்கனியில் காக்கைகள் கூட்டமாக இருந்து கரைத்தால், அது நல்ல அறிகுறி அல்ல. இது உங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக இது உங்கள் குடும்பம் சிக்கலில் சிக்கலாம் அல்லது நீங்கள் ஏதோ நோய்வாய்ப்படலாம் என்று அர்த்தம்.
சகுனம் #5
காகம் உங்கள் வீட்டின் தெற்கு திசையில் அமர்ந்து சத்தம் எழுப்பினால், அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. அதுவும் இது உங்கள் முன்னோர்கள் உங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்றும், உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்க வாய்ப்புள்ளது என்றும் அர்த்தம்.
சகுனம் #6
சகுன சாஸ்திரத்தின் படி, காகம் தண்ணீர் குடிப்பதை பார்ப்பது நல்லது. முக்கியமாக இந்நிகழ்வை கண்டால், பணம் கையில் வந்து சேரும். அதுவும் ஒருவர் முக்கியமான வேலைக்கு வெளியே செல்லும் போது காகம் தண்ணீர் குடிப்பதைக் கண்டால், அந்த வேலையில் நிச்சம் வெற்றி கிடைக்குமாம்.
சகுனம் #7
காகம் ஒரு ரொட்டித் துண்டை தூக்கிக் கொண்டு செல்வதை ஒருவர் கண்டால், அது நல்ல சகுனம். அதுவும் இந்நிகழ்வை காண்பவரின் பெரிய ஆசைகள் நிறைவேறும் என்பதற்கான அறிகுறி தான் இது.
சகுனம் #8
சகுன சாஸ்திரத்தின் படி, காகமானது ஒருவரின் வாகனம், காலணி அல்லது உடலை தனது சிறகு கொண்டு உரசி சென்றால், மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.