Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கருட புராணத்தின் படி இந்த செயல்கள் உங்களின் ஆயுளை பாதியாக குறைக்கமாம் தெரியுமா?
சத்திய யுகத்தில் 1,00,000 ஆண்டுகளாக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் கலியுகத்தில் எப்படி 100 ஆண்டுகளாக குறைந்தது என்பது பற்றியும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது ஆயுட்காலத்தை குறைக்கக்கூடிய தவறான பழக்கங்கள் மற்றும் செயல்கள் பற்றி நமது பழங்கால வேதங்களிலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.பகவத் புராணம் மற்றும் கருட புராணம் போன்றவற்றில் மனிதர்கள் எப்படி தங்களின் ஆயுளைத் தாங்களே எப்படி குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்திய யுகத்தில் 1,00,000 ஆண்டுகளாக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் கலியுகத்தில் எப்படி 100 ஆண்டுகளாக குறைந்தது என்பது பற்றியும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை மனித சமூகம் தர்மம், ஞானம், அறிவு, அறிவுசார் திறன், உணர்ச்சி மற்றும் உடல் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த வரிசையில் மனிதர்களின் ஆயுட்காலமும் அடங்கும்.
பாண்டவர்களின் விவாதம்
கருட புராணம் எமலோகத்தின் வாசலில் எமதர்மருக்கும், தர்மனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைப் பற்றி விவாதிக்கிறது. அவரது வருகையை பாண்டவர்கள் உட்பட மற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், அவர்கள் பாவங்களை சமமாக பகிர்ந்துகொள்வது பற்றி வாதிட்டனர்.
எமதர்மன் கூறிய மரண ரகசியம்
யுதிஷ்டிரன் மற்ற பாண்டவர்களைப் போலவே சமமான பாவங்களை செய்திருக்கலாம், ஆனால் அவரது நல்ல பழக்கங்கள் அவரை கடைசியாக காப்பாற்றின என்று எமதர்மன் கூறினார். பிதாமகர் பீஷ்மா யுதிஷ்டிரருக்கு தர்மம் மற்றும் கர்மாவின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிவூட்டினார். மேலும் தவறான பழக்கங்கள் எப்படி ஒருவரின் ஆயுளைக் குறைக்கும் என்பது பற்றியும் கூறியுள்ளார்.
மகாபாரத உரையாடல்கள்
மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முந்தைய இரவில் அது நடந்தது. தங்களின் குடும்பத்தின் பெரியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்க யுதிஷ்டிரர் பீஷ்மரின் குடிலுக்கு விஜயம் செய்தார். அதற்கு பீஷ்மர் " "எங்கள் சொந்த செயல்களும் பழக்கங்களும் எங்களை எங்கள் முடிவுக்கு இட்டுச் செல்லும் " என்று கூறினார். கருட புராணத்தில் ஒருவரின் எந்தெந்த செயல்கள் அவரின் ஆயுட்காலத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அது என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
நாத்திகராக வாழ்வது
கடவுளின் உயர்ந்த சக்தியை நம்பாதவர் மற்றும் தர்மம் மற்றும் கர்மாவின் பாதையை பின்பற்றாதவர்களின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே இருக்கும். கடவுளை நம்பாதது மனிதகுலத்தை நம்பாததற்கு சமம்.
தவறான செயல்கள்
வயதில் மூத்தவர்களை தெரிந்தே அவமதிப்பது, தவறான பாதையில் அதன் விளைவுகள் என்னவென்றும் செல்வது உங்கள் ஆயுள் குறைய காரணமாக இருக்கும்.
வெறுப்பு எண்ணங்கள்
சுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது வெறுக்கத்தக்க எண்ணங்களுடன் வெறுப்பில் வாழ்வது உங்கள் ஆயுளை குறைக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. மனித நேயத்தை வெறுப்பவர்கள் மனிதராக வாழ தகுதியற்றவர்கள்.
MOST READ:வெறும் பூண்டை கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் தீயசக்திகளை எப்படி விரட்டலாம் தெரியுமா?
கால் மேல் கால் போட்டு அமர்வது
நீங்கள் இந்த நிலையில் உட்கார்ந்திருக்கும்போது, இடுப்பு பகுதி முன்னோக்கி உருண்டு, எங்கள் முதுகெலும்பை வளைத்து, இது கீழ் முதுகில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, சாய்வதற்கு உங்களைத் தூண்டுகிறது, இது பல இடைநிலை வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. இது ஆயுளை வெகுவாக குறைக்கும்.
குறிப்பிட்ட நாளில் உடலுறவு
கருட புராணம் குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது. கிருஷ்ணா மற்றும் சுக்லா பக்ஷாவின் சதுர்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி, அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் உறவு வைத்துக்கொள்வது பாவத்தின் உச்சமாகும்.
படுக்கும் நிலை
உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது உங்கள் ஆயுளை குறைக்கும் செயலாகும். அதேபோல தவறான திசையில் தூங்குவதும் உங்களின் ஆயுளைக் குறைக்கும். உங்கள் தலையை தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைத்து ஒருபோதும் தூங்கக்கூடாது.
இருட்டில் தூங்குவது
முற்றிலும் இருளாக இருக்கும் உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து இருளிலேயே ஒருபோதும் தூங்கக்கூடாது. நீங்கள் படுக்கையில் படுத்த பிறகுதான் விளக்குகளை அணைக்க வேண்டும். உடைந்த கட்டிலில் படுப்பது மரணத்திற்கான அறிகுறியாகும்.
கடன் வாங்குவது
உணவு, தங்குமிடம், உடைகள் மற்றும் காலணி போன்ற கடன் வாங்கிய பொருட்களைத் தக்கவைத்துக்கொள்வது, நீங்கள் கடன் வாங்கியவருடன் உங்கள் ஆயுட்காலத்தை பகிர்ந்து கொள்வதை குறிக்கிறது.
அழுக்கு கைகளுடன் எழுதுவது
சாப்பிட்டபின் அல்லது வீட்டை சுத்தம் செய்தபின் கைகளை சுத்தம் செய்யாமல் படிப்பது, எழுதுவது அல்லது பாடம் நடத்துவது போன்றவை உங்களின் ஆயுளை குறைக்கும்.
முதுகில் குத்துவது
மற்றவர்களின் முதுகில் குத்துவது, புறம் பேசுவது அவர்களைப் பற்றிய பொய்களை கூறுவது போன்றவை அவர்களின் விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும்.