Just In
- 23 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 8 உணவுகள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வாரி வழங்குமாம்... இதனால் உங்க தலையெழுத்தே மாறுமாம் தெரியுமா?
சில கலாச்சாரங்களின்படி, பருப்பின் வட்ட வடிவம் நிதி மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை உண்பதும் தானம் செய்வதும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நிதி நிலைத்தன்மையையும் தருவதாக நம்பப்படுகிறது.
நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களிடம் கடின உழைப்பு இருந்தபோதிலும் எதுவுமே உங்களுக்கு சாதகமாக செயல்படவில்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை, நிம்மதி மற்றும் சந்தோஷம் இல்லை என்று. ஆம், எனில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததுதான் காரணம். இப்படியெல்லாம் நடக்கும்போது, அதிர்ஷ்டத்தின் மீது நாம் குற்றம் சாட்டுகிறோம். அதிர்ஷ்டம் உங்கள் கடின உழைப்பை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுவது உங்களுக்கு பழமையானதாகத் தோன்றலாம். ஆனால் பழமையின் மீது நம்பிக்கை கொண்ட விசுவாசிகள் இது விதியின் விளையாட்டு என்று நம்புகிறார்கள். சரி, நீங்களும் பழமைவாதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றும் ஆற்றல் கொண்ட சில சுவாரஸ்யமான உணவுகளை நாங்கள் இங்கே பகிர்கிறோம்.
இது, சிலருக்கு முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்கள் வாழ்க்கையில் சேர்ப்பது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நீண்ட காலமாக நம்பப்படுகிறது. அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மாம்பழம்
மாம்பழம் லக்ஷ்மி தேவியுடன் தொடர்புடையது. அதனால்தான் இலைகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் பிரசாதமாக அல்லது பூஜை கலசமாக பயன்படுத்தப்படுகின்றன. வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து மாம்பழம் சாப்பிடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும் நம்பப்படுகிறது. அதன் இனிப்புச் சுவையைப் போலவே, உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். மாம்பழங்களைச் சாப்பிடுவது, பிரசாதம் செய்வது அல்லது மற்றவர்களுக்கு தானம் செய்வது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
நெய்
நெய் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து புராணங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே இது சடங்குகள், பூஜைகள், யாகம் மற்றும் நெய்யில் தீபம் ஏற்றுவது கூட செழிப்பைக் கொண்டுவருவதாகவும், வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்டுவதாகவும் நம்பப்படுகிறது.
கிராம்பு
உங்கள் பையில் சில கிராம்புகளை வைத்திருப்பது அல்லது ஒரு விசேஷ பணிக்குச் செல்லும் போது அவற்றை மென்று சாப்பிடுவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. எனவே, இனிமேல் நீங்கள் எந்த நல்ல விஷயத்திற்கு சென்றாலும் சில கிராம்புகளை எடுத்துச் செல்லுங்கள். உதாரணமாக வேலை தேடி செல்லும்போது, பெண் பார்க்க மற்றும் வீடு வாங்க இதுபோன்ற வேலைகளுக்கு செல்லும்போது, கிராம்பு எடுத்துச் செல்வது நல்லது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஒரு மாயாஜால மசாலாவாக நம்பப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் நிதி ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதோடு தொடர்புடையது. உங்கள் பணப்பையில் இலவங்கப்பட்டையை வைத்திருப்பது தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவும். மேலும், பண வரவை அதிகரிக்க உதவும்.
மிளகாய்
பல இந்திய கலாச்சாரங்களின்படி, சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தீய கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளின் விளைவுகளை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. மிளாகாய் மற்றும் எலுமிச்சையை அடிக்கடி நூலில் கட்டி வீட்டு வாசலுக்கு அருகில் வைப்பதற்கு இதுவே காரணம். மேலும், புதிதாக திருமணமானவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு என மிளகாயை சுற்றி தீயில் போட்டு திருஷ்டி கழிப்பார்கள்.
மீன்
மீன் உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் பல இந்திய கலாச்சாரங்களில் மீன் சாப்பிடுவது அல்லது வழங்குவது செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக பெங்காலி கலாச்சாரத்தின்படி, திருமணத்தின் போது மீன் பரிசளிக்கப்படுகிறது. திருமண சீரின் போது மீன் வழங்குவது மகிழ்ச்சியையும் திருமண மனநிறைவையும் தருவதாக நம்பப்படுகிறது.
பருப்பு
சில கலாச்சாரங்களின்படி, பருப்பின் வட்ட வடிவம் நிதி மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை உண்பதும் தானம் செய்வதும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நிதி நிலைத்தன்மையையும் தருவதாக நம்பப்படுகிறது.