Just In
- 1 hr ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 4 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 5 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 6 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த படத்துல முதலில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படம் 7 விலங்குகளைக் கொண்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்ததும், முதலில் உங்கள் பார்வைக்கு எந்த விலங்கு தென்படுகிறதோ, அது உங்களின் மறைக்கப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது.
தற்போது ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட் இணையத்தில் வைரலாக உள்ளது. எப்போதுமே ஒருவருக்கு தங்களைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தும் விஷயங்களை செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட். இதில் ஒரு படம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு படத்தில் பல வகையான உருவங்கள் இருக்கும். இந்த படத்தைப் பார்த்ததும் முதலில் எந்த உருவம் தெரிகிறதோ, அது ஒருவரின் மறைக்கப்பட்ட குணாதியங்களை வெளிப்படுத்தும்.
அந்த வகையில் கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படம் 7 விலங்குகளைக் கொண்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்ததும், முதலில் உங்கள் பார்வைக்கு எந்த விலங்கு தென்படுகிறதோ, அது உங்களின் மறைக்கப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது.
ஓநாய்
ஓநாய் பாதுகாப்பைக் குறிக்கிறது. இந்த விலங்கை முதலில் பார்ப்பவர்கள், விசுவாசத்தையும், பக்தியையும் அடிக்கடி மறைப்பவர்களாக இருப்பர். மேலும் மற்றவர்களுடன் மிக விரைவில் ஒன்றிணையக் கூடியவர்களாக இருப்பர். இருப்பினும், எப்போதும் இவர்கள் தங்களின் மென்மையான தன்மையை மறைத்து வைத்திருப்பார்கள்.
புலி
இந்த விலங்கை பார்த்தவர்கள், வாழ்வில் பெரிய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். இவர்கள் அவர்கள் நினைப்பதை விட வலிமையானவர்கள். இதை இவர்கள் உணர்ந்தாக வேண்டும். எனவே அடுத்த முறை பலவீனமாக உணர்ந்தால், உங்களின் ஆன்மா விலங்கான புலியை நினைவில் கொள்ளுங்கள்.
குட்டி ஆந்தை
குட்டி ஆந்தையை முதலில் கண்டவர்கள், தங்களின் உண்மையான ஆர்வத்தை மறைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புத்திசாலி. மற்றவர்கள் இவர்களை வேடிக்கையானவராக மற்றும் கத்தி பேசுபவராக நினைக்கலாம். ஆனால் இவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.
நாய்க்குட்டி
நீங்கள் நாய்க்குட்டியை முதலில் கண்டிருந்தால், நீங்கள் நன்கு காதலிக்கக்கூடியவர் என்பதை மறைத்து வைத்திருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வது கடினம் என்று நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் வெறும் அன்பு மட்டும் தான்.
நாகப்பாம்பு
இந்த விலங்கைக் கண்டவர்களிடம் உள்ள ரகசியமான குணம் என்றால், அது உயர்ந்த நம்பிக்கை மற்றும் சுய மதிப்பு தான். ஆனால் இது தெரியாமல், இவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் மீதான நம்பிக்கையில் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இனிமேல் அவ்வாறு இல்லாமல், உங்கள் மீது நம்பிக்கை கொண்டு, உங்களுக்கான சிறந்த வழக்கறிஞராக இருக்க முயலுங்கள்.
சிங்கம்
சிங்கத்தைக் கண்டவர்கள் தங்களின் கோப உணர்வை மறைத்து வைத்திருப்பார்கள். சிங்கங்கள் வலிமையானவை, ஆபத்தானவை மற்றும் இதயங்களை கர்ஜிக்கும் தன்மை கொண்டவை. பலரும் கோபத்தை கெட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் கோபம் கொள்வது எப்போதும் கெட்டதாக இருக்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவரும் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து இருக்க வேண்டியதில்லை. வெளிக்காட்ட வேண்டிய இடத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
வௌவால்
வெளவால்கள் மிகவும் இருண்ட சூழ்நிலைகளிலும் கிட்டத்தட்ட குருடாக பறக்கக்கூடியது. வௌவால் எப்படி மறைந்து இருந்து சுற்றி நடக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறதோ, அதேப் போல் இந்த விலங்கை முதலில் கண்டவர்கள் தங்களின் புலன்களைப் பயன்படுத்தி சுற்றியிருப்பவர்களை அறிந்திருப்பார்கள்.